search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ்"

    • வயது முதிர்வு மற்றும் நோய் தாக்குதல் காரணமாக ஓய்வூதியர்கள் தங்கள் உயிர்வாழ் சான்றிதழை நேடியாக சென்று சமர்ப்பி க்க பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
    • இதனை தவிர்க்க இந்தியா போஸ்ட் பேமன்ஸ் வங்கி மூலம் பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி உயிர்வாழ் சான்று வீடுக ளுக்கே சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது.

    தேனி:

    தமிழக அரசு ஓய்வூதி யர்கள், குடும்ப ஓய்வூதி யர்கள் ஆகியோர் உயிர்வாழ் சாற்றிதழ் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி தேனி மாவட்ட த்தில் 800 பேர் இந்த சான்றிதழை சமர்ப்பிக்காமல் உள்ளனர்.

    வயது முதிர்வு மற்றும் நோய் தாக்குதல் காரணமாக ஓய்வூதியர்கள் தங்கள் உயிர்வாழ் சான்றிதழை நேடியாக சென்று சமர்ப்பி க்க பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

    இதனை தவிர்க்க இந்தியா போஸ்ட் பேமன்ஸ் வங்கி மூலம் பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி உயிர்வாழ் சான்று வீடுக ளுக்கே சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது. இதற்கு கட்டணம் ரூ.70 என நிர்ணயிக்கப்பட்டு ள்ளது. தங்கள் வீட்டிற்கு வரும் தபால்காரரிடம் ஆதார் கார்டு, செல்போன் எண், பி.பி.ஓ.எண்., ஓய்வூதிய வங்கி கணக்கு விபரங்கள் ஆகியவற்றை தெரிவித்து தங்களது கைவிரல் ரேகையை பதிவு செய்தால் சில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்கப்படும்.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக செல்போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனங்களும் வழங்க ப்பட்டுள்ளன. எனவே ஓய்வூதியதாரர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு தபால் கோட்ட அதிகாரி தெரி வித்துள்ளார்.

    • ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் பகுதிக்கான தபால்காரர்கள் மூலம் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.
    • தேசிய அளவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தபால்காரர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கருணாகரபாபு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் வரும் நவம்பர் 1-ந் தேதி முதல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பித்து வருகின்றனர். ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் பகுதிக்கான தபால்காரர்கள் மூலம் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். இதற்காக ரூ.70 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    தபால்காரரிடம் தங்களது ஆதார் எண், மொபைல் எண், ஓய்வூதிய கணக்கு விவரம், பி.பி.ஓ.எண் ஆகியவற்றை வழங்கி, கைவிரல் ரேகை பதிவு செய்தால் சில நிமிடங்களில் டிஜிட்டல் உயர்வால் சான்றிதழை சமர்ப்பித்து விடலாம்.

    அதேபோல் தமிழக அரசுடன் அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் மேமென்ட்ஸ் பாங்க் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு கடந்த ஜூலை மாதம் முதல் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி வரை 1.60 லட்சம் பேருக்கு மேல் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் தபால்காரர் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

    தேசிய அளவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தபால்காரர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சேவையை ஓய்வூதி யதாரர்கள் பயன்படுத்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது
    • ரூ.70 தபால்காரரிடம் செலுத்தி இந்த வசதியினை பெற்றுக் கொள்ளலாம்.

    திருவண்ணாமலை:

    மாநில அரசு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை தங்களின் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் தபால் காரர்கள் மூலம் தங்கள் வீட்டு வாசலிலேயே சமர்ப்பிப்பதற்கு இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியும், தமிழக அரசும் இணைந்து ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு உள்ளது.

    இதன் மூலம் மாநில அரசு ஓய்வூதியம் பெறுபவர்கள் எந்தவித சிரமும் இன்றி தங்களின் உயிர் வாழ் சான்றிதழை டிஜிட்டல் முறையில் அரசுக்கு சமர்பிக்கலாம்.

    இதற்கு ஓய்வூதியதாரர்கள் சேவை கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்தி இந்த வசதியினை பெற்றுக் கொள்ளலாம். இந்த சேவை பெறுவதற்கு ஓய்வூதியதாரர்கள் ஆதார் நகல், மொபைல் எண், பி.பி.ஓ. எண், ஓய்வூதிய கணக்கு விபரங்கள் ஆகியவற்றை தபால்காரரிடம் சமர்பிக்க வேண்டும்.

    பின்னர் கை விரல் ரேகை பதிவு செய்தால் ஒரு சில நிமிடங்களின் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை எளிதில் சமர்ப்பிக்க முடியும்.

    மேலும் கொரோனா தொற்று நோய் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக உயிர் வாழ் சான்றிதழ் சமர்ப்பிப்பதில் இருந்து மாநில அரசு விலக்கு அளித்திருந்த நிலையில் இந்த ஆண்டு சுமார் 7 லட்சத்து 15 ஆயிரத்து 761 மாநில அரசு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் வருகிற செப்டம்பர் மாத்திற்குள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கும் படி ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    எனவே ஓய்வூதியதாரர்கள் அஞ்சல் துறையால் வழங்கப்படும் இந்த சேவையை பயன்படுத்தி பயன் பெறலாம்.

    இந்த தகவலை திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஆர்.அமுதா தெரிவித்து உள்ளார்.

    ×