search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மன்னார்குடி அருகே தனியார் பஸ் மோதி பெட்ரோல் பங்க் ஊழியர் பலி
    X

    மன்னார்குடி அருகே தனியார் பஸ் மோதி பெட்ரோல் பங்க் ஊழியர் பலி

    மன்னார்குடி அருகே தனியார் பஸ்சும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் பலியானார்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் லோகேஸ்வரன் (வயது 19). அதே பகுதியைச் சேர்ந்தவர் அபினேஸ் (17). இருவரும் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று இரவு இருவரும் வேலை முடிந்து பட்டுக்கோட்டையில் இருந்து மன்னார்குடிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது ருக்மணி பாளையம் என்ற இடத்தில் பட்டுக்கோட்டையை நோக்கி வந்த ஒரு தனியார் பஸ்சும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த லோகேஸ்வரன் மற்றும் அபினேஸ் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த லோகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அபினேஸ் பலத்த காயம் அடைந்தார்.

    இதை பார்த்த அக்கம் பக்கதினர் மன்னார்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அபினேசை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். லோகேஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×