search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுஷ்மாசுவராஜ்"

    பாகிஸ்தானில் புகுந்து இந்திய போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது குறித்து ரஷியா மற்றும் சீனாவிடம் சுஷ்மாசுவராஜ் விளக்கம் அளித்தார். #SushmaSwaraj #PulwamaAttack #Chinese #ForeignMinister
    பெய்ஜிங்:

    சீனாவின் பெய்ஜிங்கில் வெளியுறவுதுறை மந்திரிகள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் சென்றுள்ளார்.

    அங்கு, பாகிஸ்தானில் புகுந்து இந்திய போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கியது குறித்து விளக்கம் அளித்தார். இந்தியா நடத்தியது ராணுவ தாக்குதல் அல்ல. ராணுவத்தளங்களை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்படவில்லை.

    ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளையும் அவர்களது புகலிடத்தையும் குறிவைத்து மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டது. ஏனெனில் அவர்கள் இந்தியாவில் புகுந்து மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

    அவர்களிடம் இருந்து பொதுமக்களை காக்கவே பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த இத்தகைய நடவடிக்கைகள் தொடரும் என்றார்.



    இதற்கிடையே, அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகனின் உயர் அதிகாரி ஜெனரல் ஜோசப்டன்கோர்டு பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரி ஜெனரல் ஷூபேர் மக்மூதை டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசினார்.

    இந்திய ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்திய பிறகு தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்து இருவரும் விவாதித்தனர். இந்த தகவலை பென்டகன் செய்தி தொடர்பாளர் கர்னல் பாட்ரிக் எஸ்.ரைடர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். #SushmaSwaraj #PulwamaAttack #Chinese #ForeignMinister
    ×