search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீர்காழி சட்டைநாதர் கோவில்"

    • புனித நீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாக பூஜைகள் நடந்தன.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்ட சட்டைநாதர் கோவில் உள்ளது. இங்கு கடந்த மே மாதம் 24-ந் தேதி குடமுழுக்கு நடந்தது. இதையடுத்து மண்டலாபிஷேக பூர்த்தி விழா நேற்று தொடங்கியது.

    3 நாள் நடைபெற உள்ள இந்த விழாவின் முதல் நாளான நேற்று ஆபத்து காத்த விநாயகர், சம்ஹார வேலர், அஷ்ட பைரவர், குணம் தீர்த்த விநாயகர், கணநாதர், திருஞானசம்பந்தர் சுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் சன்னதிகளுக்கு மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடந்தது.

    இதையொட்டி புனித நீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாக பூஜைகள் நடந்தன. தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் புனித நீர் அடங்கிய கடங்கள் மேள, தாளங்கள் முழங்க கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டன. இதன் முடிவில் ஆபத்து காத்த விநாயகர், சம்ஹாரவேலர், அஷ்ட பைரவருக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

    இதில் தமிழ்ச் சங்க தலைவர் மார்கோனி, திருப்பணி உதயதாரர் முரளிதரன், இந்து முன்னணி மாவட்ட தலைவர் சரண்ராஜ், கோவி நடராஜன், முன்னாள் நகரசபை உறுப்பினர் மாரிமுத்து, பாலசுப்பிரமணியன், விசுவ இந்து பரிசத் நிர்வாகி செந்தில் குமார் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி செந்தில் செய்திருந்தார்.

    • 24-ந் தேதி சீர்காழி சட்டைநாதர் கோவிலில் குடமுழுக்கு நடந்தது.
    • இந்த கோவிலில் திருஞானசம்பந்தர், அஷ்ட பைரவர்களுக்கு தனி சன்னதி உள்ளது.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான சட்டைநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருநிலை நாயகி அம்பாள் பிரம்மபுரீஸ்வரருடன் அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் திருஞானசம்பந்தர், அஷ்ட பைரவர்களுக்கு தனி சன்னதி உள்ளது. இந்நிலையில் 32 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 24-ந் தேதி சீர்காழி சட்டைநாதர் கோவிலில் குடமுழுக்கு நடந்தது.

    விழாவை முன்னிட்டு திருநிலை நாயகி பிரம்மபுரீஸ்வரருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

    இதை முன்னிட்டு பெண்கள் ஏராளமான பூக்கள், பழங்கள், தாலி சரடு, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பொருட்களை ஊர்வலமாக எடுத்து வந்து யாகசாலை அருகில் வைத்தனர். அங்கு திருநிலை நாயகி பிரம்மபுரீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்து தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • இக்கோவிலில் திருஞானசம்பந்தர், அஷ்ட பைரவர்களுக்கு தனி சன்னதி உள்ளது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டை நாதர் கோவில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற இத்தலத்தில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். மேலும் இங்கு சிவபெருமான் மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    திருஞானசம்பந்தர் இத்தலத்தில் உமையம்மை அளித்த ஞான பாலினை அருந்தி தனது மூன்றாவது வயதில் தேவாரத்தின் முதல் பதிகமான தோருடைய செவியன் என்ற பதிகத்தை பாடினார் என்பது வரலாறு. மேலும் இக்கோவிலில் திருஞானசம்பந்தர், அஷ்ட பைரவர்களுக்கு தனி சன்னதி உள்ளது.

    இக்கோவிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று முன்தினம் குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்று முடிந்தது. தொடர்ந்து இரவு விநாயகர், வள்ளி தெய்வானை உடனடியாக முருகப்பெருமான், சுவாமி-அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    தொடர்ந்து பஞ்சமூர்த்தி சுவாமிகள் சிறப்பு புஷ்பப் பல்லக்கில் எழுந்தருளினர். தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில், சிறப்பு நாதஸ்வர கச்சேரி, நாட்டிய நிகழ்வுடன் புஷ்பப் பல்லக்கில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது. தேரோடும் நான்கு வீதிகளிலும் பஞ்சமூர்த்தி சுவாமிகள் வலம் வந்து கோவிலை வந்தடைந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • சீர்காழி சட்டைநாதர் கோவில் குடமுழுக்கு 32 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது.
    • பக்தர்களுக்கு தருமபுரம் ஆதீனம் அருளாசி வழங்கினார்.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் கோவில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற இத்தலத்தில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். மேலும் இங்கு சிவபெருமான் மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    திருஞானசம்பந்தர், இத்தலத்தில் உமையம்மை அளித்த ஞானப்பாலினை அருந்தி தனது மூன்றாவது வயதில் தேவாரத்தின் முதல் பதிகமான 'தோருடைய செவியன்' என்ற பதிகத்தை பாடினார் என்பது வரலாறு.

    இக்கோவிலில் திருஞான சம்பந்தர், அஷ்ட பைரவர்களுக்கு தனி சன்னதி உள்ளது. இத்தகைய சிறப்புமிக்க கோவிலின் குடமுழுக்கு விழா 32 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று காலை 8.30 மணிக்கு தொடங்கி 10 மணிக்குள் நடந்தது.

    குடமுழுக்கை முன்னிட்டு கடந்த 16-ந் தேதி முதல் பூர்வாங்க பூஜைகள் நடந்தன. அன்று புனித நீர் எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கோவிலின் மேற்கு கோபுர வாசல் அருகே 88 யாக குண்டங்கள் அமைக்கப்பட்ட யாக சாலையில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், யாத்ரா ஹோமம், யாத்ரா தானம் மற்றும் யாகசாலை பிரவேசம் நடந்தது.

    கடந்த 20-ந் தேதி(சனிக்கிழமை) முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. 21-ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) இரண்டாம் கால மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகளும், அதனைத் தொடர்ந்து 22-ம் தேதி (திங்கட்கிழமை) பரிவார மூர்த்திகளுக்கு மகா குடமுழுக்கும் நடந்தது. செவ்வாய்க்கிழமை 6-ம் கால மற்றும் 7-ம் கால யாக பூஜையும், தீபாராதனையும் நடந்தது.

    அதனை தொடர்ந்து நேற்று காலை 9 மணி அளவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் யாகசாலை குண்டத்தில் இருந்து கடம் புறப்பட்டு மேள, தாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் ஊர்வலமாக கோவில் உட்பகுதியில் வலம் வந்தது. பின்னர் சட்டை நாதர், பிரம்மபுரீஸ்வரர், திருநிலைநாயகி உள்ளிட்ட கோவில்களில் குடமுழுக்கு நடந்தது.

    அப்போது கீழ கோபுரம் மேற்பகுதியில் இருந்து ஹெலிகாப்டர் வலம் வந்து தெற்கு மேலகோபுரம், வடக்கு கோபுரம் வழியாக சுற்றி வந்து பின்னர் மலைக்கோவில் மீது மலர் தூவியது. அதனைத்தொடர்ந்து ராஜகோபுரம், தெற்கு கோபுரம், மேற்கு கோபுரம், வடக்கு கோபுரங்கள் மீது மலர்களை தூவியது. அதனை பக்தர்கள் பரவசத்துடன் கண்டு களித்தனர். தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தொடர்ந்து அனைத்து சன்னதிகளிலும் தரு்மபுரம் ஆதீனம் நேரில் சென்று சிறப்பு வழிபாடு செய்தார். பின்னர் பக்தர்களுக்கு தருமபுரம் ஆதீனம் அருளாசி வழங்கினார்.

    குடமுழுக்கு விழாவில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு சட்டைநாதர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு வழிபாடு செய்தார். குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு தரு்மபுரம் ஆதீனம் நினைவு பரிசு வழங்கினார்.

    தொடர்ந்து யாகசாலை குண்டம் அருகே அமைக்கப்பட்ட மேடையில் இசை கலைஞர்கள், ஓதுவார்கள், திருப்பணி உபயதாரர்களுக்கு தருமபுரம் ஆதீனம் நினைவு பரிசு வழங்கினார்.

    குடமுழுக்கு விழாவில் கலெக்டர் மகாபாரதி, போலீஸ் சூப்பிரண்டு நிஷா, எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், தமிழ் சங்க தலைவர் மார்கோனி, நகர்மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன், ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், நகர வர்த்தக சங்க தலைவர் எஸ்.கே.ஆர்.சிவசுப்பிரமணியன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சாமிநாதன், முன்னாள் நகர் மன்ற தலைவர் கனிவண்ணன், நகர்மன்ற துணைத் தலைவர் சுப்பராயன், தி.மு.க. மாவட்ட பொருளாளர் அலெக்ஸாண்டர், பழனியப்பன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சேர்ந்த அதிகாரிகள் உள்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.குடமுழுக்கு விழாவையொட்டி நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    • சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் கோவில் உள்ளது.
    • இந்த கோவிலில் 24-ந்தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது.

    சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருநிலை நாயகி அம்பாள் பிரம்மபுரீஸ்வரர் உடன் அருள் பாலித்து வருகிறார். மேலும் இந்த கோவிலில் திருஞானசம்பந்தர், அஷ்ட பைரவர்களுக்கு தனி சன்னதி உள்ளது. இக்கோவில் 32 ஆண்டுகளுக்கு பின்னர் வருகிற 24-ந் தேதி (புதன்கிழமை) குடமுழுக்கு நடைபெற உள்ளது.

    விழாவையொட்டி யாகசாலை பூஜைகள் இன்று (சனிக்கிழமை) மாலை தொடங்க உள்ளது. அதைமுன்னிட்டு தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் சீர்காழி அருகே உள்ள உப்பனாற்றில் இருந்து நேற்று மாலை ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் மற்றும் நகர எல்லையான உப்பனாற்று ஆகிய நீர்கள் அடங்கிய 4 கடங்களை, நான்கு யானைகள் மீது ைவத்து சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

    அப்போது ஒட்டகம், குதிரை, சிலம்பாட்டம், வாத்தியம், மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்து அடைந்தனர். பின்பு கொண்டுவரப்பட்ட புனிதநீரை பாதுகாப்பாக யாகசாலையில் கொண்டு வந்து சேர்த்தனர்.

    இந்த நிகழ்வில் தருமபுரம் ஆதீனத்தை சேர்ந்த பல்வேறு கட்டளை தம்பிரான்கள், தமிழ் சங்கத் தலைவர் மார்கோனி, பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., திருப்பணி உபயதாரர் முரளி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் பிரபாகரன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் பந்தல் முத்து, கோவி நடராஜன், பாலசுப்பிரமணியன், நகர்மன்ற உறுப்பினர் பாலமுருகன், வர்த்தக சங்க நிர்வாகி பாலகிருஷ்ணன், கோவில் நிர்வாகி செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • புனித நீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
    • மேற்கு கோபுர வாசல் தற்போது பக்தர்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக திறக்கப்பட்டுள்ளது.

    சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டை நாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் 32 ஆண்டுகளுக்கு பிறகு, வருகிற 24-ந் தேதி குடமுழுக்கு நடக்கிறது. குடமுழுக்கையொட்டி கோவிலில் திருப்பணிகள் நடந்தது. தற்போது பணகள் நிறைவடைந்துள்ளது. சட்டை நாதர் கோவிலில் உள்ள 4 கோபுர வாசல்களில் மேற்கு கோபுர வாசல் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டியே வைக்கப்பட்டு இருந்தது. மற்ற 3 கோபுர வாசல்கள் வழியாக மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமியை தரிசனம் செய்து செல்கின்றனர். இந்தநிலையில் நேற்று காலை மேற்கு கோபுர வாசலை திறக்க தருமபுரம் ஆதீனம் முடிவு செய்து அதற்கான பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து புனித நீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. முன்னதாக பசு, யானை, ஒட்டகம், குதிரை ஆகியவைகளும் ஊர்வலமாக வந்தது.

    தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் மேற்கு கோபுர வாசலில் சிறப்பு பூஜைகள் செய்து, புனித நீர் தெளிக்கப்பட்டு கோபுர வாசல் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட உடன் முதலாவதாக பசு, குதிரை, ஒட்டகம், யானை ஆகியவை அதன் வழியே உள்ளே சென்றன.

    அதன் பின்னர் மேள, தாளங்கள் முழங்க தருமபுரம் ஆதீனம், பக்தர்கள் சென்றனர். 40 ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டிருந்த மேற்கு கோபுர வாசல் தற்போது பக்தர்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக திறக்கப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் தமிழ்ச்சங்க தலைவர் மார்க்கோனி, கோவில் திருப்பணி உபயதாரர் முரளி, கோவில் நிர்வாகி செந்தில், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பந்தல் முத்து, பொறியாளர் செல்வகுமார், கோவி நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டை நாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சிவபெருமான் மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். கோவிலில் காசிக்கு இணையாக அஷ்ட பைரவர்கள் தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர்.

    இந்த தலத்தில் சமயக்குரவர்களுள் ஒருவரான சம்பந்தர், சிவவாத இருதயர்- பகவதி அம்மையாருக்கு மகனாகப் பிறந்தார். முருகனின் அம்சம், இளைய பிள்ளையார் என்றும் இவர் வழங்கப்படுகிறார்.

    சட்டைநாதர் கோவிலில் திருஞானசம்பந்தர் தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முன்பு ஒருமுறை திருஞானசம்பந்தர் சிறுபிள்ளையாக இருந்தபொழுது பார்வதி தேவியான திருநிலைநாயகி அம்மை ஞானப்பால் வழங்கி அவருக்கு ஞானத்தை ஊட்டியதாக தல வரலாறு கூறுகிறது.

    இந்த தல வரலாற்றை நினைவு கூரும் விதமாக திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கும் விழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருமுலைப்பால் விழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரமான நேற்று கோவில் மண்டபத்தில் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் நாயன்மார் மண்டபத்தில் திருமுலைப்பால் திருவிழா நடைபெற்றது.

    ஊமையம்மை எழுந்தருளி ஞானசம்பந்தருக்கு தங்க கிண்ணத்தில் பால் கொடுக்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

    இந்த விழாவில் தமிழ்ச் சங்கத் தலைவர் மார்க்கோனி, பொருளாளர் கோவி நடராஜன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் மாரிமுத்து உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி செந்தில் செய்திருந்தார்.

    • இந்த கோவில் வரலாற்று சிறப்புமிக்க தலமாகும்.
    • இக்கோவிலில் 32 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடந்தது.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் திருநிலை நாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள்பாலிக்கிறார். திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தலமாகும். மேலும் காசிக்கு அடுத்தபடியாக அஷ்ட பைரவர்களுக்கும் தனி சன்னதி இங்குதான் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் 32 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடந்தது.

    இதையடுத்து அடுத்த மாதம் (மே) 24-ந் தேதி குடமுழுக்கு நடத்திட தருமபுரம் ஆதீனம் முடிவு செய்து அதற்கான திருப்பணிகளை தொடங்கி வைத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று குடமுழுக்குக்கான பத்திரிகையை தருமபுரம் ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் சட்டைநாதர் கோவிலுக்கு நேரில் வந்து திருநிலை நாயகி உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் திருஞானசம்பந்தர் , அஷ்ட பைரவர், விநாயகர், முருகன் உள்ளிட்ட சன்னதியில் வைத்து சிறப்பு வழிபாடு செய்தார்.அதைத்தொடர்ந்து குடமுழுக்கு பத்திரிகையை கோவிலில் உள்ள பக்தர்களுக்கு வழங்கி அருள் ஆசி வழங்கினார்.

    அப்போது தமிழ்ச் சங்க தலைவர் மார்க்கோனி, செயலாளர் கோவி நடராஜன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் மாரிமுத்து, தலைமை மருந்தாளுனர் முரளி, கோவில் நிர்வாகி செந்தில் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • காசிக்கு அடுத்தப்படியாக அஷ்ட பைரவருக்கு தனி சன்னதி இங்குதான் உள்ளது
    • கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சட்டைநாதர் கோவில் உள்ளது.

    தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14-வது தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள்

    அமைந்துள்ளன. இந்த தலத்தில் சாமி பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு

    அருள்பாலிக்கிறார். மேலும் காசிக்கு அடுத்தப்படியாக அஷ்ட பைரவருக்கு தனி சன்னதி இங்குதான் உள்ளது என்பது சிறப்பு

    அம்சமாகும். பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று

    வருகின்றன.

    இந்த நிலையில் நேற்று கோவிலுக்கு வந்த தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியா சுவாமிகள் தரிசனம்

    செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சீர்காழியில் சட்டை நாதர் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்து வருகிற மே மாதம் 24-ந்தேதி

    குடமுழுக்கு விழா நடக்கிறது. முன்னாக 20-ந்தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு 22-ந் தேதி பரிவார மூர்த்திகளுக்கு

    குடமுழுக்கும், 24-ந் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் பிரம்மபுரீஸ்வரர் கோவில் குடமுழுக்கும் நடைபெற உள்ளது. இதில்

    18 ஆயிரம் பக்கம் 16 தொகுப்புகளாக திருமுறையும், 14 சாஸ்திரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதை தொடர்ந்து சீர்காழி தமிழ்ச் சங்கத்தை ஆதீனம் தொடங்கி வைத்தார். பேட்டியின் போது தருமபுரம் ஆதீன கட்டளை சிவகுருநாத

    தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாகி செந்தில், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் மார்கோனி, இந்து முன்னணி மாவட்ட தலைவர்

    சரண்ராஜ், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் மாரிமுத்து, பாலசுப்பிரமணியன், கோவி நடராஜன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள நந்தவனத்தில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கான பூச்செடிகளை ஆதீனம் நட்டு வைத்தார்.

    ×