என் மலர்
நீங்கள் தேடியது "தற்காப்பு கலை பயிற்சி"
- கராத்தே, ஜூடோ, தேக்வோண்டோ, சிலம்பம் போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
- பயிற்சிகள் வாயிலாக மாணவிகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டப்படுவதுடன் அவர்களுடைய பாதுகாப்புக்கும் இது உறுதுணையாக அமைகின்றன.
சென்னை:
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையில் படிக்கக் கூடிய மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, கராத்தே, ஜூடோ, தேக்வோண்டோ, சிலம்பம் போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு அளிக்கக் கூடிய பயிற்சிகள் வாயிலாக மாணவிகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டப்படுவதுடன் அவர்களுடைய பாதுகாப்புக்கும் இது உறுதுணையாக அமைகின்றன.
அந்த வகையில் இந்த பயிற்சிகளை வழங்குவதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. 6,045 அரசு நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க ஒவ்வொரு பள்ளிக்கும் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் வீதம் 3 மாதங்களுக்கு ரூ.12 ஆயிரம் வழங்கும் வகையில் ரூ.7 கோடியே 25 லட்சத்து 40 ஆயிரம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
அதேபோல், 5,804 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ரூ.8 கோடியே 23 லட்சத்து 56 ஆயிரம் என மொத்தம் ரூ.15 கோடியே 48 லட்சத்து 96 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு ஒதுக்கப்படும் நிதி விவரம், தற்காப்பு கலை பயிற்சிகள் விவரம், பயிற்சியாளர் விவரம் ஆகியவற்றை முறையாக பராமரிக்க வேண்டும். வாரத்தில் 2 நாட்கள் வீதம் 3 மாதங்களுக்கு 24 பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். அனைத்து மாணவிகளுக்கும் இந்த தற்காப்புக் கலை பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
- பள்ளி தலைமையாசிரியர் சரவணன், பயிற்சியை தொடங்கி வைத்தார்.
- ஆசிரியர் பயிற்றுனர் பிரபாகரன் மாணவிகளை வழி நடத்தினார்.
மடத்துக்குளம் :
மடத்துக்குளம் சாலரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி நடந்தது. பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மடத்துக்குளம் சாலரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், கராத்தே பயிற்சியாளர் சந்தோஷ்குமார், மாணவிகளுக்கு நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகளை தொடங்கி உள்ளார். பெண்கள், உடல், மனம் வலிமை பெற தற்காப்பு பயிற்சி அவசியம் எனவும், மாணவிகள் தன்னம்பிக்கையோடு அனைத்து சூழ்நிலைகளை கையாளுவதற்கும் உதவும் என பயிற்சி பொறுப்பாசிரியர் புவனேஸ்வரி ஊக்கப்படுத்தினார். பள்ளி தலைமையாசிரியர் சரவணன், பயிற்சியை தொடங்கி வைத்தார். ஆசிரியர் பயிற்றுனர் பிரபாகரன் மாணவிகளை வழி நடத்தினார்.
- அமைச்சர் தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு தற்காப்பு கலைகளான கராத்தே, சிலம்பம், டேக்வாண்டோ, ஜூடோ உள்ளிட்ட தற்காப்பு கலை பயிற்சி தொடக்க விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் க.நந்தகுமார் வரவேற்று ேபசினார். கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, வில்வநாதன், அ.நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தற்காப்பு கலை பயிற்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:-
6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு ஏற்படுகின்ற பயத்தினை போக்கவும், அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் மூன்று மாத காலத்திற்கு தற்காப்பு கலை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
100 மாணவிகளுக்கு ஒரு பயிற்சியாளர் என்கின்ற விகிதம் வாரத்திற்கு இரண்டு நாட்கள் ஒரு மணி நேரம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நூறு மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளை ஒன்றாக இணைத்து அங்கேயே பயிற்சியாளரை நியமித்து மாணவிகளுக்கு தற்காப்பு கலைகள் பயிற்சி அளிக்கப்படும்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 ஒன்றிய பகுதிகளில் உள்ள 160 பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு பயிலும் 4,791 மாணவிகள் இந்த தற்காப்பு கலை பயிற்சியில் கலந்து கொள்கின்றனர்.
இதன் மூலம் மாணவிகள் மன தைரியத்துடன் எந்த ஒரு பிரச்சினைகளையும் சவால்களையும் எதிர்கொண்டு எதிர்காலத்தில் நல்ல ஒரு வீர மங்கைகளாக வளர்வதற்கு இந்த பயிற்சி அமையும்.
இவ்வாறு அவர் பேசினார்.






