search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சி.சி.டி.வி. கேமிரா"

    • சிறிது நேரம் கழித்து பணம் மற்றும் நகைகளை காணாததை கண்ட கருணாநிதி அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து உரிமை யாளர் ராமை யனுக்கு தகவல் தெரிவித்தார். இது குறித்து கருணாநிதி இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
    • புகாரின் பேரில் சம்பவ இடம் வந்த இரணியல் போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக் களை ஆய்வு செய்தனர்.
    • அப்போது சி.சி.டி.வி.யில் கொள்ளையர்கள் 2 பேர் நடந்து செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட் டுள்ளது.

    இரணியல், அக்.13-

    திங்கள்நகர் அடுத்த பூசாஸ்தான்விளையை சேர்ந்தவர் ராமையன் (வயது 65).

    இவர் திங்கள்நகர் ராதாகிருஷ்ணன் கோவில் அருகில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் அதே பகுதியைச் சேர்ந்த கருணாநிதி (55) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.சம்பவத்தன்று கருணாநிதி கடையில் இருக்கும் போது 2 வாலிபர்கள் வந்து ஒருவர் ராசிக்கல் கேட்டுள்ளார்.

    கருணாநிதி எடுத்துக் கொடுக்கும் போது மற்றொரு வாலிபர் கல்லாவில் இருந்த ரூ.15 ஆயிரம் ரொக்கப்ப ணம் மற்றும் 16 கிராம் தங்க நகைகளையும் எடுத் துள்ளார். பின்னர் அவர்கள் வாங்கிய ராசிக்கல்லுக்கான பணத்தை கொடுத்து விட்டு வாலிபர்கள் சென்றனர்.

    சிறிது நேரம் கழித்து பணம் மற்றும் நகைகளை காணாததை கண்ட கருணாநிதி அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து உரிமை யாளர் ராமை யனுக்கு தகவல் தெரிவித்தார். இது குறித்து கருணாநிதி இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் சம்பவ இடம் வந்த இரணியல் போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக் களை ஆய்வு செய்தனர்.

    அப்போது சி.சி.டி.வி.யில் கொள்ளையர்கள் 2 பேர் நடந்து செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட் டுள்ளது.

    • ஊஞ்சலூர் பகுதியில் தொடர்ந்து மர்ம விலங்கு புகுந்து ஆடுகள், கோழிகளை வேட்டையாடி வருகிறது. இதை தடுக்க வேண்டும் என ெபாது மக்கள் கோரிக்கை வைத்தனர்.
    • எனவே மின்விளக்கு எரிய விட வேண்டும். நாய்கள் நடமாட்டம் உள்ள முக்கியமான 3 இடங்களில் நாய்களை பிடிக்க கூண்டு வைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டன.

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே ஊஞ்சலூர் பகுதியில் தொடர்ந்து மர்ம விலங்கு புகுந்து ஆடுகள், கோழிகளை வேட்டையாடி வருகிறது. இதை தடுக்க வேண்டும் என ெபாது மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    இந்த நிலையில் மர்ம விலங்கு நடமாட்டம் தடுப்பு நடவடிக்கைக்கான அவசர ஆலோசனைக் கூட்டம் கொடுமுடி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் மாசிலாமணி தலைமையில் நடைபெற்றது.

    இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த், கரட்டாம்பாளையம் கால்நடை மருத்துவர் ெஜயலட்சுமி, கொடுமுடி கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன், கொடுமுடி பேரூராட்சி உதவியாளர்கள் செந்தில், பாஸ்கரன், வெங்கம்பூர் பேரூராட்சி தலைவர் தனலட்சுமி, தீயணைப்புத்துறை சரவணன், வனக்காவலர்கள் கீர்த்தனா, துரைராஜ் மற்றும் பொதுமக்கள்கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் இந்த பகுதியில் சுற்றி திரியும் நாய்கள் மற்றும் மர்ம விலங்கை பிடிக்க உடனடி யாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆடு வளர்ப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஆடுகளுக்கு இன்சூரன்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

    50 ஆடுகளுக்கு மேல் கால்நடைகள் வளர்ப்ப வர்கள் ஆட்டுபட்டியில் சி.சி.டி.வி. கேமிரா பொருத்தி கொள்ள வேண்டும்.

    ஆடுகள் கட்ட ப்பட்டுள்ள இடங்களில் மின்விளக்கு எரிய விட்டால் வனவிலங்குகள் வராது.எனவே மின்விளக்கு எரிய விட வேண்டும். நாய்கள் நடமாட்டம் உள்ள முக்கியமான 3 இடங்களில் நாய்களை பிடிக்க கூண்டு வைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டன.

    • மது அருந்துவதற்கு பணம் கேட்டதாக வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு
    • படுகாயமடைந்தவர்களுக்கு குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே மேற்கு நெய்யூர் சரல்விளையை சேர்ந்தவர் அருமைநாயகம்.இவரது மகன் சேகர் (வயது 37). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.விடுமுறையில் கடந்த மாதம் ஊருக்கு வந்துள்ளார்.

    நேற்று முன்தினம் சேகர் மற்றும் அவரது உறவினர் அஜயன் (32) ஆகியோர் பைக்கில் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பினர். வீட்டுக்கு செல்லும் வழியில் அதே பகுதியை சேர்ந்த இன்பராஜ் (34), அஜித்ராம் (34), பிரதீப் (32), ஸ்டாலின் (31) ஆகியோர் காரை நிறுத்தியிருந்தனர்.இதை பார்த்த சேகர், காரை வழிவிட்டு நிறுத்துமாறு கூறினார்.

    அப்போது 4 பேரும் மது அருந்துவதற்கு சேகரிடம் பணம் கேட்டதாக கூறப்ப டுகிறது. இதற்கு சேகர் மறுத்தார். இது சம்பந்தமாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஆனது.பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.கலைந்து சென்ற 4 பேரும் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து சேகரின் வீட்டு காம்பவுண்டுக்குள் புகுந்து கார் கண்ணாடி மற்றும் சி.சி.டி. கேமராக்களை அடித்து உடைத்தனர். இதை தடுத்த சேகர் மற்றும் உறவினர் அஜயன் ஆகியோரை அவர்கள் தாக்கி மிரட்டல் விடுத்து சென்றனர்.

    படுகாயமடைந்த இருவரும் குளச்சல் அரசு மருத்து வமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறிப்பாக குளச்சல் போலீசார் மேற்கூறிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×