என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சீனர்கள்"
- பாகிஸ்தானில் சீனர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
- பாகிஸ்தானில் வசிக்கும் சீனாவை சேர்ந்தவர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதில்லை என்றார்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் சீன என்ஜினீயர்கள், பணியாளர்கள் பல்வேறு திட்டப்பணிகளில் பணியாற்றி வருகிறார்கள். இதற்கிடையே சீனர்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பயங்கரவாதிகளின் தற்கொலை படைத்தாக்குதலில் சீன என்ஜினீயர்கள் 5 பேர் பலியானார்கள்.
இதையடுத்து சீனர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என சீனா பாகிஸ்தானை கேட்டுக்கொண்டது.
இந்நிலையில், பாகிஸ்தானில் வசிக்கும் சீனாவை சேர்ந்தவர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதில்லை என பஞ்சாப் மாகாண முதல்மந்திரியும், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகளுமான மரியம் நவாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மரியம் நவாஸ் கூறுகையில், பாகிஸ்தானில் இருக்கும் சீனர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற விரும்பவில்லை. பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றும்படி கேட்கும்போது அவர்கள் கோபப்படுகிறார்கள். அவர்கள் எந்த ஒழுக்கத்தின் கீழும் வர விரும்பவில்லை. பயங்கரவாதம் கடினமான போரின் வடிவத்தை எடுத்துள்ளது. பயங்கரவாதிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளனர். அத்தகைய தளங்களில் நாம் அவர்களை விட முன்னால் இருக்கவேண்டும். பயங்கரவாதிகளிடம் நவீன ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பம் உள்ளது. ஆப்கானிஸ்தானில் கிடைத்த அமெரிக்க ஆயுதங்கள் அவர்களிடம் உள்ளன. இது பெரும் சவாலாக உள்ளது என தெரிவித்தார்.
- கடந்த ஆண்டு தம்பதியர் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளவும் அனுமதி தந்து சட்டதிருத்தம் செய்யப்பட்டது.
- சீனாவில் வாழ்கிற மக்களின் ஆயுட்காலம் 0.6 ஆண்டு அதிகரித்து 77.93 ஆண்டுகளாகி இருக்கிறது.
பீஜிங்:
உலகிலேயே அதிக மக்கள் தொகையை கொண்ட நாடான சீனாவில் இப்போது குழந்தைகள் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு, தம்பதியர் 2 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி அளித்தும் நிலைமையில் பெரிதான மாற்றம் இல்லை. கடந்த ஆண்டு, தம்பதியர் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளவும் அனுமதி தந்து சட்டதிருத்தம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் அங்கு வாழ்கிற மக்களின் ஆயுட்காலம் 0.6 ஆண்டு அதிகரித்து 77.93 ஆண்டுகளாகி இருக்கிறது.
கடந்த 2020-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்புபடி சீனாவில் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரின் எண்ணிக்கை 26 கோடியே 40 லட்சமாக உள்ளது.
சீனாவின் அங்கமாக உள்ள திபெத்தில் உயரமான நிலப்பரப்பு காரணமாக ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ளதால், அங்கு மக்களின் ஆயுட்காலம் 1951-ல் 35.5 ஆண்டுகளாக இருந்தது. தற்போது அது 72.19 ஆண்டுகளாக இருக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்