search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மருத்துவமனையில் புகுந்த 5 அடி நீள சாரை பாம்பு
    X

    மருத்துவமனையில் புகுந்த 5 அடி நீள சாரை பாம்பு

    • உணவகத்தில் ஊழியர்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
    • சமையலறைக்கு வரும் எலிகளை பிடிக்க பாம்பு பின்புறம் உள்ள வாய்க்கால் வழியாக வந்தது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுவை எல்லைப்பில்ளை சாவடியில் எலும்பு சிகிச்சைக்கான தனியார் மருத்துவமனை உள்ளது.

    இங்குள்ள உணவகத்தில் ஊழியர்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதை கண்டு அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வனத்துறையிலிருந்து வந்த ஊழியர் கண்ணன் சமையல் அறை அருகே விளம்பர பேனர் பின்புறம் மறைந்திருந்த பாம்பை போராடி பிடித்தார். பெண் செவிலியர் பாம்பை பிடிக்க உதவினார். பிடிபட்டது 5 அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பாகும்.


    Next Story
    ×