search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    நாமக்கல் ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

    நாமக்கல் ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பங்கள் வரவேற்றகப்படுகிறது.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

     நாமக்கல் மாவட்ட ஊர்க்காவல் படையில், நாமக்கல் பிரிவிற்கு 8 ஆண்கள், 3 பெண்கள், திருச்செங்கோடு பிரிவிற்கு 12 ஆண்கள், 1 பெண் என மொத்தம் 24 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

    விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். எவ்வித குற்றப் பின்னணியும் இருக்கக் கூடாது. 

    எந்த அமைப்பையோ, அரசியல் கட்சியையோ சார்ந்தவராக இருத்தல் கூடாது. விருப்பமுள்ளவர்கள், நாமக்கல் போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள, ஊர்க்காவல்படை அலுவலகத்தில் விண்ணப்பத்தினைப் பெற்று, பூர்த்தி செய்து, நேரிலோ அல்லது, தபால் மூலமோ வருகிற ஜூன் மாதம் 10-ம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேருமாறு ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
    Next Story
    ×