search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேர"

    • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • பணியாளர்கள் நலவாரியம் அமைக்க அரசு ஆணையிடப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறித்துவ அனாதை இல்லங்கள், தொழு நோயாளியர் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்களின் போன்றோர்களின் சமூக, பொருளாதார மற்றம் கல்வி மேம்பாட்டிற் காக கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உப தேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் அமைக்க அரசு ஆணையிடப்பட்டுள்ளது.

    இந்த நலவாரியத்தில் உறுப்பினராக சேருவ தற்கான விண்ணப்பப் படி வங்களை அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபனை் மையினர் நல அலுவல கங்கள், மாவட்ட சிறு பான்மையினர் நல அலுவலகங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட எல்லைக்குட்பட்ட ரோமன் கத்தோலிக் திருச் சபை அதன் பேராயர்கள் மற்றும் ஆயர்கள், புராட்ட ஸ்டாண்ட் திருச்சபைகள் ஆயர்கள், சினாட் ஆப் பெண்டகோஸ்டல் சர்ச்சஸ் போன்ற அங்கீகாரம் செய் யப்பட்ட திருச்சபைகளிட மிருந்து சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

    மேற்காணும் திருச்சபை களின் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலரால் உறுப்பி னர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.

    மேலும் இவ்வாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பி னர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தொழி லாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறையின் கட்டுப் பாட்டின் கீழ் இயங்கி வரும் ஏனைய அமைப்பு சாரா வாரியங்கள் மூலம் வழங் கப்பட்டு வரும் நலத் திட்டங்கள் போன்றே வழங்கப்படும்.

    கல்வி உதவித்தொகை 10-ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ. பாலிடெக்னிக் படிப்பு, தொழிற்கல்வி பட்டப்படிப்பு வரை, விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித்தொகை ரூ.1 லட்சமும், விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப உதவித்தொகை ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை, இயற்கை மரணம் உதவித் தொகை ரூ.20 ஆயிரமும், ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ. 5 ஆயிரமும், திருமண உதவித் ெதாகை ஆண்களுக்கு ரூ. 3 ஆயிரம் (ம) பெண்களுக்கு ரூ.5 ஆயிரம், மகப்பேறு உதவித்தொகை ரூ.6 ஆயிரம் மற்றும் கருச்சிதைவு, கருக்கலைப்பு உதவித் தொகை ரூ. 3 ஆயிரம், கண் கண்ணாடி உதவித்தொகை ரூ.500, முதியோர் ஓய்வூதியம் (மாதந்தோறும்) ரூ.1,000 வழங்கப்படும்.

    மேலும், விவரங்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளா கத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்திய ராணுவத்தில் தகுதியான, துடிப்பான இளைஞர்களை சேர்ப்பதற்காக மத்திய பா.ஜ.க. அரசு அக்னிபத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
    • வருகிற செப்டம்பர் மாதம் 20-ந்தேதி முதல் அக்டோபர் மாதம் 1-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    சேலம்:

    இந்திய ராணுவத்தில் தகுதியான, துடிப்பான இளைஞர்களை சேர்ப்பதற்காக மத்திய பா.ஜ.க. அரசு அக்னிபத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

    இந்த திட்டத்தின் கீழ் அக்னி வீரர்கள் ஆள்சேர்ப்பு முகாம் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள டி.இ.ஏ. பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வருகிற செப்டம்பர் மாதம் 20-ந்தேதி முதல் அக்டோபர் மாதம் 1-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்த திருப்பூர் மண்டலத்தின் கீழ் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கோவை, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, நீலகிரி, தேனி, திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் வருகின்றன. இந்த மாவட்டங்களை சேர்ந்த ஆர்வம் உள்ள இளைஞர்கள் https://www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் வருகிற ஆகஸ்ட் மாதம் 3-ந்தேதி வரை பதிவு செய்ய வேண்டும்.

    பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 14-ந்தேதிக்கு பிறகு அனுமதி கடிதம் வழங்கப்படும். இந்த ஆள்சேர்ப்பு முகாமில் ராணுவ பொதுப்பணிகள், தொழில் நுட்பப் பணிகள், ட்ரேட்ஸ்மேன், எழுத்தர், பணிமனை காப்பாளர் உள்ளிட்ட பணிகளுக்காக நடைபெறுகிறது.

    இப்பணியில் சேர வயது, கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை கடந்த 4-ந்தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2022-2023-ம் கல்வியாண்டிற்கு நேரடி 2-ம் ஆண்டு மற்றும் முதலாமாண்டு முழு நேரம் பட்டயப்படிப்பில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை பெருந்துறை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2022-2023-ம் கல்வியாண்டிற்கு நேரடி 2-ம் ஆண்டு மற்றும் முதலாமாண்டு முழு நேரம் பட்டயப்படிப்பில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். www.tnpoly.in என்ற இணையதளம் மூலம் வரும் அடுத்த மாதம் 8-ந் தேதி வரை விண்ணப்பித்து பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

    இந்த கல்லூரியில் அமைப்பியல், எந்திரவியல், மின்னியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் மற்றும் கணிணி பொறி யியல் என 5 முழுநேரப் பாடப்பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பாடப்பிரிவிலும் 60 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

    இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்யும் பொதுப்பிரிவினர் ரூ.150 பதிவுக்கட்டணமாக கிரிடிட் கார்டு, டேபிட் கார்டு,நெட் பேங்க் மூலம் செலுத்தலாம். பழங்குடி-பட்டியல் பிரிவினருக்கு விண்ணப்ப பதிவுக்கட்டணம் இல்லை.

    முதலாம் ஆண்டில் சேர விரும்பும் மாணவர்கள் 10-ம் வகுப்பில் தேர்ச்சி அல்லது அதற்கு இணை யான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    நேரடி 2-ம் ஆண்டு சேர விரும்பும் மாணவர்கள் மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இயற்பி யல், வேதியியல், கணிதம், உயிரியல் அல்லது தொழில் பிரிவில் கணிதம், இயற்பியல், வேதியியல் அல்லது அதற்கு சமமான படிப்பு படித்து இருக்க வேண்டும்.

    இந்த தகவலை பெருந்துறை அரசினர் பாலி டெக்னிக் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

    ×