search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தீபாவளிக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கம்
    X

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தீபாவளிக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கம்

    • 3 நாட்கள் இயக்கப்படுகிறது
    • இருக்கைகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தகவல்

    வேலூர்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்தும் வேலூர் வழியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    வருகிற 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    வேலூரில் இருந்து சென்னை செல்லும் பஸ்கள் பூந்தமல்லி தற்காலிக பஸ்நிலையம் வரை இயக்கப்பட உள்ளது. பூந்தமல்லியில் இருந்து வேலூர் வழியாக திருப்பத்தூருக்கு 30 சிறப்பு பஸ்களும் குடியாத்தம் செல்வதற்கு 20 பஸ் இயக்கப்படுகிறது.

    வேலூரில் இருந்து பூந்தமல்லிக்கு 45, திருச்சிக்கு 10, பெங்களூருக்கு 15 ஓசூருக்கு 15, தருமபுரிக்கு 25, பூந்தமல்லியில் இருந்து வேலூர் வழியாக ஓசூருக்கு மேலும் 15 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 200 பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த சிறப்பு பஸ்களை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வேலூரில் இருந்து கன்னியாகுமரி, நெல்லை, கோவை செல்லும் பஸ்களில் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பல பஸ்களில் இருக்கைகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×