search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் பஸ் மோதல்"

    அறந்தாங்கி அருகே பெற்றோருக்கு சாப்பாடு கொண்டு சென்ற தந்தை-மகன் தனியார் பஸ் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள கீழையூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). இவருக்கு சொந்தமான விவசாய நிலம் மற்றும் தோப்பு பட்டினச்சேரி பகுதியில் உள்ளது. அங்கு ராஜேந்திரனின் பெற்றோர் தங்கி விவசாயத்தை கவனித்து வருகிறார்கள்.

    தினமும் அவர்களுக்கு ராஜேந்திரன் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் சாப்பாடு கொண்டு சென்று கொடுத்துவிட்டு  வருவது வழக்கம். அதேபோல் நேற்று இரவு உணவு கொடுப்பதற்காக ராஜேந்திரன், தனது மகன் விக்னேஸ்வரன் (22) என்பவருடன் கீழையூரில் இருந்து பட்டினச்சேரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது எதிரே அறந்தாங்கியில் இருந்து பெங்களூர் நோக்கி தனியார் ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக அந்த பஸ் மேட்டார்சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தந்தை, மகன் இருவரும் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    தகவல் அறிந்ததும் அங்கு வந்த அறந்தாங்கி போலீசார் பலியானவர்களின்  உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு  அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெற்றோருக்கு சாப்பாடு கொண்டு சென்ற தந்தை, மகன் விபத்தில் பலியானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    மன்னார்குடி அருகே தனியார் பஸ்சும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் பலியானார்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் லோகேஸ்வரன் (வயது 19). அதே பகுதியைச் சேர்ந்தவர் அபினேஸ் (17). இருவரும் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று இரவு இருவரும் வேலை முடிந்து பட்டுக்கோட்டையில் இருந்து மன்னார்குடிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது ருக்மணி பாளையம் என்ற இடத்தில் பட்டுக்கோட்டையை நோக்கி வந்த ஒரு தனியார் பஸ்சும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த லோகேஸ்வரன் மற்றும் அபினேஸ் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த லோகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அபினேஸ் பலத்த காயம் அடைந்தார்.

    இதை பார்த்த அக்கம் பக்கதினர் மன்னார்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அபினேசை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். லோகேஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×