search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுந்தரேசுவரர்"

    • மண் சுமந்த கோலத்தில் சுந்தரேசுவரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • இரவு சுவாமி-அம்மன் கோவிலை வந்தடைந்த பின்னர் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா கடந்த13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 19-ந்தேதி முதல் திருவிளையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் 7-வது நாள் சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 9-ம் நாளான இன்று முக்கிய நிகழ்ச்சியான புட்டுத்திருவிழா விமரிசையாக நடந்தது.

    காலை 5 மணிக்கு சுவாமி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு நான்கு சித்திரை வீதிகளை வலம் வந்தனர். பின்னர் கீழமாசி வீதி, யானைக்கல் வழியாக பழைய சொக்கநாத சுவாமி கோவில் முன்னுள்ள விருது நகர் இந்து நாடார்கள் உறவின்முறை பரிபாலன சபை திருக்கண் மண்டபம், திருமலை ராயர் படித்துறை என்.எல்.பி. அக்ரஹாரம், அனுமார் கோவில் படித்துறை, குருசாமி சாஸ்திரிகள் மண்டபப்படி, சாரதா வித்யா பவனம் மெட்ரிக் மேல்நிலைபள்ளி திருக்கண் மண்டபம், ஆதிமூலம் பிள்ளை அக்ரஹாரம், பேச்சியம்மன் படித்துறை வழியாக, ஒர்க் சாப் ரோட்டில் உள்ள புட்டுத்தோப்பு மண்டபத்திற்கு எழுந்தரு ளினர்.

    பின்பு வணிக வைசியர் மண்டபத்தில் புட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்த மதியம் 1 மணியளவில் மண் சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    மாலை 3 மணிக்கு மீண்டும் சுவாமி-அம்மன் மண்ட பத்தில் இருந்து புறப்பட்டனர். ஆரப் பாளையம் பொன்னம்மாள் மண்டபத்திற்கு எழுந்தருளினர். பின்னர் பொன்னகரம் பிராட்வே, ஒர்க் ஷாப் ரோடு, நாயக்கர் புது தெரு, வக்கீல் புது தெரு, கீழ வெளி வீதி அம்மன் சன்னதி வழியாக கோவிலை சென்றடைவர்.

    இன்று காலை சுவாமி -அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட பின்னர் நடை சாத்தப்பட்டது. இரவு சுவாமி-அம்மன் கோவிலை வந்தடைந்த பின்னர் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

    • பிச்சாடனர் கோலத்தில் சுந்தரேசுவரர் வீதி உலா நடக்கிறது.
    • 12 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    மதுரை

    மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 23-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் 7-வது நாளான இன்று காலை தங்க சப்பரத்தில் பிச்சாடனர் கோலத்தில் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மனுடன் உலா வந்தார்.

    இறைவனை மறந்த ரிஷிகளுக்கும், ரிஷிபத்தி னிகளுக்கும் உணர்த்தும் வகையில் பிச்சாடனர் கோலத்தில் சுவாமியும்- அம்பாளும் பிச்சை பாத்தி ரம் ஏந்தி வலம் வந்தனர்.

    4 மாசி வீதிகள் வழியாக பிச்சாடனர் கோலத்தில் வலம் வந்த சுவாமிகளுக்கு பக்தர்கள் பிச்சை யளித்தனர். வீதி உலா முடிந்து மீண்டும் கோவிலுக்கு வந்த சுவாமி- அம்மன் சிவகங்கை ராஜா மண்டகப்படி, மீனாட்சி நாயக்கர் மண்டபங்களில் எழுந்தருளினர்.

    இன்று இரவு 7 மணி யளவில் நந்திகேசுவரர், யாழி வாகனத்தில் சுவாமி- அம்மன் வீதிஉலா 4 மாசி வீதிகளிலும் நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள்.

    பட்டாபிஷேகம்

    சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடத்தும் நிகழ்ச்சி நாளை (30-ந்தேதி) நடக்கிறது. இரவு 7.05 மணிக்கு மேல் 7.29 மணிக்குள் அம்மன் சன்னதியில் உள்ள ஆறுகால் பீடத்தில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.

    அப்போது மீனாட்சி அம்மனுக்கு ராயர் கிரீடம் சூட்டி நவரத்தினத்தாலான செங்கோலை வழங்கி பட்டத்து அரசியாக பட்டாபிஷேகம் சூடப்படும். அதில் மீனாட்சி அம்மனிடம் இருந்த செங்கோல் அம்மன் பிரதிநிதியான கோவில் தக்கார் கருமுத்து கண்ண னிடம் வழங்கப்படும். அவர் செங்கோலை பெற்று சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் வழியாக வலம் வந்து மீண்டும் மீனாட்சி அம்மனிடம் செங்கோலை ஒப்படைப்பார்.

    பின்னர் மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி 4 மாசிவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    திருக்கல்யாணம்

    சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பாக மீனாட்சி திருக்கல்யாணம் வருகிற 2-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) நடக்கிறது. அன்று காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் வடக்கு-மேற்கு ஆடி வீதியில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் திருக்கல்யா ணம் நடைபெறுகிறது. இதனை காண பக்தர்களுக்கு ரூ.200, ரூ.500 கட்டணத்தில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. இதில் சுமார் 12 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    ×