search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரைவிங் லைசென்சு"

    ஏராளமான பாதுகாப்பு அம்சங்களுடன் நாடு முழுவதும் ஒரே மாதிரியான டிரைவிங் லைசென்சு, ஆர்.சி. புத்தகம் அடுத்த ஆண்டு ஜூலை முதல் வழங்கப்படுகிறது. #DrivingLicences #RCBook
    புதுடெல்லி:

    போக்குவரத்து துறையில் நாடு முழுவதும் ஒரே சீரான நடைமுறைகள் இருக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    அதன்படி டிரைவிங் லைசென்சு, வாகன ஆர்.சி. புத்தகம் ஆகியவை நாடு முழுவதும் ஒரே மாதிரியாக அறிமுகப்படுத்த ஆலோசிக்கப்பட்டது.

    தற்போது ஒவ்வொரு மாநிலமும் அவர்கள் வகுத்துள்ள விதிகள்படி டிரைவிங் லைசென்சு, வாகன ஆர்.சி. புத்தகங்களை வழங்கி வருகிறார்கள்.

    இனி, மத்திய அரசு நாடு முழுவதும் ஒரே மாதிரியான போக்குவரத்து விதிகளை அறிமுகப்படுத்துகிறது. அதன் அடிப்படையில் டிரைவிங் லைசென்சு, வாகன ஆர்.சி. புத்தகம் வழங்கப்படும்.

    தற்போது நாடு முழுவதும் தினமும் 32 ஆயிரம் டிரைவிங் லைசென்சு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் 43 ஆயிரம் வாகனங்கள் பதிவு அல்லது மறுபதிவு செய்யப்பட்டு ஆர்.சி.புத்தகம் வழங்கப்படுகிறது.

    இவை அனைத்தும் ஜூலை மாதம் முதல் ஒரே மாதிரியாக வழங்கப்படும்.


    டிரைவிங் லைசென்சு ஏற்கனவே ஏ.டி.எம் கார்டு வடிவில் வழங்கப்படுகிறது. இதேபோல் இனி ஆர்.சி. புத்தகமும் ஏ.டி.எம். கார்டு வடிவில்தான் இருக்கும்.

    பாதுகாப்பு கருதியும், போலி கார்டுகள் தயாரிக்காமல் இருக்கவும் ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் இந்த கார்டில் இடம்பெறும்.

    பாதுகாப்பான கொய் லோச் அச்சு தொழில் நுட்பம், மைக்ரோ பிரிண்டிங், மைக்ரோ கோடுகள், ஹாலோகிராம், வாட்டர் மார்க் போன்ற தொழில்நுட்பங்கள் அதில் புகுத்தப்பட்டு இருக்கும்.

    இந்த கார்டு நீலம் கலந்த ஊதா கலரில் அச்சிடப்படும். அதில் மைக்ரோ சிப் ஒன்று இணைக்கப்பட்டு இருக்கும். அதில், லைசென்சு விவரம் மற்றும் ஆர்.சி. புத்தகம் தொடர்பான அனைத்து விவரங்களும் இடம் பெறும்.

    லைசென்சில் ரத்த குரூப், அவர் உடல் தானம் செய்திருந்தால் அதற்கான தகவல் என எல்லா விவரங்களும் அதில் இருக்கும்.

    ஆர்.சி. புத்தகத்தில் வாகனம் விற்கப்பட்ட நாள், தகுதி நாள், வாகன பிரிவு, வர்த்தக பயன்பாட்டுக்கா, சொந்த பயன்பாட்டுக்கா என்ற விவரம், வாகன ஜேசிஸ் நம்பர், என்ஜின் நம்பர், எரிபொருள் புகை வெளிப்படும் அளவு என அனைத்து விவரங்களும் இடம்பெறும்.

    லைசென்சு மற்றும் ஆர்.சி. புத்தகத்தை எந்த இடத்தில் வைத்து பரிசோதித்தாலும் உடனடியாக தகவல் கிடைக்கும் வகையில் அனைத்து விவரங்களும் அதில் பதிவு செய்யப்பட்டு இருக்கும்.

    எனவே, போலீசாரோ அல்லது போக்குவரத்து துறை அதிகாரிகளோ சோதனையிடும் போது அடுத்த வினாடியே டிரைவிங் லைசென்சு ஆர்.சி. புத்தகம் பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.

    ஏற்கனவே பழைய டிரைவிங் லைசென்சு, ஆர்.சி. புத்தகம் வைத்திருப்பவர்கள் புதிய முறையில் புதுப்பித்து கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    இது சம்பந்தமான புதிய கார்டுகள் வழங்குவதற்காக கூடுதலாக 18 ரூபயில் இருந்து 20 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும்.

    ஏ.டி.எம். கார்டு வடிவில் இவை இருப்பதால் எங்கு வேண்டுமானாலும் எளிதாக எடுத்து செல்லும் வகையில் அவை அமைந்து இருக்கும். #DrivingLicences #RCBook
    டிரைவிங் லைசென்சு, ஆர்.சி.புத்தகம் போன்றவற்றை ஸ்மார்ட் கார்டு வடிவில் வழங்க போக்குவரத்து துறை புதிய திட்டத்தை மேற்கொண்டுள்ளது. இந்த திட்டம் 2 மாதத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. #DrivingLicence #Tamilnadu
    சென்னை:

    போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்களையும், வாகன உரிமையாளர்களையும் முறைப்படுத்தும் நடவடிக்கையை தமிழக போக்குவரத்துதுறை மேற்கொண்டு வருகிறது.

    சாலை விபத்துகளை குறைக்கவும், விதிகளை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் போக்குவரத்து துறை முழுவதும் கணினிமயமாக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் சாலை போக்குவரத்தை ஒருங்கிணைக்கும் வகையில் பல்வேறு தொழில்நுட்பங்கள் படிப்படியாக மேற்கொள்ளப்படுகிறது.

    டிரைவிங் லைசென்சு, ஆர்.சி.புத்தகம் போன்றவற்றை ஸ்மார்ட் கார்டு வடிவில் வழங்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.

    இதுவரையில் காகிதமாக பயன்படுத்தப்பட்டு வந்த இந்த 2 முக்கிய ஆவணங்களும் இன்னும் ஓரிரு மாதங்களில் கிரெடிட் கார்டு போன்று கையில் தழுவ உள்ளது.

    கையடக்க இந்த ஸ்மார்ட் கார்டில் வாகனங்கள் குறித்த அனைத்து தகவல்கள் மட்டுமின்றி, அதன் உரிமையாளர் குறித்த முழு விவரங்களும் இடம் பெறும்.

    “லைசென்சு” சஸ்பெண்டு செய்யப்பட்டது, அபராதம் விதிக்கப்பட்டது குறித்த தகவல்களும் குறிப்பிடப்பட்டு இருக்கும். வாகனங்களை புதுப்பிக்கும்போது இக்கார்டினை கொண்டு வந்தால் போதுமானது. அதில் உள்ள ‘ஜிப்’ மூலம் அந்த வாகனத்தின் ஆயுட் காலம் புதுப்பிக்க வேண்டிய காலம் போன்றவற்றை தெரிந்து கொள்ள முடியும்.



    விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஸ்மார்ட் கார்டு குறித்து போக்குவரத்து ஆணையர் சமயமூர்த்தி கூறியதாவது:-

    டிரைவிங் லைசென்சுக்கு ஒரு ஸ்மார்ட் கார்டும். பதிவு ஆவண சான்றிதழுக்கு (ஆர்.சி.) ஒரு ஸ்மார்ட் கார்டும் வழங்க திட்டமிட்டுள்ளோம்.

    இந்த கார்டில் எல்லா தகவல்களும் இடம் பெறும். ‘பார்கோடு’, புகைப்படம் போன்றவை கார்டில் இடம்பெறும். பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த இந்த ஸ்மார்ட் கார்டை வட்டார போக்குவரத்து அலுவலர்களும் போலீசாரும் ஆய்வு செய்யலாம்.

    ‘பார்கோடினை’ பார்த்தாலே வாகனங்கள் குறித்தும் உரிமையாளர் பற்றிய தகவல்களும் தெரியவரும்.

    இனி புதிதாக டிரைவிங் லைசென்சு மற்றும் வாகனங்கள் பதிவு செய்யக் கூடியவர்கள் நவீன ஸ்மார்ட் கார்டினை பெற முடியும். ஏற்கனவே பழைய முறையில் ஆவணங்களை வைத்திருப்பவர்களும் இதற்கான கட்டணம் செலுத்தி புதிய கார்டினை பெறலாம்.

    நாடு முழுவதும் இந்த ஸ்மார்ட் கார்டினை பயன்படுத்தலாம். முறைகேடு மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை எளிதாக அடையாளம் காண முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார். #DrivingLicence #Tamilnadu
    பயணத்துக்கான அடையாள அட்டையாக டிஜிட்டல் ஆதார் மற்றும் டிரைவிங் லைசென்சை காட்டி பொதுமக்கள் பயணிக்கலாம் என ரெயில்வே அறிவித்து உள்ளது. #Railway #DigigalAadhaar
    புதுடெல்லி:

    ரெயில் பயணிகள் மத்திய-மாநில அரசுகள் வழங்கிய அசல் அடையாள அட்டைகளில் ஒன்றை பயணத்தின் போது வைத்திருக்க வேண்டும். அதன்படி ஆதார், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட அட்டைகள் ஏற்கப்படுகிறது. இதனால் பயணிகளின் ஒரிஜினல் அட்டைகள் சில நேரங்களில் தொலைந்து விடும் வாய்ப்பு ஏற்படுகிறது.

    எனவே இதை தடுப்பதற்காக டிஜிட்டல் ஆதார் மற்றும் டிரைவிங் லைசென்சை காட்டி பயணம் செய்யலாம் என ரெயில்வே அறிவித்து உள்ளது. மோடி அரசின் டிஜிட்டல் இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக வழங்கப்பட்ட இணையபெட்டகம் (டிஜிலாக்கர்) செயலியில் சேமிக்கப்பட்டு உள்ள டிஜிட்டல் ஆதார் மற்றும் டிரைவிங் லைசென்சை காட்டி பொதுமக்கள் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக அனைத்து மண்டல முதன்மை தலைமை வணிக மேலாளர்களுக்கு ரெயில்வேத்துறை கடிதம் எழுதியுள்ளது. அதில், ‘டிஜிலாக்கர் கணக்கில் ‘வழங்கப்பட்ட ஆவணங்கள்’ பிரிவில் உள்ள டிஜிட்டல் ஆதார் மற்றும் டிரைவிங் லைசென்சின் மென்நகல்களை ஒரு பயணி காட்டினால், அதை ஆதாரமாக ஏற்றுக்கொள்ளலாம். அதே நேரம் ‘பதிவேற்றப்பட்ட ஆவணங்கள்’ பிரிவில் இருக்கும் ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது’ என கூறப்பட்டு உள்ளது.  #Railway #DigigalAadhaar #tamilnews 
    ×