search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜவுளி வியாபாரி"

    • வீட்டில் யாரும் இல்லை.
    • வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த துணிமணிகள் கலைந்து கிடந்துள்ளன.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் நடேசன் நகர் பகுதியில் வசித்து வருபவர் ஈஸ்வரமூர்த்தி (வயது 35). இவர் ஜவுளி வியாபாரம் செய்து வருகின்றார். இவர் நேற்று முன்தினம் 2-ந் தேதி இரவு இவரது தாயார் சீதாலட்சுமிக்கு கரூரில் உள்ள பல் மருத்துவமனையில் பல் அறுவை சிகிச்சை நடந்ததால் கரூர் சென்று விட்டார்.ஈஸ்வரமூர்த்தியின் மனைவி சத்திய பிரியங்கா அவரது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். வீட்டில் யாரும் இல்லை.

    நேற்று காலை ஈஸ்வரமூர்த்தி வீட்டின் அருகில் வேலை செய்யும் எலக்ட்ரீஷியன்கள், ஈஸ்வரமூர்த்தி வீட்டை பார்த்துள்ளனர். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த துணிமணிகள் கலைந்து கிடந்துள்ளன. இதுகுறித்து எலக்ட்ரீஷியன்கள் ஈஸ்வரமூர்த்திக்கு போன் மூலம் தகவல் கொடுத்துள்ளனர். வீட்டிற்கு வந்து பார்த்த போது பீரோவில் இருந்த துணிமணிகள் கலைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பணம் மற்றும் செயின், தோடு, கொடி, மோதிரம் ஆகியவை சேர்த்து மொத்தம் 20 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருப்பூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகைகளை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ரமேஷ் பழைய வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோட்டில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.
    • வியாபாரி ரமேஷ் ராயபுரம் போலீசில் புகார் செய்தார்.

    ராயபுரம்:

    பழைய வண்ணாரப் பேட்டை அம்மையப்பன் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவர் பழைய வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோட்டில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ரவுடி கல்லறை சுரேஷ் என்பவர் அடியாட்களுடன் சென்று மாமூல் கேட்டு மிரட்டினார்.

    வியாபாரி ரமேஷ் மாமூல் தர மறுத்ததால் அங்கிருந்த வாடிக்கையாளர்களின் முன்னிலையிலேயே ரவுடி கல்லறை சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் ஆபாச வார்த்தையில் திட்டி, கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து வியாபாரி ரமேஷ் ராயபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி காட்சியை வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே ரவுடி கல்லறை சுரேஷ் கூட்டாளிகளுடன் வந்து மாமூல் கேட்டு மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இந்த நிலையில் மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடி கல்லறை சுரேஷ், அவனது கூட்டாளிகள் ஆதம்,பெருமாள் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×