search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலைகள் பழுது"

    • தீர்வு கிடைக்குமா? என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
    • குறிச்சி காந்திஜி ரோடு பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    குனியமுத்தூர்,

    கோவை சுந்தராபுரம் பகுதியில் குறிச்சி காந்திஜி ரோடு அமைந்துள்ளது. இந்த பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இச்சாலையானது பொள்ளாச்சி ரோட்டில் இருந்து ஆரம்பித்து சாரதாமில் ரோட்டில் முடிவடைகிறது.

    கிட்டத்தட்ட 2 கிலோ மீட்டர் தூரத்தில் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையை பாரதி நகர் ,கேடிஎஸ் காலனி, தாயம்மாள் லே-அவுட் ,முருகன் கோவில் வீதி, முது பார் கோவில் வீதி, காமாட்சி அம்மன் கோவில் வீதி, லோகநாதபுரம், ஆண்டாள் தோட்டம் பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    மேலும் நாள் ஒன்றுக்கு இந்த வழியாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ேமாட்டார் சைக்கிள் உள்பட பல்வேறு வாகனங்களும் சென்று வரும் சாலையாகவும் உள்ளது.

    இப்படிப்பட்ட இந்த சாலையானது பல ஆண்டுகளாக தார் சாலையாக இல்லாமல், மண் சாலையாகவும், குண்டும் குழியுமாகவும் காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலைகளில் செல்லும்போது வாகன ஓட்டிகள் மீது புழுதி படிகிறது. சிறு, சிறு விபத்துக்களும் ஏற்படுகிறது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    இந்த சாலை ஆங்காங்கே குண்டும் குழியுமாக காட்சி அளிப்பதால் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஆங்காங்கே விழுந்து விடும் சூழ்நிலை உள்ளது. காலை, மாலை வேளைகளில் குழந்தைகளை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்கள் தட்டுத்தடுமாறி செல்கின்றனர்.

    இப்பகுதியில் வசிப்பவர்கள் கால் டாக்ஸி மற்றும் ஆட்டோவை அழைக்கும் போது காந்திஜி ரோடு வருவதற்கு மட்டும் அழைக்க வேண்டாம் என கூறும் நிலையில் சாலை உள்ளது.

    கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இச்சாலையில் மினிபஸ் ஓடி வந்தது. தற்போது சாலையின் அவல நிலைகண்டு ,மினி பஸ்களும் வருவதில்லை. இதனால் வெளியே செல்வதற்கு மிகுந்த சிரமம் அடைந்துள்ளோம். இதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல வேண்டி இடத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறோம்.

    மேலும் குண்டும் குழியுமான சாலை காரணமாக, பல முறை ஓடும் ஆட்டோவில் குழந்தை பிறந்த சம்பவம் இந்த சாலைக்கு வரலாறு உண்டு.

    இத்தகைய அவல நிலையில் வாழ்ந்து வருகிறோம். இதுதவிர பாதாள சாக்கடை திட்டம் என்று பல்வேறு திட்டங்களை முன்னிறுத்தி, ஆங்காங்கே தோண்டி சாலையை பிளாக் செய்து விடுகின்றனர். இதனால் இப்பகுதியில் வாழும் மக்களாகிய நாங்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளோம்.

    இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எத்தனையோ முறை கூறியும் எந்தவித பயனும் இல்லை. எனவே இப்பகுதியில் அதிவிரைவில் இச்சாலையை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கோவை மாவட்டத்திலேயே மிக மோசமான சாலை என்று கணக்கெடுத்தால், குறிச்சி காந்திஜி ரோட்டை தான் கூற முடியும். இந்த அவல நிலை மாற வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனியாவது நடவடிக்கை எடுத்து ,இப்பகுதி மக்களை மனஉளைச்சலில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றனர்.

    • வர்த்தகம் பாதிக்கும் சூழல் ஏற்படுவதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
    • மண்டிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளது.

    இதில் 6 வார்டு பகுதியில் உருளைக்கிழங்கு, பூண்டு, பெரிய வெங்காயம், சாக்கு உள்ளிட்ட மண்டிகள் உள்ளன. இந்த மண்டிகளில் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இதன்மூலம் தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களுக்கும் இங்கிருந்து உருளைக்கி ழங்கு, பூண்டு, பெரிய வெங்காயம் சாக்கு உ ள்ளிட்டவை ஏற்றுமதி, இறக்குமதி மேற்கொள்ள ப்படுகிறது. ஆனால் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக மேட்டுப்பாளையம் நகர பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பகுதிகளில் பல இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு வருகிறது.

    இதில் மேட்டு ப்பாளையம் உருளைக்கி ழங்கு மண்டி பகுதிகளில் பாக்குகார சாலை செல்லும் வழியில் உள்ள கிழங்கு மண்டி சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனை பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள் யாரும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

    இச்சாலை வழியாக அனைத்து மகளிர் காவல் நிலையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மகாஜன பள்ளி உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு மக்கள் சென்று வரும் வழியாக உள்ளது. மேலும் நெல்லித்துறை சாலை வழியாக தினசரி நிலகீரி, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து இறந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய வாகனங்களில் எடுத்து செல்கின்றனர். இதுபோன்ற நேரங்களில் இச்சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் பொதுமக்களும், வியாபா ரிகளும் பெரும் அலைச்சலுக்கு உள்ளாகி வருகின்றன. எனவே இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.இதுகுறித்து மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மண்டியின் உபதலைவர் எம்.என்.கோபால், செயலாளர் பி.ரங்கசாமி ஆகியோர் கூறியதாவது:-

    மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மண்டி பகுதியில் தினசரி கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறுகிறது. இத ன்மூலம் ஆயிரக்க ணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் உள்ளது.

    இப்பகுதிகளில் பல ஆண்டுகளாக சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் உருளைக்கிழங்கு மண்டி பகுதிகளில் வர்த்தகம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×