search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி
    X

    ஆம்பூர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்ட தொடக்க விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டபோது எடுத்த படம்.

    6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி

    • அமைச்சர் தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு தற்காப்பு கலைகளான கராத்தே, சிலம்பம், டேக்வாண்டோ, ஜூடோ உள்ளிட்ட தற்காப்பு கலை பயிற்சி தொடக்க விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் க.நந்தகுமார் வரவேற்று ேபசினார். கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, வில்வநாதன், அ.நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தற்காப்பு கலை பயிற்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு ஏற்படுகின்ற பயத்தினை போக்கவும், அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் மூன்று மாத காலத்திற்கு தற்காப்பு கலை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

    100 மாணவிகளுக்கு ஒரு பயிற்சியாளர் என்கின்ற விகிதம் வாரத்திற்கு இரண்டு நாட்கள் ஒரு மணி நேரம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நூறு மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளை ஒன்றாக இணைத்து அங்கேயே பயிற்சியாளரை நியமித்து மாணவிகளுக்கு தற்காப்பு கலைகள் பயிற்சி அளிக்கப்படும்.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 ஒன்றிய பகுதிகளில் உள்ள 160 பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு பயிலும் 4,791 மாணவிகள் இந்த தற்காப்பு கலை பயிற்சியில் கலந்து கொள்கின்றனர்.

    இதன் மூலம் மாணவிகள் மன தைரியத்துடன் எந்த ஒரு பிரச்சினைகளையும் சவால்களையும் எதிர்கொண்டு எதிர்காலத்தில் நல்ல ஒரு வீர மங்கைகளாக வளர்வதற்கு இந்த பயிற்சி அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×