search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாரைபாம்பு"

    • வனத்துறையினர் பிடித்தனர்
    • காப்பு காட்டில் விடப்பட்டது

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பேரூராட்சி, அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் குமரகுரு. இவரது வீட்டிற்குள் 5 அடி நீளமுடைய சாரைபாம்பு ஒன்று புகுந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த குமரகுரு குடும்பத்தினர் ஒடுகத்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனச்சரக அலுவலர் இந்து தலைமையிலான வீரர்கள் 5 அடி நீளம் கொண்ட சாரைபாம்பை பிடித்து பரவமலை காப்பு காட்டில் விட்டனர்.

    • உணவகத்தில் ஊழியர்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
    • சமையலறைக்கு வரும் எலிகளை பிடிக்க பாம்பு பின்புறம் உள்ள வாய்க்கால் வழியாக வந்தது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுவை எல்லைப்பில்ளை சாவடியில் எலும்பு சிகிச்சைக்கான தனியார் மருத்துவமனை உள்ளது.

    இங்குள்ள உணவகத்தில் ஊழியர்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதை கண்டு அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வனத்துறையிலிருந்து வந்த ஊழியர் கண்ணன் சமையல் அறை அருகே விளம்பர பேனர் பின்புறம் மறைந்திருந்த பாம்பை போராடி பிடித்தார். பெண் செவிலியர் பாம்பை பிடிக்க உதவினார். பிடிபட்டது 5 அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பாகும்.


    ×