search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சன்னி டியோல்"

    பா.ஜனதா கட்சியில் சமீபத்தில் இணைந்த நடிகர் சன்னி டியோல் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் பாராளுமன்ற தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். #LokSabhaElections2019 #SunnyDeol
    புதுடெல்லி:

    பிரபல இந்தி நடிகர் சன்னி டியோல் கடந்த 23-ந்தேதி பா.ஜனதா கட்சியில் இணைந்தார். பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசினார்.

    இதையடுத்து குர்தாஸ்பூர் தொகுதியில் நடிகர் சன்னி டியோல் பா.ஜனதா சார்பில் போட்டியிடக்கூடும் என்று தகவல்கள் வெளியானது. அதை உறுதிப்படுத்தும் வகையில் அவர் குர்தாஸ்பூர் தொகுதி பா.ஜனதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    இதற்காக நேற்று பிரதமர் மோடியை சந்தித்து சன்னி டியோல் நன்றி தெரிவித்தார். முன்னதாக அவர் கடந்த சனிக்கிழமை ராஜஸ்தான் மாநிலம் பார்மர் தொகுதியில் ரோடு ஷோ நடத்தி பிரசாரம் செய்தார்.

    இன்று நடிகர் சன்னி டியோல் குர்தாஸ்பூர் தொகுதியில் வேட்பு மனுதாக்கல் செய்தார். அவருடன் மறைந்த நடிகர் வினோத்கன்னாவின் மனைவி கவிதாகன்னா, மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் ஆகியோர் உடன் சென்றனர்.

    முன்னதாக நடிகர் சன்னி டியோல் அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலுக்கு சென்றார். அங்கு தேர்தல் வெற்றிக்காக சிறப்பு வழிபாடுகள் செய்தார். வேட்பு மனுதாக்கல் செய்ததை தொடர்ந்து நாளை முதல் குர்தாஸ்பூர் தொகுதியில் தீவிர பிரசாரத்தை தொடங்க சன்னி டியோல் திட்டமிட்டுள்ளார்.



    குர்தாஸ்பூர் தொகுதி பா.ஜனதா கட்சியின் கோட்டையாக கருதப்படும் தொகுதியாகும். பிரபல மறைந்த நடிகர் வினோத் கன்னா இந்த தொகுதியில் 1998, 1999, 2004, 2014-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்றார்.

    வாஜ்பாய் அமைச்சரவையில் மந்திரியாகவும் வினோத் கன்னா இருந்தார். இதனால் இந்த தொகுதி பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதியாக நீடிக்கிறது.

    இந்த தொகுதியை பா.ஜனதாவிடம் கைப்பற்றுவதற்காக பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாக்கர் தானே அந்த தொகுதியில் களம் இறங்கி உள்ளார். இதனால் அந்த தொகுதியில் காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    காங்கிரசின் தேர்தல் வியூகத்துக்கு பதிலடி கொடுப்பதற்காகவே நடிகர் சன்னி டியோலை பா.ஜனதா குர்தாஸ்பூர் தொகுதி வேட்பாளராக நிறுத்தி உள்ளது. பிரபல இந்தி நடிகர் தர்மேந்திராவின் மகனான சன்னி டியோலுக்கு அந்த தொகுதியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    வினோத் கன்னாவின் மனைவி கவிதா தீவிர பிரசாரம் செய்து சன்னி டியோலுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். ஹேமமாலினியும் சன்னி டியோலுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளார்.

    பா.ஜ.க.வில் இணைந்தவுடன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்ட பாலிவுட் நடிகர் சன்னி டியோல் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். #SunnyDeol #Modi
    புதுடெல்லி:

    இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சன்னி டியோல். இவர் பிரபல இந்தி நடிகர் தர்மேந்திராவின் முதல் மனைவியின் மகன். தர்மேந்திரா பா.ஜ.க. சார்பில் கடந்த 2004-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்றவர்.
     
    தர்மேந்திராவின் இரண்டாவது மனைவியும் நடிகையுமான ஹேமமாலினியும் பா.ஜ.க. வேட்பாளராக மதுரா பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

    இதற்கிடையே, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் சன்னி டியோல் சமீபத்தில் பா.ஜ.க.  கட்சியில் இணைந்தார். அன்றிரவே பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குர்தாஸ்பூர் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டார்.



    இந்நிலையில், சன்னி டியோல் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட மோடி, ’சன்னி டியோலின் எளிமையும், தன்னடக்கமும் தன்னை வெகுவாக கவர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

    நாடு நன்றாக இருக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்ட சன்னி டியோல் குர்தாஸ்பூர் தொகுதியில் வெற்றிபெற தனது நல்வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துள்ளார். #SunnyDeol #Modi #SunnyDeolmeetsModi #ModimeetsSunnyDeol 
    ×