search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேத்தன் சர்மா"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கங்குலிக்கு விராட் கோலியை பிடிக்காது என சேத்தன் சர்மா கூறியிருந்தார்.
    • சேத்தன் சர்மாவின் ராஜினாமா கடிதத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ஏற்றுள்ளார்.

    தனியார் தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் பல சர்ச்சைகுரிய கருத்துகளை சேத்தன் சர்மா தெரிவித்திருந்தார்.

    இந்திய அணி தொடர்பான பல ரசியங்களை சேத்தன் சர்மா கசிய விட்டதாக குற்றசாட்டு எழுந்த நிலையில் தற்போது அவர் ராஜினாமா செய்துள்ளார்.

    சேத்தன் சர்மாவின் ராஜினாமா கடிதத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ஏற்றுள்ளார். 

    • தேர்வுக்குழுவின் 5 பதவிகளுக்கான விளம்பரத்தைத் தொடர்ந்து, சுமார் 600 விண்ணப்பங்கள் வரப்பெற்றன.
    • தனிப்பட்ட நேர்காணல்களுக்கு 11 நபர்களை கிரிக்கெட் ஆலோசனைக் குழு பட்டியலிட்டது.

    புதுடெல்லி:

    டி20 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வி அடைந்து, கடும் விமர்சனம் எழுந்ததைத் தொடர்ந்து சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழுவை பிசிசிஐ கடந்த நவம்பர் மாதம் கலைத்தது. பின்னர் இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய தேர்வுக்குழுவை ஏற்படுத்தும் நடைமுறை தொடங்கியது. இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நேர்காணல் நடத்தப்பட்டது.

    இந்நிலையில், பிசிசிஐ தேர்வுக்குழு தலைவராக சேத்தன் சர்மா மீண்டும் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார். தேர்வுக்குழு உறுப்பினர்களாக ஷிவ் சுந்தர் தாஸ், சுப்ரதோ பானர்ஜி, சலீல் அங்கோலா, ஸ்ரீதரன் சரத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    தேர்வுக்குழுவுக்கு ஹர்வீந்தர் சிங்கும் விண்ணப்பித்திருந்தார். நேர்காணலுக்குப் பிறகு அவரது பெயர் பரிசீலனை செய்யப்படவில்லை.

    இதுதொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், "2022ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி பிசிசிஐயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 5 பதவிகளுக்கான விளம்பரம் வெளியிட்டதைத் தொடர்ந்து, சுமார் 600 விண்ணப்பங்கள் வரப்பெற்றன. விண்ணப்பங்களை கவனமாக பரிசீலித்த பிறகு, தனிப்பட்ட நேர்காணல்களுக்கு 11 நபர்களை ஆலோசனைக் குழு பட்டியலிட்டது. நேர்காணல்களின் அடிப்படையில், தேர்வுக் குழுவிற்கு தேர்வானர்களின் பெயர்களை ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது" என தெரிவித்துள்ளார்.

    • சேத்தன் சர்மா தலைமையிலான முந்தைய தேர்வுக் குழு நவம்பர் மாதம் கலைக்கப்பட்டது.
    • ஹர்விந்தர் சிங் தேர்வுக் குழுவில் நீடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய தேர்வுக்குழு விரைவில் ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நேர்காணல் இன்று தொடங்கியது. கடந்த ஆண்டு புதிய தேர்வுக் குழுவை நியமிப்பதற்கான செயல்முறையை பிசிசிஐ தொடங்கியதால், சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக் குழு நவம்பர் மாதம் கலைக்கப்பட்டது. இருப்பினும், சேத்தன் சர்மா தனது பதவியில் தொடர அதிக வாய்ப்புள்ளது.

    தேர்வுக் குழுவிற்கு விண்ணப்பித்தவர்களில் சேத்தன் சர்மா, ஹர்விந்தர் சிங், அமய் குராசியா, அஜய் ராத்ரா, எஸ்எஸ் தாஸ், எஸ்.ஷரத் மற்றும் கானர் வில்லியம்ஸ் ஆகியோரிடம் இன்று நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது. நாளையும் நேர்காணல் தொடரும்.

    வெங்கடேஷ் பிரசாத் இந்த நேர்காணலுக்கான பட்டியலில் இல்லை. ஹர்விந்தர் சிங் தேர்வுக் குழுவில் நீடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ×