search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திட்டக்குடி"

    • திட்டக்குடி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து ஊராட்சிமன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
    • புதிய குழாய், பழைய குழாய் இரண்டிலும் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் கடந்த ஒரு வார காலமாக வழங்கப்படாமல் உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் கிராமத்தில் ஊராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டு வந்தது. கிராமப்புறங்களில் தற்போது மத்திய அரசின் புதிய ஜல் ஜீவன் இயக்கம் வாயிலாக 9 கோடி கிராமப்புற வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் வழங்கும் வகையில் தற்போது அனைத்து கிராமங்களிலும் புதிய குழாய் பதிப்பு நடைபெற்று வருகிறது. கீழ்ச்செருவாய் ஊராட்சியில் ஏற்கனவே ஊராட்சிமன்ற நீர்நிலை தேக்கதொட்டியிலிருந்து வழங்கப்பட்டு வந்த குடிநீர் தற்போது புதிய குழாயில் இணைத்து குடிநீர் வழங்க ஏற்பாடு செய்கின்றனர். ஆனால் புதிய குழாய், பழைய குழாய் இரண்டிலும் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் கடந்த ஒரு வார காலமாக வழங்கப்படாமல் உள்ளது.

    கடந்த ஒரு வார காலமாக குடிநீருக்கு சிரமப்பட்டு வந்த பொதுமக்கள் எங்களுக்கு தண்ணீர் வரவில்லை என ஊராட்சி மன்ற தலைவரிடம் கடந்த ஒரு வாரமாக பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து அப்பகுதி பெண்கள் ஒன்று சேர்ந்து இன்று காலை காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின் தொடர்ந்து திட்டக்குடி - ராமநத்தம் மாநில சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த திட்டக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ண கொடி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பொது மக்களுக்கு விரைவில் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் கலைந்து சென்றனர். மேலும் இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில் மத்திய அரசின் புதிய ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் பழுப்பு பதித்து குடிநீர் வழங்குப்படும் என தெரிவித்திருந்தனர்.

    தண்ணீர் வராததால் இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களிடம் கேட்டால் அவர்கள் முன்னுக்கும் பின்னுக்கும் முரணாக பேசிக்கொண்டு 10-க்கும் மேற்பட்ட ஆண்களை வைத்து மிரட்டுவதாகவும் நாங்கள் பெண்கள் என்பதால் எங்கள் தரப்பு ஆண்களுக்கும் அவர்களுக்கும் கைகலப்பு ஏற்படும் நிலை உருவாகி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அதிகாரிகள் தலையிட்டு சுமுகத் தீர்வு கண்டு தொடர்ந்து குடிநீர் முறையாக வழங்க கோரிக்கை விடுத்தனர்.

    • திட்டக்குடி அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி பலியானார்.
    • பொன்னுசாமி என்பவரது வயலுக்கு மேல்பகுதியில் செல்லும் மின் கம்பி அறுந்து தொங்கியது. இதனை அறியாத பாப்பாத்தி அவ்வழியே வயலில் நடந்து சென்றபோது கீழே அறுந்து தொங்கிய மின்கம்பியில் கை பட்டு மின்சாரம் தாக்கியது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த இடைச் செருவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பாத்தி (வயது 60). கூலி தொழிலாளி. திருமணம் செய்து கொள்ளாமல் தனது அக்காள், தங்கையுடன் சேர்ந்து வசித்து வருகிறார்.

    இந்நிலையில் இன்று காலை வீட்டின் அருகில் உள்ள பொன்னுசாமி என்ப வருக்கு சொந்தமான வயல்வெளி வழியாக இயற்கை உபாதை கழிக்க சென்றார். நேற்று மாலை திட்டக்குடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து.

    இதன் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவரது வயலுக்கு மேல்பகுதியில் செல்லும் மின் கம்பி அறுந்து தொங்கியது. இதனை அறியாத பாப்பாத்தி அவ்வழியே வயலில் நடந்து சென்றபோது கீழே அறுந்து தொங்கிய மின்கம்பியில் கை பட்டு மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே பாப்பாத்தி உடல் கருகி பலியானார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திட்டக்குடி போலீசார் பாப்பாத்தியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திட்ட–க்குடி அரசு ஆஸ்பத்தி–ரிக்கு அனுப்பி வைத்த–னர். மேலும் இது குறித்து திட்டக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். வயல்வெளியில் மின்சாரம் தாக்கி மூதாட்டி இறந்த சம்பவம் கிராமத்தில் சோக–த்தை ஏற்படுத்தி–யுள்ளது.

    ×