search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்போன் சேவை"

    • தேசிய பேரிடர் மீட்பு படை சார்பில் 34 குழுக்கள் பணியில் உள்ளனர்.
    • 311 கால்நடை உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

    சென்னையில் நாளை மாலைக்குள் தொலைத்தொடர்பு சேவைகள் முழுமையாக சீரடைந்துவிடும் என்றும் வடசென்னையில் இன்று மாலைக்குள் மின்விநியோகம் வழங்கப்படும் எனவும் தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா மேலும் கூறியதாவது:-

    வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மழை நீர் வடியத் தொடங்கிவிட்டது. மோட்டார்கள் மூலம் மழை நீர் வெளியேற்றும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்து பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    மின்சார வாரியம், காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை போன்ற அனைத்து துறை சார்ந்தவர்களும் மீட்பு, நிவாரணப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    தேசிய பேரிடர் மீட்பு படை சார்பில் 34 குழுக்கள் பணியில் உள்ளனர்.

    311 கால்நடை உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • குன்றி மற்றும் மாக்கம்பாளையம் மலை கிராமங்களை சேர்ந்த மக்கள் செல்போன் கோபுரம் அமைக்க கோரி ஈரோடு மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தனர்.
    • இந்நிலையில் குன்றி பகுதிக்கு வந்த கலெக்டர் கிருஷ்ணனுண்ணி புதிய செல்போன் டவரை ரிப்பன் வெட்டி சேவையை தொடங்கி வைத்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் அடர்ந்த வனப் பகுதியில் குன்றி மற்றும் கூத்தம்பாளையம் என ஊராட்சிகளில் சின்ன குன்றி, பெரியகுன்றி, கிளமன்ஸ் தொட்டி, மாகாளி தொட்டி, அணில் நத்தம் பண்ணையத்தூர், கோவிலூர், ஆனந்த நகர், கீழுர், கோம்பை தொட்டி, கோம்பையூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.

    இந்த கிராமங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு ெதாலை தொடர்பு வசதி இல்லாததால் செல்போன் சேவை இன்றி மலை கிராம மக்கள் பரிதவித்து வந்தனர்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு குன்றி பகுதியில் தொலைத்தொடர்பு டவர் அமைக்கப்பட்ட நிலையில் சிறிது நாட்களே செயல்பட்ட அந்த டவர் மீண்டும் செயல்பாடு இன்றி இயக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து குன்றி மற்றும் மாக்கம்பாளையம் மலை கிராமங்களை சேர்ந்த மக்கள் செல்போன் கோபுரம் அமைக்க கோரி ஈரோடு மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தனர்.

    சில வாரங்களுக்கு முன்பு தனியார் செல்போன் நிறுவனம் மூலம் குன்றி பகுதியில் புதிதாக செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டது.

    இந்த செல்போன் கோபுரம் கடந்த ஜூலை 2-ந் தேதி முதல் சோதனை அடிப்படையில் இயங்க தொடங்கியது.

    இந்நிலையில் குன்றி பகுதிக்கு வந்த கலெக்டர் கிருஷ்ணனுண்ணி புதிய செல்போன் டவரை ரிப்பன் வெட்டி சேவையை தொடங்கி வைத்தார்.

    இதனால் மலை கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி உள்ளதால் அப்போது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதைத் தொடர்ந்து கலெக்டர் ரூ. 86.30 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். சத்தியமங்கலம் வட்டம் கடம்பூர் பகுதியில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினையும், சுகாதார நிலையத்தில் மருத்துவர் மற்றும் செவிலியர் குடியிருப்பு கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    குத்தியாலத்தூர் பகுதியில் கிராம நிர்வாக அலுவலகத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ×