search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீட் பெல்ட்"

    • இன்று காலை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • இதனைத் தொடர்ந்து தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகள் மற்றும் சீட் பெல்ட் போடாத நபர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர்.

    கடலூர்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடலூர் பகுதிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து பொருட்கள் வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் போக்குவரத்து போலீசார் சார்பில் இன்ஸ்பெக்டர் அமர்நாத் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம், போலீஸ்காரர்கள் ரவிச்சந்திரன், மணிகண்டன், பாலா ஆகியோர் இன்று காலை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது விபத்துல்லா தீபாவளியை கொண்டாடும் வகையில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து கொண்டும், நான்கு சக்கர வாகனத்தில் செல்லக்கூடிய நபர்கள் சீட் பெல்ட் அணிந்து கொண்டும் செல்கிறார்களா? என சோதனை செய்தனர். அப்போது ஒரு சில வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை ஊக்குவிக்கும் விதமாக இனிப்பு வழங்கி பாராட்டினார்கள். இதனைத் தொடர்ந்து தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகள் மற்றும் சீட் பெல்ட் போடாத நபர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கினார்கள்.

    • மும்பையில் கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில் பயணிகளுக்கும் சீட் பெல்ட் கட்டாயம்.
    • இந்த உத்தரவு வரும் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள பால்கரில் கடந்த மாதம் நடந்த சாலை விபத்தில் டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி பலியானார். விபத்தில் காரின் முன் சீட்டில் இருந்த 2 பேரும் உயிர் தப்பினர். ஆனால் பின் சீட்டில் இருந்த சைரஸ் மிஸ்திரி மற்றும் அவரது நண்பர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் சைரஸ் மிஸ்திரி சீட் பெல்ட் அணியாமல் இருந்ததால்தான் விபத்தின் போது காரின் முன்பகுதியில் மோதி உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து 4 சக்கர வாகனங்களில் பின்னால் இருப்பவர்களும் சீட் பெல்ட் அணியவேண்டும் என்ற கருத்துக்கள் எழுந்தன.

    இந்நிலையில், மும்பையில் 4 சக்கர வாகனங்களில் டிரைவர் மட்டுமின்றி, பயணிகளும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    இதுதொடர்பாக மும்பை போலீசார் பிறப்பித்துள்ள உத்தரவில், அனைத்து வாகனங்களிலும் பயணிகளுக்கும் சீட் பெல்ட் வசதியை ஏற்படுத்த அடுத்த மாதம் 1-ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்படுகிறது. அதன்பிறகு மும்பையில் 4 சக்கர வாகனங்களில் டிரைவர் மட்டுமின்றி, பயணிகளும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். சீட் பெல்ட் அணியாதவர்கள் மீது மோட்டார் வாகன சட்டம் 194 (பி) (1) பிரிவின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×