search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெயானந்த்"

    திவாகரனின் மகன் ஜெயானந்த் டெல்லியில் மத்திய மந்திரி பியூஷ் கோயலை சந்தித்துப் பேசினார். கூட்டணி தொடர்பாக இருவரும் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. #JeyanandhDhivakaran #PiyushGoyal
    சென்னை:

    ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அ.தி.மு.க.வில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. சசிகலா குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டனர்.

    சசிகலாவின் உறவினரான தினகரன் அ.ம.மு.க. என்ற பெயரில் கட்சி தொடங்கினார். சசிகலா சகோதரர் திவாகரன் அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சி நடத்தி வருகிறார். அவர் தினகரனை விமர்சித்து பேட்டி அளித்து வந்தார். இதனால் அவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்ப்பார் என்றும் கூறப்பட்டது.

    இந்த நிலையில் திவாகரனின் மகன் ஜெயானந்த் டெல்லியில் மத்திய மந்திரி பியூஷ் கோயலை சந்தித்துப் பேசினார். இவர்தான் பாராளுமன்ற தேர்தலுக்கான பா.ஜனதா பொறுப்பாளராக உள்ளார். கூட்டணி தொடர்பாக இருவரும் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த சந்திப்புக்குப்பின் ஜெயானந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கூட்டணி குறித்து மத்திய மந்திரி பியூஷ் கோயலை சந்தித்துப் பேசினேன். அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி அமைவது 90 சதவீதம் உறுதி ஆகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

    தமிழகத்தில் மீத்தேன் வாயு திட்டம் உள்ளிட்ட விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த திட்டத்தையும் நிறைவேற்றக்கூடாது என்று அவரிடம் எடுத்துக் கூறினேன். தமிழக விவசாயிகள் பாதிப்பு அடையும் எந்த திட்டமும் நிறைவேற்றப்படாது என்று வாக்குறுதி அளித்தார்.

    இவ்வாறு ஜெயானந்த் கூறினார்.

    இதற்கிடையே அ.தி.மு.க. அணிகளை இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாகவும் மத்திய மந்திரி பியூஷ் கோயலுடன் ஜெயானந்த் பேசியதாக தெரிய வருகிறது.

    இதுபற்றி ஜெயானந்திடம் கேட்டபோது, “அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி தமிழகத்தில் அமையும். ஜெயலலிதா இருந்தபோது இருந்ததைப் போன்ற வலிமையான ஒருங்கிணைந்த அ.தி.மு.க. மீண்டும் உருவாகும். அதில் தினகரனை தவிர்த்து அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்த அனைவரும் மீண்டும் கட்சியில் இணைவார்கள். அ.தி.மு.க.வுடன் முறைப்படி இணைவது குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அது நடைபெறும் என்றார். #JeyanandhDhivakaran #PiyushGoyal

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த போது, அறைக்கு வெளியே இருந்து கண்ணாடி வழியாக அவரை பார்த்ததாக திவாகரன் மகன் ஜெயானந்த் தெரிவித்துள்ளார். #JayalalithaaDeathProbe
    சென்னை:

    அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சர்ச்சைகள் இன்று வரை நீடித்தவண்ணம் இருக்கின்றன. அவரது மரணம் இயற்கையானது அல்ல என்று எழுந்த புகாரை விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

    ஜெயலலிதாவுடன் தொடர்புடைய அனைவரையும் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. அதன்படி, சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். அதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஜெயலலிதா மரணம் தொடர்பாக தன்னிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

    மேலும், மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட இரவு, சிகிச்சைக்குப் பின் கண்விழித்தபோது, அறைக்கு வெளியே இருந்து கண்ணாடி வழியாக அவரை பார்த்ததாகவும் ஜெயானந்த் தெரிவித்தார். #JayalalithaaDeathProbe
    ×