search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி.ஐ.ஜி ஆய்வு"

    • வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துசாமி தகவல்
    • கயிறுகள் மூலம் மீட்க நடவடிக்கை

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி உட்கோட்டத்தில் உள்ள ஆரணி டவுன், கண்ணமங்கலம், களம்பூர், சந்தவாசல் உள்ளிட்டவை களில் உள்ள வழக்கு சம்பந்தமாக கோப்புகளை வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துசாமி திடீர் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    மழைகாலங்களில் புயல் காரணமாக திருவண்ணா மலை மாவட்டத்தில் உள்ள சுமார் 153 ஏரி, குளங்களை தலைமை காவலர் தலைமையில் 4 பேர் கொண்ட குழு மூலம் கண்காணித்து வருகின்றோம்.

    உடையும் அபாயம் உள்ள ஏரி குளங்கள் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு பாதுகாக்க கயிறுகள் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்க தயார் நிலையில் உள்ளது. ஆரணி நகருக்குள் கனரக வாகனங்கள் செல்லாமல் பைபாஸில் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளபடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் டி.எஸ்.பி ரவிசந்திரன் இன்ஸ்பெ க்டர்கள் ராஜங்கம், சுப்பிரமணியன், மகாலட்சுமி, உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று காலை சேலம் சரக டி.ஐ.ஜி பிரவீன் குமார் அபினவ் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.
    • அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ், ஏ.டி.எஸ்.பி.க்கள் கென்னடி மற்றும் ராஜ காளீஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று காலை சேலம் சரக டி.ஐ.ஜி பிரவீன் குமார் அபினவ் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ், ஏ.டி.எஸ்.பி.க்கள் கென்னடி மற்றும் ராஜ காளீஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள தடைய அறிவியல் பிரிவு, மாவட்ட குற்ற ஆவண பாதுகாப்பு பிரிவு, தனிப்பிரிவு ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார். மாவட்டத்தில் பல்வேறு தற்கொலை வழக்குகளை, போலீசார் கொலை வழக்குகளாக கருதி விசாரணை மேற்கொள்ளும்போது, தடைய அறிவியல் பிரிவு சம்பவ இடங்களில் சேகரித்த பொருட்களின் ஆய்வு அடிப்படையில் தற்கொலை என்பதை உறுதி செய்து கொடுத்துள்ளதை அறிந்த டி.ஐ.ஜி அந்த பிரிவில் உள்ளவர்களை பாராட்டினார்.

    மேலும் தனிப்பிரிவு போலீசார், மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அசம்பாவித சம்பவங்கள் நடக்கப் போகும் முன்பே தனிப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல்களை தெரிவித்ததை சுட்டிக்காட்டி பாராட்டிய டி.ஐ.ஜி, மேலும் சிறப்பாக பணிபுரிய அறிவுறுத்தினார். மாவட்ட குற்ற ஆவண பாதுகாப்பு பிரிவையும் ஆய்வு மேற்கொண்ட டி.ஐ.ஜி பிரவீன் குமார் அபினவ், ஆவணங்களை முறைப்படுத்துவது குறித்து அறிவுரைகளை வழங்கினார்.

    இன்று காலையும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆய்வு பணிகளை டி.ஐ.ஜி பிரவீன் குமார் அபினவ் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

    • பா.ஜ.க. அலுவலகம் மீதுபெட்ரோல் குண்டு வீசி தாக்கப்பட்டது.
    • போலீசார் இரவு முழுவதும்அதிரடியாக வாகன சோதனை நடந்து வருகிறது.

    கடலூர்:

    நாடு முழுவதும் பல இடங்களில் பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அலுவலகம் சோதனை நடத்தப்பட்டு பலர் கைது செய்யப்பட்டு டெல்லி கொண்டு செல்லப்ப ட்டனர். இதனைதொடர்ந்து கோவையில் பா.ஜ.க. அலுவலகம் மீதுபெட்ரோல் குண்டு வீசி தாக்கப்பட்டது. இந்த சம்பவங்களை தொடர்ந்து கடலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு இரவு முழுவதும் அதிரடியாக வாகன சோதனை நடந்து வருகிறது. சென்னையில் இருந்து தஞ்சை செல்லும் வாகனங்கள், புதுவையில் இருந்து பண்ருட்டி வழியாக சேலம் செல்லும் வாகனங்கள், கடலூர் விழுப்புரம் பகுதி யில் இருந்து வந்த அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்தனர்.

    இந்த வாகன சோதனை களை பண்ருட்டியில் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன் ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து நெல்லிக்குப்பம் கடலூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று இரவு ரோந்து பணி மற்றும் வாகன சோதனைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, இன்ஸ்பெக்டர் நந்த குமார், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பத்மநாப பரமேஸ்வரன் மற்றும் போலீசார் உடைந்தனர்.

    ×