search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Digital survival certificate for"

    • ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் பகுதிக்கான தபால்காரர்கள் மூலம் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.
    • தேசிய அளவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தபால்காரர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கருணாகரபாபு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் வரும் நவம்பர் 1-ந் தேதி முதல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பித்து வருகின்றனர். ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் பகுதிக்கான தபால்காரர்கள் மூலம் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். இதற்காக ரூ.70 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    தபால்காரரிடம் தங்களது ஆதார் எண், மொபைல் எண், ஓய்வூதிய கணக்கு விவரம், பி.பி.ஓ.எண் ஆகியவற்றை வழங்கி, கைவிரல் ரேகை பதிவு செய்தால் சில நிமிடங்களில் டிஜிட்டல் உயர்வால் சான்றிதழை சமர்ப்பித்து விடலாம்.

    அதேபோல் தமிழக அரசுடன் அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் மேமென்ட்ஸ் பாங்க் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு கடந்த ஜூலை மாதம் முதல் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி வரை 1.60 லட்சம் பேருக்கு மேல் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் தபால்காரர் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

    தேசிய அளவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தபால்காரர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சேவையை ஓய்வூதி யதாரர்கள் பயன்படுத்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    ×