search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ் கனவு நிகழ்ச்சி"

    • தேனியில் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை சொற்பொழிவு நிகழ்ச்சி 13-ந் தேதி தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது.
    • இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ் இணை கல்வி கழகத்தின் சார்பில், கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை சொற்பொழிவு நிகழ்ச்சி 13-ந் தேதி தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.

    தமிழ்நாடு அரசு இளைய தலைமுறையினர் குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு தமிழர் மரபும், நாகரீகமும், பெண்கள் மேம்பாடு, சமூக பொருளாதார முன்னேற்றம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறந்த சொற்பொழிவாளர்களைக் கொண்டு "மாபெரும் தமிழ் கனவு"சொற்பொழிவு நிகழ்ச்சியினை நடத்திட உத்தரவிட்டு, செயல்படுத்தி வருகிறது.

    அதன்படி, தேனி மாவட்டத்தில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி, வடபுதுப்பட்டி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, போடி அரசினர் பொறியியல் கல்லூரியில் சிறந்த சொற்பொழிவாளர்களைக் கொண்டு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை சொற்பொழிவு நிகழ்வு நடத்தப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து 13-ந் தேதி தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை சொற்பொழிவு நிகழ்வில் "கல்வியால் கடந்த காரிருள்" என்னும் தலைப்பில் கவிஞர் மற்றும் எழுத்தாளர் மனுஸ்யபுத்திரன் சிறப்புரையாற்ற உள்ளார் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • தமிழ் இணைய கல்விக்கழகம் சார்பில் சிவகங்கை அரசு கல்லூரியில் தமிழ்க் கனவு நிகழ்ச்சி நடந்தது.
    • இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பங்கேற்று பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி அரங்கில் தமிழ் இணைய கல்விக்கழகம் சார்பில் தமிழ்க்கனவு நிகழ்ச்சி கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடந்தது. இதில் கலெக்டர் பேசியதாவது:-

    தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் பெருமையையும் எதிர்கால சந்ததியி னர்களாகிய நீங்கள் அறிந்து கொள்ளும் வகையில் சமூக விழிப்புணர்வையும் பொருளாதார முன்னேற்றம் குறித்து அறிந்து கொள்ளும் வகையிலும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்க்கனவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 கல்லூரிகளில் தமிழ் மரபும் அதன் நாகரீகம் குறித்தும், சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூக பொருளாதார முன்னேற்றம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, பண்டைய கால தமிழர்கள் நாகரீகத்துடன் வாழ்ந்ததற்கான அடையாளங்களை வெளிக்கொணர்கின்ற வகையில் தொல்லியல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில் நுட்பங்கள் ஆகியவற்றை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் பங்கு பெற்றுள்ள மாணவர்களுக்கு உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி புத்தகமும், தமிழ் பெருமிதம் குறித்த குறிப்பேடும் இங்கு வழங்கப்பட்டுள்ளது.

    இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு, பண்பாட்டிற்கும், எதிர்காலத்திற்கும் வழிகாட்டிடும் வகையில், அடிப்படையாகத் திகழும் இந்நிகழ்ச்சியின் மூலம் சிறந்த சொற்பொழி வாளர்கள் வாயிலாக எடுத்துரைக்கப்படும் கருத்துக்களை உள்வாங்கி, மாபெரும் தமிழ் கனவினை நனவாக்குகின்ற வகையில் மாணவர்கள் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு, தங்களை சார்ந்தவர்களும் எடுத்துரைத்து, பயன்பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் நாகராஜன், சொற்பொழிவாளர்கள் ராஜா, யாழினி (மருத்துவர்), சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் துரையரசன் மற்றும் ஆசிரியர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.
    • சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் சொற்பொழிவாற்றினார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தனியார் கல்லூரியில் தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் இருபால் கல்லூரி மாணவர்கள் இடையே தமிழர்களின் மரபையும், தமிழ்ப் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் "மாபெரும் தமிழ்க் கனவு" என்ற பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

    தமிழகம் முழுவதும் உள்ள 100 கல்லூரிகளில் தமிழர் மரபும் - நாகரீகமும், தமிழகத்தில் சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூகப் பொருளாதார முன்னேற்றம், திசைதோறும் திராவிடம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல தலைப்புகளின் கீழ் சொற்பொழிவுகள் நடத்தப்பட்டு வருகின்றது.

    மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் 1000 மாணவர்களை கொண்டு சொற்பொழிவுகள் "தமிழர் அறம்" என்ற தலைப்பின் கீழ் காட்டு மன்னார் கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் சொற்பொழிவாற்றினார்.

    "கல்வி கடந்து வந்த பாதை" என்ற தலைப்பின் கீழ் பேராசிரியர் பார்த்தி பராஜா சொற்பொழிவாற்றினார். இதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவ, மாணவியர்கள் "கல்வி கடந்து வந்த பாதை" என்ற தலைப்பின் கீழ் பல்வேறு வகையான கேள்விகளை கேட்டனர்.

    அதற்கு மாணவர்களை ஒழுக்கத்துடன் கூடிய கல்வியை நீங்கள் சிறப்பாக கற்க வேண்டும்,

    நெறிமுறைபடுத்தும் கல்வியை கற்க வேண்டும், பல்வேறு எடுத்துக்காட்டு களுக்கு சாதனையாளராக வர வேண்டும் என்ற அடிப்படையில் கல்வியை கற்க வேண்டும், ராமாயனம் மகாபாரதம் ஐம்பெறும் காப்பியங்கள் போன்ற இதிகாசங்களுக்கு நீங்கள் சிறந்து விளங்க வேண்டும் என்ற அடிபடையில் பதில் உரையாற்றினார்.

    மேலும், சொற்பொழிவு களில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி, தமிழர் பெருமிதம் குறித்த குறிப்பேடுகள் வழங்கப்பட்டன.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவிதா, நல்லம்பள்ளி வருவாய் வட்டாட்சியர் ஆறுமுகம், ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவர் மணிவண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடந்தது.
    • மாணவ-மாணவிகள் பண்பாட்டின் பெருமைகளை அறிய வைக்கும்

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக அரங்கில் தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது. இதில் கலெக்டர் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் தமிழ் இணைய கல்விக்கழகம் சார்பில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி சிறப்பாக தொடங்கப்பட்டுள்ளது.

    நமது பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைகளாகிய கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்துவது என்பது ஆரோக்கியமான எதிர்கால சமூக கட்டமைப்பின் ஒரு முக்கிய பகுதியாகும்.

    இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 கல்லூரிகளில் தமிழ் மரபும், அதன் நாகரீகம் குறித்தும் சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூக பொருளாதார முன்னேற்றம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, பண்டையகால தமிழர்கள் நாகரிகத்துடன் வாழ்ந்ததற்கான அடை யாளங்களை வெளிக் கொண்டு வரும் வகையில் தொல்லியல் ஆய்வுகள் அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, தொழில்

    முனைவுக்கான முன்னெடுப்புகள் மற்றும் வாய்ப்புகள், கல்விப்புரட்சி மற்றும் அதன் திட்டங்கள், அதனை செயல்படுத்தும் முறைகள் ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு திறமை மிக்க சொற்பொழிவாளர்களை கொண்ட மாபெரும் தமிழ் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி இங்கு நடைபெற்று வருவது நம் அனைவருக்கும் பெருமைக்குரிய ஒன்றாகும். இதில் பங்கு பெற்றுள்ள மாணவர்களுக்கு உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி புத்தகமும், தமிழ் பெருமிதம் குறித்த குறிப்பேடும் இங்கு வழங்கப்பட உள்ளது.

    இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு பண்பாட்டிற்கும் எதிர்காலத்திற்கும் வழிகாட்டிடும் வகையில் அடிப்படையாகத் திகழும் நிகழ்ச்சியின் மூலம் சிறந்த சொற்பொழிவாளர்கள் வாயிலாகஎடுத்துரைக்கப்படும் கருத்துக்களை உள்வாங்கி மாபெரும் தமிழ் கனவினை நனவாக்குகின்ற வகையில் மாணவர்கள் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு தங்களை சார்ந்தவர்களும் எடுத்துரைத்து பயன்பெறசெய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி தமிழ் இணைய கல்விக்கழக ஆய்வு வளமையர் கே.டி.காந்திராஜன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, சொற்பொழிவாளர்கள் பேராசிரியர் அருணன் மற்றும் சிவராஜா, ராம நாதன் காரைக்குடி வட்டாட்சியர் தங்கமணி காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தமிழ் துறைத்தலைவர் முருகேசன் மற்றும் ஆசிரியர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×