search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி சிறப்பு பஸ்"

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 150 சிறப்பு பஸ் இயக்கப்பட்டது.
    • 3 நாட்களில் 3.50 லட்சம் பேர் பயணித்ததாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பூர் :

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வெளிமாவட்டத்தினர் சொந்த ஊர் செல்ல ஏதுவாக திருப்பூரில் இருந்து 150 சிறப்பு பஸ் இயக்கப்பட்டது. பயணிகள் வசதிக்காக பண்டிகைக்கு 3நாட்கள் முன்பே பஸ் இயக்கம் துவங்கியது. ஆனால் தீபாவளிக்கு முதல் நாள் தான் பஸ்களில் கூட்டம் அலைமோதியது.

    3 நாட்களில் 3.50 லட்சம் பேர் பயணித்ததாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சொந்தஊர் சென்றவர் திருப்பூர் திரும்ப ஏதுவாக 25 முதல், 27-ந் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    சிறப்பு பஸ் இயக்கம் மூலம் திருப்பூர் மண்டலம் 7 நாட்களில் ரூ. 64.50 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளதாக கோவை கோட்ட போக்குவரத்து துறை வணிக பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 3 நாட்கள் இயக்கப்படுகிறது
    • இருக்கைகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தகவல்

    வேலூர்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்தும் வேலூர் வழியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    வருகிற 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    வேலூரில் இருந்து சென்னை செல்லும் பஸ்கள் பூந்தமல்லி தற்காலிக பஸ்நிலையம் வரை இயக்கப்பட உள்ளது. பூந்தமல்லியில் இருந்து வேலூர் வழியாக திருப்பத்தூருக்கு 30 சிறப்பு பஸ்களும் குடியாத்தம் செல்வதற்கு 20 பஸ் இயக்கப்படுகிறது.

    வேலூரில் இருந்து பூந்தமல்லிக்கு 45, திருச்சிக்கு 10, பெங்களூருக்கு 15 ஓசூருக்கு 15, தருமபுரிக்கு 25, பூந்தமல்லியில் இருந்து வேலூர் வழியாக ஓசூருக்கு மேலும் 15 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 200 பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த சிறப்பு பஸ்களை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வேலூரில் இருந்து கன்னியாகுமரி, நெல்லை, கோவை செல்லும் பஸ்களில் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பல பஸ்களில் இருக்கைகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×