search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திண்பண்டங்கள்"

    • கிடைக்கும் வருமானத்தை மட்டுமே வைத்து திருப்தியுடன் வாழ்ந்து வருவதாக தெரிவித்தார்.
    • பள்ளி மாணவர்களுக்காக மலிவு விலையில் தின்பண்டங்கள் விற்பனை செய்து வருகிறார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட த்தை சேர்ந்தவர் தையல்நா யகி (வயது 60). இவர் ஆக்கூர் அரசு மேல்நிலை ப்பள்ளி வாசலில் சிறு குடிசையாக தனது கடையை தொடங்கி 30 வருடமாக நடத்தி வருகிறார்.

    ஆரம்பத்தில் 25 பைசாவுக்கு பஜ்ஜும், போண்டாவும் விற்பனை செய்துள்ளார்.

    தற்போது விண்ணை முட்டும் அளவு விலைவாசி உயர்ந்தாலும், பள்ளி மாணவர்களின் பசியை போக்கும் வகையில் ரூ.1-க்கு பஜ்ஜி போண்டாவும், 10 ரூபாய்க்கு தயிர் சாதம், புளி சாதம் எலுமிச்சை சாதமும் விற்பனை செய்து வருகிறார்.

    எப்படி இது சாத்தியம் என்று தையல்நாயகி இடம் கேட்டபோது, அரசு பள்ளியில் தற்போது ஏழை விவசாய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் மாணவிகள் மட்டுமே படித்து வருவதாகவும், படிக்கும் பிள்ளைகளுக்கு தினமும் வீட்டில் இரண்டு ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை மட்டுமே செலவுக்கு பணம் தருவார்கள்.

    மதிய நேரத்தில் அவர்கள் பெரும் செலவு செய்ய முடியாத நிலையில்லாப நோக்கம் ஏதும் இன்றி தின்பண்டங்களை விற்பனை செய்து வருவதாகவும் இதில் கிடைக்கும் வருமானம் மட்டுமே தனது வாழ்வாதாரமாக உள்ள நிலையில் இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

    இவரது கணவர் கலியபெரு மாள் சில வருடங்களுக்கு முன்பு இயற்கை எய்திய நிலையில் தனது ஒரே மகனுடன் வசித்து வருவதாகவும் வாழ்நாள் வரை யாருக்கும் பாரமில்லாமல் உழைத்து வருவதாகவும் அதே நேரம் தன்னால் முயன்ற சிறு உதவியாக படிக்கும் மாணவர்க ளுக்கு மலிவு விலையில் தின்ப ண்டங்க ளை விற்பனை செய்து வருவ தாகவும் நெகி ழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    ×