search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சனி தோஷம்"

    கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகங்களை சொல்லி சனி பகவானை வழிபடுபவர்களுக்கு எல்லாத் துன்பங்களையும் சனிபகவான் போக்குவதுடன் அவர்களுக்கு நீண்ட ஆயுளைத் தருவார்.
    நவக்கிரகங்களில் வலிமையான கிரகமாகத் திகழ்பவர் சனி பகவான். சனியைப் போல் கொடுப்பவருமில்லை; சனியைப் போல் கெடுப்பவருமில்லை என்பர். எனவே சனிக்கிரக தோஷம் உள்ளவர்கள் பரிகாரம் செய்யக் கூடிய முக்கியத்தலமாகத் திகழ்வது திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயம்.
     
    இங்கே கோவில் கொண்டு அருள் புரியும் சனி பகவானை வழிபடுபவர்களுக்கு சனி தோஷ நிவர்த்தி கிடைக்கப் பெற்று எல்லாத் துன்பங்களையும் சனிபகவான் போக்குவதுடன் அவர்களுக்கு நீண்ட ஆயுளைத் தருவார்.
     
    சனி தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சனி தசை அல்லது சனி அந்தர் தசையின் போது: சனியின் கடவுளான அனுமனைத் தினமும் வழிபடவேண்டும். தினசரி அனுமன் சாலிசா அல்லது அனுமான் ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.
     
    சனி மூலமந்திர ஜபம்:

    "ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ", - 40 நாட்களில் 19000 முறை சொல்ல வேண்டும்.
     
    சனி ஸ்தோத்திரம்:

    நீலாஞ்ஜன ஸமாபாஸம்
    ரவிபுத்ரம் யமாக்ரஜம்!
    ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்
    தம் நமாமி சனைச்சரம்!!
     
    தமிழில்:

    சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
    மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்!
    சச்சரவின்றிச் சாகா நெறியில்
    இச்சகம் வாழ இன்னருள் தா தா!!
     
    சனி காயத்ரி மந்திரம்:


    காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி|
    தந்நோ மந்த: ப்ரசோதயாத்||
     
    சனி தசையின்போது வால்மீகி ராமாயணத்தில் பாலா காண்டத்தின், 30-வது அத்தியாயம் தினமும் படிக்க வேண்டும். அனைத்து சனி தொடர்பான பிரச்சனைக்கும் தசரத சனி ஸ்தோத்திரம் ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.
    , கர்மப் பதிவுகளின் வெளிப்பாட்டை அன்றாட அனுபவமாக வெளிப்படுத்தும் சனீஸ்வரரின் ஆதிக்க நாளான சனிக்கிழமையை நாம் விரத நாளாக கடைப்பிடிக்க வேண்டும்.
    அரசர் முதல் ஆண்டி வரை சனி என்றாலே ஒருகணம் சிந்தனையில் ஆழ்ந்து விடுவர். காரணம் நன்மை தீமை இரண்டையும் உறுதியாகவும் சரியாகவும் செய்யக் கூடிய கதிர் வீச்சுகளை தமது இயல்பாக அமைந்தது சனிக்கிரகம். அதுமட்டுமின்றி ஒருவரது ஆயுள், ஆரோக்கியதன்மைகளின் அளவீட்டு முறைகளை குறிப்பிடும் அம்சமும் உடைய ஒரு மெதுவான கிரகம் 'சனீஸ்வரன்' எனப்படும் 'காரி' ஆகும்.

    இது வாரநாட்களில் ஏழாவது நாளாக வரும். தனிமனித வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளை துல்லியமாகக் குறிப்பிட்டுக் காட்டக் கூடிய அலை இயக்கத்தை, ஜனன கால நேரத்தில், ஒருவருக்கு அமையக்கூடிய வாழ்வியல் பக்கங்களின் அனுபவப் பதிவுகளை, செயல் களமாக்கிக் காட்டி உலகியல் அனுபவம் பெற வைக்கக் கூடிய மிகப்பெரும் தனித்தன்மை சனிக்கிரகத்துக்கு உண்டு.

    ஒவ்வொரு மாதத்திலும் 8, 17, 26 ஆகிய தேதிகளிலும், மகரம், கும்பம் ராசிகளிலும், சனிக்கிழமைகளிலும் பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களிலும் பிறந்தவர்கள் சனீஸ்வரனின் கிரக அலை இயக்கத்தை நன்மை தரத்தக்க அமைப்பில் கூடுதலாகப் பெற்றவர்களாவார்கள்.

    மேற்கூறிய அமைப்பில் பிறந்தவர்கள், கலியுகம் சார்ந்த ஆதிக்க அம்சம் பெற்றிருக்கும் சனீஸ்வரனால் தொழில், தொழில் நுட்பம், அறிவு, உழைப்பு, உலகியல் சார்ந்த இரு கூறு அனுபவங்கள் (இன்பம்-துன்பம்) ஆகியவற்றில் பிறரை விட முன்னணியில் இருப்பார்கள். துன்பத்தால் துவண்டு போனாலும் கூட ஒரு காலகட்டத்தில் நிச்சயம் வாழ்வில் தலையெடுத்து வெற்றிநடை போடுவார்கள்.

    உடலின் கால்சியம் சத்து, எலும்புகளின் வலிமை, கைகால் மூட்டுகள், மருத்துவச் சிகிச்சைக்குக் கட்டுப்படாத நோய்கள் ஆகியவற்றை சனி குறிப்பிட்டுக் காட்டும். சனியின் பலம் ஒரு ஜாதகத்தில் இருந்தால் தன் மக்களுடைய ஆதரவால் பதவிகளை அடைய இயலும். அது சிறிதோ பெரிதோ சனி பகவான் ஒருவருடைய பிறந்த காலத்தில் பலமாக அமைந்திருக்க வேண்டியது முக்கியம்.

    தொழில் அல்லது வேலை வாய்ப்புகளில் இருக்கும் நிரந்தரமற்ற தன்மைகளையும், நோய் நொடிகளையும் சனி வார விரத பூஜா முறைகளால் நாம் தீர்க்க முடியும். மேலும் சனி திசை, ஏழரைச்சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டகச் சனி, ஆகிய கோட்சாரக் கோளாறுகளை சனிக்கிழமை விரத முறைகள் நல்ல முறையில் தீர்த்து வைக்கும் சக்தி பெற்றவை ஆகும்.

    காரணம் தெரியாத தொழில் வகைச் சிக்கல்கள், ஒருவரது சகிப்புத் தன்மையையும் தாண்டிய தினசரி சோதனைக்களமாக அமைந்த பணியிடச் சங்கடங்கள், மருத்துவ உலகிற்கு சற்றும் பிடிகொடுக்காத நோய் நொடிகள் ஆகிய துன்ப துயரங்கள் அனைத்தும் சனியினால் வரக்கூடியவையாகும்.

    இவற்றை நாம் தீர்க்க அல்லது தவிர்க்க வேண்டுமானால், கர்மப் பதிவுகளின் வெளிப்பாட்டை அன்றாட அனுபவமாக வெளிப்படுத்தும் சனீஸ்வரரின் ஆதிக்க நாளான சனிக்கிழமையை நாம் விரத நாளாக கடைப்பிடிக்க வேண்டும்.

    மேலும், அந்த நாளில் ஆதரவற்ற முதியோர்களுக்கு பொருள் உதவி செய்யும் நாளாகவும், வயதில் மூத்த பெரியோர்களிடம் ஆசிகளைப் பெறும் நாளாகவும், உடல் ஊனமுற்ற ஆதரவற்றவர்களுக்கு வஸ்திர தானம் வழங்கும் நாளாகவும் கடைப் பிடிப்பது மிக முக்கியமானதாகும்.

    “சனி கெடுப்பின் யார் கொடுப்பார், சனி கொடுப்பின் யார் கெடுப்பார்”

    சனியை போன்று கொடுப்பவரும் இல்லை சனியை போன்று கெடுப்பவரும் இல்லை.
    சனீஸ்வரா! எனக்கு உன்னால் வரும் கெடுபலன்களில் இருந்து காப்பாற்று, என மனதால் தியானம் செய்ய வேண்டும்.
    ” நாம் கிரகங்கள், நட்சத்திரங்களில் இருந்து தான் பிறந்திருக்கிறோம். நம் பூர்வீகமே நட்சத்திரங்கள் தான். அவைகளைப் பற்றி எந்த அளவுக்கு அறிந்து கொள்கிறோமோ, அந்த அளவுக்கு நம்முடைய எதிர்காலம் நன்றாக அமையும்.”

    சனீஸ்வரர் பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிப்பட்டால் 7½ ரையும் விலகி 8 ஆகும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.

    ஏழரைச்சனி, அஷ்டமத்து சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனி இவைகள் தங்கள் வாழ்க்கையில் பெரும் பின்னடவை ஏற்படுத்தும் என நினைக்கிறார்கள். இதற்காக பல பரிகாரங்களைச் செய்கிறார்கள்.

    அதில் தவறில்லை. ஆனால், செலவே இல்லாமல் எளிய அறிவியல் பரிகாரம் ஒன்று உள்ளது. நம் பூர்வீகமே நட்சத்திரங்கள் தான். அவைகளைப் பற்றி எந்த அளவுக்கு அறிந்து கொள்கிறோமோ, அந்த அளவுக்கு நம்முடைய எதிர்காலம் நன்றாக அமையும். கிரகம், நட்சத்திரங்களை நோக்கி தியானம் செய்தால் நற்பலனை நிச்சயம் நம்மால் பெற முடியும்.

    சூரியனுக்கு அருகில் சனி இருப்பதாக மனதில் கற்பனை செய்து, சனீஸ்வரா! எனக்கு உன்னால் வரும் கெடுபலன்களில் இருந்து காப்பாற்று, என மனதால் தியானம் செய்ய வேண்டும். இந்த முறையில் இரவில் அல்லது பகலில் எந்த நேரத்திலும் மனத்திரையில் கண்டு தியானிக்கலாம்.

    சனி மட்டுமல்ல! பிற கிரகப்பெயர்ச்சிகளால் நமக்கு பிரச்சனை இருந்தாலும், சம்பந்தப்பட்ட கிரகங்களுடன் ஒன்றாகவோ அல்லது குறிப்பிட்ட கிரகத்துடன் அன்றைய நாளில் சம்பந்தப்பட்ட நட்சத்திரத்துடன் ஒன்றிக் கலந்தோ உயிர்க்கலப்பு பெறலாம்.

    கிரகங்களின் இருப்பிடத்தை மனத்திரையில் கண்டு தியானத்தில் ஆழ்ந்து விடுவதன் மூலம் அவைகளிடம் இருந்து காந்த அலைக்கதிர்களை நம்மால் ஈர்க்க முடியும். 10 அல்லது 15 நிமிடம் இந்த தியானத்தை செய்வதன் மூலம் கிடைக்கும் பலன், கோயில்களில் நவக்கிரகங்களை வலம் வந்து அடையும் பலனுக்கு ஈடாகவோ இருக்கும்.

    உங்கள் பிறந்த நட்சத்திர நாளில், உங்களது நட்சத்திரம் இருக்குமிடத்தை உத்தேசமாகக் கணக்கிட்டு அந்த இடத்திற்கு மனதால் சென்று தியானம் செய்பவர்கள் பிரத்யேக பலனைப் பெற முடியும்.
    அஷ்டமத்து சனி, ஜென்ம சனி, கண்ட சனி, ஏழரை சனி நடப்பவர்கள் இம்மந்திரத்தை சனிக்கிழமைகளில் 108 முறை உச்சரித்து வழிபட வேண்டும்.
    மந்திரம்:

    நீலாஞ்சன ஸமாபாசம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்
    சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைச்ரம்

    பொதுவான பொருள்: “நீல நிற மலையைப் போல் தோற்றம் கொண்ட சனி பகவானே, சூரியனின் புத்திரனும் எமதர்மனின் சகோதரனுமானவனே, “சாயா” “மார்த்தாண்ட” என்கிற சூரியபகவானின் மைந்தனே, மிக மெதுவாக சுழல்பவனே, உனக்கு என் பணிவான வணக்கங்கள்” என்பது இம்மந்திரத்தின் பொதுவான பொருளாகும்.

    இம்மந்திரத்தை சனிக்கிழமைகளில் நீராடிய பிறகு, அருகிலுள்ள கோவிலுக்கு சென்று சனி பகவானுக்கும் அந்த கோவிலின் ஸ்தல விருட்சமாக இருக்கும் மரத்திற்கும் கருப்பு எள் கலந்த நல்லெண்ணெய் தீபத்தை ஏற்றி, இம்மந்திரத்தை 108 முறை உச்சரித்து வழிபட வேண்டும். மேலும் அன்றைய தினம் காக்கைகளுக்கு உணவு கொடுக்க வேண்டும். இதனால் சனி பகவான் மனம் குளிர்ந்து உங்களுக்கு அவரின் தசை காலங்களில் ஏற்படும் கஷ்டங்களின் கடுமை தன்மையை குறைப்பார்.
    சனியினால் ஏற்படும் பாதிப்புகள், சனி தசாபுத்தி பாதிப்புகள் நீங்க ‘நளபுராணம்’ மற்றும் சம்பந்தரின் இத்தல ‘போகமார்த்த பூண்முலையாள்’ எனத் தொடங்கும் பதிகத்தை, ஒருமண்டலம் பாராயணம் செய்து, திருநள்ளாறு திருத்தலம் வந்து வழிபட வேண்டும்.
    வியாசர் இயற்றிய மகாபாரதத்தின் வன பருவத்தில், சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் வனத்தில் இருக்கிறார்கள். அப்போது அவர்களை சந்தித்து ஆறுதல் சொன்ன பிரகஸ்தவ முனிவர், பாண்டவர்களுக்கு ‘நளபுராணம்’ என்னும் நளன்- தமயந்தி சரித்திரத்தை சொல்கிறார். இதிலிருந்து மகாபாரத காலத்திற்கு முந்தையது, நளன்- தமயந்தி சரித்திரம் என்பது புலனாகிறது.

    நிடத நாட்டை வீரசேனன் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவனுடைய மகன் நளன். ஒருநாள் நளன், அன்னப்பறவை ஒன்றைக் கண்டான். அவனது பேரழகைக் கண்ட அன்னப் பறவை, “மன்னா! உன் அழகுக்கு ஏற்புடையவள், விதர்ப்ப நாட்டை ஆண்டு வரும் வீமசேனனின் மகள் தமயந்தி தான். அவள் அழகும், பொலிவும், நால்வகை குணங்களும் கொண்டவள். உனக்காக அவளிடம் தூது சென்று வருகிறேன்' என்றது.

    இப்படி தமயந்தியின் குணநலன்களை, அன்னத்தின் மூலம் கேட்டறிந்த நளன், தமயந்தியின் மீது காதல் கொண்டான். அதே போல் நளனைப் பற்றி அன்னம் கூறுவதைக் கேட்டு, தமயந்தியும் நளன் மீது மையல் கொண்டாள்.

    இந்த நிலையில் தமயந்திக்கு சுயம்வரம் ஏற்பாடு செய்யப்பட்டது. சுயம்வரத்திற்கு நளன் உட்பட மண்ணுலக மன்னர்கள் பலரும் வந்தனர். அதே நேரத்தில் தமயந்தியின் அழகில் மயங்கிய இந்திரன் உள்ளிட்ட விண்ணுலக தேவர்களும் வந்திருந்தனர். நளன் மீது தமயந்தி கொண்டக் காதலை ஏற்கனவே அறிந்திருந்த தேவர்கள், அவளின் கண்ணுக்கு நளனாகவே காட்சி தந்தனர். தன் முன்பாக இத்தனை நளன் உருவம் இருப்பதை கண்டு தமயந்தி திகைத்துப் போனாள்.

    ‘இவர்களில் உண்மையான நளனை எப்படிக் கண்டறிவது?’ என்று சிந்தித்தாள். ‘தேவர்களின் கண்கள் இமைக்காது; அவர்கள் சூடும் மாலை வாடாது’ என்பதை அறிந்திருந்த தமயந்தி, உண்மையான நளனை கண்டறிந்து மணமாலை சூட்டினாள். அவர்களின் இனிமையான இல்லற வாழ்விற்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன.

    இதற்கிடையில் நளன் மீது கோபம் கொண்ட தேவர்கள், சனி பகவானிடம், நளனை துன்புறுத்தும்படி கூறினர். அவரும் நளனை 7½ ஆண்டுகள் பிடித்தார். இதனால் புஷ்கரனோடு சூதாடி, நளன் தன் நாட்டை இழந்தான். மனைவியோடு காட்டிற்குச் சென்றான். அங்கிருந்து மனைவியையும் பிரிந்தான். அப்போது நளனை, கார்கோடகன் என்ற பாம்பு தீண்டியது. இதனால் அவனது உடல் கருப்பாகி, குள்ள உருவம் பெற்றான்.

    இதையடுத்து வாகுனன் என்ற பெயரோடு, அயோத்தி அரசனாக இருந்த ரிதுபன்னனிடம் தேரோட்டியாக சேர்ந்தான் நளன்.

    அப்போது தனக்கு சுயம்வரம் என்று அறிவித்தால், நளன் நிச்சயமாக திரும்பி வருவான் என்று தமயந்தி நினைத்தாள். அதன்படி தன் தந்தையிடம் கூறி சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்தாள். சுயம்வரத்திற்கு ரிதுபன்னன் சென்றான். அவனுக்கு தேரோட்டியாக நளனும் சென்றான். அவனைக் கண்டு கொண்ட தமயந்தி, அவனுக்கு மாலை அணிவித்தாள். பின்னர் கார்கோடகன் அளித்த ஆடையை நளனுக்கு போர்த்தியதில் அவன் சுய உரு பெற்றான். நளனும் தமயந்தியும் மீண்டும் ஒன்றிணைந்தனர்.

    பின்னர் பரத்வாஜ முனிவரின் வழிகாட்டலின்படி, தர்ப்பைப் புற்கள் நிறைந்த வனத்திற்கு வந்தான் நளன். அங்கு தீர்த்தம் உண்டாக்கி நீராடி, சுயம்புவாக தோன்றிய தப்பைப் புற்கள் படிந்த தழும்புடன் காணப்பட்ட லிங்கத்திற்கு, குங்கிலிய தூபம் காட்டி வழிபட்டான். என்ன ஆச்சரியம் அதுவரை அவனைப் பிடித்திருந்த சனி தோஷம் நீங்கியது. அந்த இடம் தான் இப்போதைய திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம் ஆகும். இத்தல ஈசனின் உடனுறை சக்தியாக ‘போகம் ஆர்த்த பூண்முலையாள்’ எனும் ‘பிராணாம்பிகை’ தெற்குப் பார்த்த வண்ணம் அருள்கிறாள்.

    இந்த ஆலயத்தின் கருவறைக்கு வலது புறம், உன்மத்த நடனம் புரியும் தியாக விடங்கர் சன்னிதி இருக்கிறது. அருகில் மரகத லிங்கம் உள்ளது. தியாகராஜருக்கு எதிரில் நந்தி நின்ற வண்ணமும், பிரகாரத்தில் சுந்தரர் சன்னிதியும் உள்ளது. இத்தல தியாக விடங்கர் சன்னிதி அருகில் பிற ஆறு விடங்கத் திருத்தல லிங்கங்கள் பலிபீடங்களுடன் அமைந்துள்ளன.

    இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் ஈசனின் கருவறைக்குள் நுழைந்ததுமே, நளனைப் பிடித்திருந்த சனி தோஷம் முழுமையாக நீங்கிவிட்டது. அதனால் தான் அம்பாள் சன்னிதிக்கு அருகே, கட்டை கோபுரத்தின் வெளிச் சுவற்றின் மாடத்தில் சனி பகவானின் சன்னிதி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆலயத்தில் நவக்கிரக சன்னிதி இங்கு கிடையாது. இங்கு சொர்ண கணபதி, நால்வர், வள்ளி- தெய்வானை உடனுறை முருகப்பெருமான், ஆதிபுரீஸ்வரர், காளகஸ்தீஸ்வரர், ஆதிசேஷன், நாகலிங்கம், நாகர்கள், கலி நீங்கிய நளன், கஜலட்சுமி, மகாவிஷ்ணு, ஜுரதேவர், அறுபத்து மூவர், சப்தமாதர்கள், அர்த்தநாரீஸ்வரர் சன்னிதிகளும் உள்ளன. இங்கு நான்கு பைரவர்கள் அருள்கிறார்கள். மூன்று பைரவர்கள் ஒரே சன்னிதியிலும், ஒரு பைரவர் சூரியனுக்கு அருகிலும் உள்ளனர்.

    திருநள்ளாறு ஆலயத்தின் வட மேற்கில் நள தீர்த்தம் உள்ளது. இதில் நீராடி, உடுத்திக் குளித்த ஆடையை, அதற்கென குளக்கரையில் வைக்கப்பட்டுள்ள தொட்டியில் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் அங்குள்ள நளனின் கலி தீர்த்த விநாயகர், பைரவர் சன்னிதியில் முறைப்படி வழிபடவும். பிறகு தர்ப்பாரண்யேஸ்வரர் கருவறையில் குங்குலிய தூபம் காட்டி, தீபம் ஏற்றி நறுமண மலர்கள் சாற்றி வழிபட வேண்டும். அதேபோல் அம்பாள் சன்னிதியில் குங்குமார்ச்சனை செய்து வழிபட்டு, சனி பகவானையும் தரிசிக்க வேண்டும். இதன் மூலம் கர்மவினைகள், கலி தோஷங்கள், பாவங்கள், கிரக தோஷங்கள் அகன்று நீண்ட ஆயுள், நற்புத்தி, செல்வம், ஆரோக்கியம் கிடைக்கும்.

    காரைக்காலில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 5 கிலோமீட்டர் தூரத்தில் திருநள்ளாறு அமைந்துள்ளது.

    துன்பம் நீக்கும் நள புராணம்

    தன்னால் மிகவும் துன்பப்பட்ட நளனிடம், சனி பகவான், “உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்” என்றார். உடனே நளன், “சனீஸ்வரா! நான் பட்ட துன்பம் யாருக்கும் ஏற்படக்கூடாது. என் மனைவி பட்ட துன்பமும் எந்தப் பெண்ணுக்கும் வரக்கூடாது. அதுபோல வருங்காலத்தில் எனது கதையைப் படிப்பவர்களுக்கு உங்களால் எந்தவிதமான துன்பமும் நிகழக்கூடாது” என்று வரம் கேட்டான். சனி பகவானும் அப்படியே வரம் அளித்து அருளினார்.

    எனவே சனியினால் ஏற்படும் பாதிப்புகள், சனி தசாபுத்தி பாதிப்புகள் நீங்க ‘நளபுராணம்’ மற்றும் சம்பந்தரின் இத்தல ‘போகமார்த்த பூண்முலையாள்’ எனத் தொடங்கும் பதிகத்தை, ஒருமண்டலம் பாராயணம் செய்து, திருநள்ளாறு திருத்தலம் வந்து வழிபட வேண்டும்.

    இடையனுக்கு தனி சன்னிதி

    இடையன் ஒருவன், அரசன் ஆணைப்படி திருநள்ளாறு கோவிலுக்குப் பால் கொடுத்து வந்தான். கோவில் கணக்கன், அந்தப் பாலை தன் வீட்டுக்கு பயன்படுத்தியதோடு, பொய் கணக்கு எழுதி இடையனையும் அச்சுறுத்தி வந்தான். உண்மையறியாத மன்னன், இடையன் மேல் கோபம் கொண்டான். இடையனைக் காக்க நினைத்த ஈசன், தன்னுடைய திரிசூலத்தை ஏவினார். அது கணக்கனின் தலையை கொய்தது. இடையனுக்கு ஈசன் காட்சி தந்து அருள்புரிந்தார். கணக்கனை அழிக்க சூலம் வந்தபோது, ஆலய பலிபீடம் சற்று ஒதுங்கியது. இன்றும் ஆலயத்தின் பலிபீடம் விலகி இருப்பதைக் காணலாம். ஈசனின் அருளைப் பெற்ற இடையனுக்கு, கிழக்கு கோபுரம் அருகில் சன்னிதி உள்ளது. வாழ்வில் திக்கற்ற நிலையில் இருப்பவர்களுக்கு, இத்தல ஈசன் கவசமாய் இருந்து காப்பார்.

    அருள் செய்யும் தீர்த்தங்கள்

    பிரம்மன், சரஸ்வதி மற்றும் சரஸ்வதியின் வாகனமான அன்னப் பறவை மூவரும் இத்தலத்தில் தீர்த்தம் உண்டாக்கி நீராடி, ஈசனை வழிபட்டு பேறு பெற்றனர். அந்த தீர்த்தங்கள் முறையே பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம் மற்றும் அன்ன தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. பிரம்ம தீர்த்தத்தில் மார்கழி மாதம் அதிகாலையில் நீராடி வழிபட்டால் தோஷங்கள், காக்கை வலிப்பு, குன்மம் முதலிய நோய்கள் நீங்கும். சரஸ்வதி தீர்த்தம் என்னும் வாணி தீர்த்தத்தில், தொடர்ந்து ஒரு மண்டலம் நீராடி வழிபட்டால் கல்வி, நற்குணம் கிட்டும். அன்ன தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் பிரம்மஹத்தி முதலான தோஷங்கள் விலகும் என்று தலபுராணம் கூறுகிறது.

    ஓவியம் பேசும் வரலாறு

    மதுரையில் சமணர்களுடன், திருஞானசம்பந்தர் அனல் வாதம் செய்தார். அப்போது தாம் அருளிய பதிகங்கள் அடங்கிய ஓலைச்சுவடிகளில், ஈசனை வேண்டி சம்பந்தர் கயிறு சாத்திப் பார்த்தார். அதில் திருநள்ளாற்றில் தாம் அருளிய ‘போகமார்த்த பூண்முலையாள்’ எனும் பதிகம் வந்தது. உடனே சம்பந்தர் ‘தளிர் இளவளர் ஒளி தனது எழில்’ எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடி, திருநள்ளாறு பதிக ஓலைச்சுவடியை நெருப்பில் இட்டார். அந்த ஓலைச்சுவடி எரிந்து போகாமல் அப்படியே பச்சையாக இருந்தது. சமணர்களின் பாடல்கள் அடங்கிய ஓலைச்சுவடி எரிந்து சாம்பலானது. ஆகவே தான் திருநள்ளாற்றுப் பதிகத்தைப் ‘பச்சைப் பதிகம்’ என்று போற்றுகிறார்கள். நளனின் வரலாறும், திருஞானசம்பந்தரின் பச்சைப் பதிகத்தின் வரலாறும், திருநள்ளாறு ஆலயத்தின் வெளிப்பிரகாரச் சுவற்றில் வண்ண ஓவியங்களாக இன்றும் காணப்படுகின்றன.
    சனியின் வக்கிரத்தினால் துன்பப்படுகிறவர்கள் திருவக்கரை வக்கிரகாளியம்மன் தலத்துக்கு வந்து சனிக்கோளை வணங்கினால். துன்பம் நிச்சயம் குறையும்,
    நவக்கிரகங்களில் சனி, குரு ஆகிய கோள்கள் தாம் சஞ்சரித்த ராசிகளிலேயே பின் நோக்கி சில சமயங்களில் சில நாட்களோ மாதங்களோ சஞ்சரிப்பதுண்டு. இதை ‘வக்கிரகதி’ என்று சொல்லுவார்கள்.

    சனியின் வக்கிரத்தினால் துன்பப்படுகிறவர்கள் திருவக்கரை வக்கிரகாளியம்மன் தலத்துக்கு வந்து சனிக்கோளை வணங்கினால். துன்பம் நிச்சயம் குறையும், நீங்கும் என்று நம்புகிறார்கள். அப்படிப்பலன் அடைந்தவர்கள் பலர் என்றும் சொல்லுகிறார்கள்.

    ஜாதகத்தில் சனி வக்கிரமாக உள்ளவர்கள் இங்கே வந்து பூஜித்துச் செல்லலாம். சனி பகவானின் வாகனமான காகம் தெற்கு நோக்கி இருப்பது இங்கே விசேஷம்.

    சனிதிசை, கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி உள்ளவர்கள் திருநறையூர் நாச்சியார் கோவிலில் எட்டு வாரங்கள் தொடர்ந்து அர்ச்சனை செய்துவந்தால் சிரமங்கள் குறைந்து முன்னேற்றம் அடைவது நிதர்சனமான உண்மை.
    ஆயுட் காரகன் என்று சொல்லப்படும், சனீஸ்வரபகவான் தனது இரண்டு மனைவிகளான மந்தா தேவி, ஜேஸ்டா தேவி இருவரோடும் தனது புதல்வர்களான காலத்தை நிர்ணயிக்கும் குளிகன், ஆயுளை நிர்ணயிக்கும் மாந்தி ஆகியோருடன் குடும்ப சமேதராய் அருள்பாலிக்கும் ஒரே இடம் திருநறையூர். இந்தியா முழுவதுமுள்ள கோயில்களில் இல்லாத சிறப்பாக தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் உள்ள திருநறையூர் நாச்சியார் கோயிலில் மங்களச் சனியாக குடும்பத்துடன் அருள்பாலிக்கிறார்.

    ஸ்ரீ ராமபிரானின் பிதாவாகிய தசரத சக்ரவர்த்திக்கும் சனீஸ்வர பகவானுக்கு  நடந்த நிகழ்வைப் பார்ப்போம்.

    சனி ரோஹினி நட்சத்திரத்தில் 12 வருட காலங்கள் வாசம் செய்து வெளியேறினால் ரோஷிணி சங்கடபேதம் என்னும் கடும் பஞ்சம் ஏற்படும். இதை எவராலும் தடுக்க முடியாது என்று சிவன் நாரதரிடம் தெரிவிக்க.. நாரதர் வசிஷ்ட்ட மகரிஷியிடம் கூறுகிறார். வசிஷ்ட மகரிஷி தசரதனிடம் தெரிவிக்கிறார்.

    இதைக் கேட்ட தசரதன் சனி ரோஷிணியை விட்டு கடக்கும் முன் தடுத்து நிறுத்தி போரிட தயாரானார். இந்நிலைக் கண்ட சனீஸ்வர பகவான் தசரதரை நோக்கி  ‘மானிட அரசே! உன் வீர பராக்கிரமத்தை புகழ்கிறேன். அதே நேரத்தில் பூவுலகில் மக்கள் மீது நீ கொண்ட நலனை நினைத்தும் மகிழ்கிறேன். ஆனாலும் என்னால் உங்களுக்கு உதவ இயலாது. எனக்கு வழி விடுங்கள் என்று கூறுகிறார். அப்படியும் விலகாத தசரத சக்ரவர்த்தி, சனீஸ்வர பகவானிடம் உள்ளம் உருக ஸ்லோகத்தை சொல்கிறார்.

    இதைக் கேண்டு மனமிறங்கிய சனிபகவான் சரி.. உங்கள் விருப்பப்படி செய்கிறேன். என்னை திருநறையூரில் வந்து வழிபடுங்கள். நான் உங்களுக்கு மங்கள சனியாக தரிசனம் தந்து யாரும் தர இயலாத இரண்டு வரங்களைத் தருகிறேன் என்றார். தசரதரும் மகிழ்ந்து திருநறையூர் வந்து அங்குள்ள பெரிய குளத்தில் நீராடி சனிபகவானை நினைத்து வணங்கினார்.

    சனிபகவான் குடும்ப சமேதராய் காட்சி தந்து அவர் கூறியபடி இரண்டு வரங்களைத்தருகிறார். முதலாவது வரம் ரோஹிணி சகட பேத காலத்தில் தாம் யாருக்கும் எந்த கஷ்டத்தையும் கொடுப்பதில்லை எனவும், இரண்டாவதாக குடும்ப சமேதராய் உள்ள இவ்வாலயத்திற்கு வந்து என்னை தரிசித்து வழிபடுவோருக்கு மற்ற எட்டு கிரகங்களால் ஏற்படும் தீய பலன்களை நீக்குவேன் என்றும் வரம் அருளுகிறார்.

    இத்திருக்கோயிலில் குடும்ப சமேதராய் எங்கும் காணமுடியாத வகையில் தசர சக்ரவர்த்தி கைதொழ சாந்த சொரூபமாய் காட்சியளிக்கிறார் சனி பகவான். இங்குள்ள சனிபகாவனுக்கு பால் அபிஷேகம் செய்யும் போது பால் நீலநிறமாக மாறி சனிபகவானின் உண்மையான நிறமான நீலவண்ணத்தைக் காட்டுவது மகா சிறப்பு.

    அதோடு வேறெங்கும் காண முடியாத உற்சவமூர்த்திக்கு திருக்கல்யாணம், சனிப்பெயர்ச்சிக்கு நடைபெற்று திருவீதி உலா வருவது தனிசிறப்பு. சனிதிசையில் உள்ளவர்களும், கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி ஆகிய காலங்களில் உள்ளவர்கள் எட்டு வாரங்கள் தொடர்ந்து அர்ச்சனை செய்துவந்தால் சிரமங்கள் குறைந்து முன்னேற்றம் அடைவது நிதர்சனமான உண்மை. 
    ஜாதகத்தில் சனி தோஷம் கொண்டு துன்பங்கள் அனுபவிப்பார்கள் “விநாயகரை” வழிபட்டால் போதும், வேறு எதுவும் செய்யத் தேவையில்லை.
    ஜாதகத்தில் சனி தோஷம் கொண்டு துன்பங்கள் அனுபவிப்பார்கள் “விநாயகரை” வழிபட்டால் போதும், வேறு எதுவும் செய்யத் தேவையில்லை. இதனை விளக்கும் புராண கதை ஒன்றை காணலாம். ஒரு தடவை ஆற்றங்கரையில் ஒரு மரத்தடியில் நிஷ்டையில் இருந்து, விநாயகர் தன்னைப் பிடிப்பதற்காகச் சனி பகவான் வருவதை அறிந்து கொண்டார். அவன் வந்ததும் ஒரு தலைச் சுவடியை நீட்டினார். “அதில் இன்று போய் நாளை வா” என்றிருந்தது.

    பின்னர் விநாயகப் பெருமான் அதை அரசமரத்தடியில் வைத்தார். பின்பு சனி பகவானிடம் “சனீஸ்வரா எந்த நாளும் இந்த அரசமரத்திற்கு வருக. இந்த ஓலைச் சுவடியில் என்ன எழுதி இருக்கிறதோ அதன்படி நடப்பாயாக!” என்று சபித்து விட்டு மறைந்து விட்டார். அதன் பிரகாரம் சனீஸ்வர பகவான் தினமும் அந்த அரச மரத்தடிக்குச் சென்று அதில் உள்ள வாசகத்தைப் படித்து ஏமாந்தபடி திரும்புவது வழக்கமானது. இப்படி பல்லாயிரக்கணக்கான வருடங்கள் ஏமாந்துபோன சனிபகவான், விநாயகரைப் பிடிப்பது என்பது முடியாத காரியம் என்றுணர்ந்து அவரை துதித்து வழிபடத் தொடங்கினார்.

    விநாயகரும், அவர் முன்தோன்றி “சனீஸ்வரா, காரணமின்றி யாரையும் உன் சக்தியைப் பயன்படுத்தித் தவறாக நடக்கக்கூடாது. இதற்கு உன் அனுபவம் ஒரு படிப்பினையாகட்டும். இன்று முதல் என்னை வணங்கும் பக்தர்களையும் நீ பிடித்து துன்புறுத்தக் கூடாது” என்று கூறி அவருக்கு ஆசி அளித்து மறைந்தார்.
    இதன்படியே இன்றும் சனி தோஷம் உள்ளவர்கள் விநாயகரை அவருக்கு உகந்த நாட்களான சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி இன்னும் பிற நாள்களிலும் வணங்கி வர சனிதோஷத்தில் இருந்து முற்றிலும் விடுபடுகிறார்கள். சனி பிடிக்காதது மட்டுமல்ல, சனியின் கெடுபலன் களையும் குறைத்து அருள்புரிகிறார் விநா யகர், நவக்கிரக கோட்டையில், அதுவும் சனி பகவான் எதிரியில் அமர்ந்து கொண்டு.

    நவக்கிரக கோட்டையில் ஸ்ரீ நவசக்தி சுயம்பு விநாயகராக அருள்பாலிக்கிறார். நவக்கிரகங்கள் எல்லாம் தனித்தனி சந்நிதிகளில் விநாயகர் எழுந்தருளியிருக்கும் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளனர். வேலூரில் இருந்து 36 கி.மீ. தொலைவில் உள்ளது பொன்னை. பொன்னையில் இருந்து 3 கி.மீட்டரில் உள்ளது நவக்கிரகக் கோட்டை. வேலூரிலிருந்து பொன்னைக்கு பேருந்து வசதி உண்டு. பொன்னையில் இருந்து மினி பஸ் மற்றும் ஆட்டோ மூலம் நவக்கிரகக் கோட்டையை அடையலாம்.

    யாரும் சனியோட கடுமையால பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஒரு சித்தர் பரிந்துரைக்கும் மிக எளிய பரிகாரம்....

    சனிக்கிழமையன்று பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அரிசியாக அல்லது அதை நன்கு பொடி செய்து சூரியநமஸ்காரம் செய்துவிட்டு, விநாயகப்பெருமானை மூன்று சுற்று சுற்றிவிட்டு அந்த அரிசியை விநாயகரைச்சுற்றிப் போட்டால், அதை எறும்பு தூக்கிச் செல்லும். அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விடும்.

    வன்னி மரத்தடி விநாயகராக இருந்தால், அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதை செய்யவும். அப்படித் தூக்கிச் சென்ற பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக் காலத்திற்காக சேமித்து வைத்துக்கொள்ளும். எறும்பின் எச்சில் அரிசிமாவின் மீது பட்டதும் அதன் கெடும்தன்மை நீங்கிவிடும். இந்த பச்சரிசிமாவை சாப்பிடுவதற்கு இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளும். இப்படி இரண்டேகால் வருடங்கள் வரை எறும்புக்கூட்டில் இருப்பதை முப்பத்து முக்கோடி தேவர்கள் கவனித்துக் கொண்டிருப்பார்கள். இரண்டரை ஆண்டிற்கு ஒரு முறை கிரக நிலை மாறும். அப்படி மாறியதும் அதன் வலுஇழந்து போய் விடும். இதனால்,நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு உணவாகப் போட வேண்டும்.

    ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பிராமணர்கள் சாப்பிட்டதற்குச் சமம். எனவே இது எத்தனை புண்ணியம் வாய்ந்த செயல் என்று தெரிந்து கொள்ளுங்கள். இதனால், சனி பகவானின் தொல்லைகள் நம்மைத் தாக்காது. ஏழரைச்சனி, அஷ்டமச் சனி, கண்டச் சனி, அர்த்தாஷ்டகச் சனி, சனி மகாதசை நடப்பவர்களுக்கு, இந்த செயல் ஒரு மிக பெரிய வர பிரசாதம் ஆகும்.

    உடல் ஊனமுற்றவர்களுக்கு--காலணிகள், அன்னதானம், அளிப்பது, மிக நல்லது.
    இலத்தூர் அறம்வளர்த்த நாயகி சமேத மதுநாத சுவாமி திருக்கோவில் சனி பகவான் பரிகாரத் தலம் ஆகும். ஏழரைச்சனியின் துன்பத்தை நீக்கும் பரிகார தலம் இதுவாகும்.
    இலத்தூர் அறம்வளர்த்த நாயகி சமேத மதுநாத சுவாமி திருக்கோவில் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையும் பெருமையும் வாய்ந்தது. சனி பகவான் பரிகாரத் தலம் இது. நவக்கிரகங்களுள் ஒன்றான சனீஸ்வர பகவான் தனிச்சன்னிதி கொண்டு தெற்கு நோக்கி வீற்றிருக்கும் ஒரே தலம் இலத்தூர் ஆகும்.

    மனிதர்கள் மட்டுமல்லாமல் சிவனையே சனி பகவான் சில காலங்களில் பிடித்து ஆட்டிப் படைத்துள்ளார். சிவன் விஷமுண்டது கண்டகச்சனி காலத்திலும், தட்சனிடம் அவமானப்பட்டது அஷ்டமச்சனி காலத்திலும், குளத்தில் உள்ள கருங்குவளை மலருக்கடியில் ஏழரை நாழிகை மறைந்திருந்தது ஏழரைச்சனி காலத்திலும் ஆகும். அத்திருக்குளம்தான் இத்திருக்கோவிலுக்கு எதிரில் அமைந்துள்ளதாக தல வரலாறு சொல்கிறது.

    அகத்தியருக்கு ஏழரைச்சனி ஆரம்பித்ததும், பொதிகை மலையில் இருந்து புறப்பட்டு, ஏழரை ஆண்டுகள் வடதிசை சென்று திரும்பும் வழியில் அனுமன் நதி பாயும் இத்திருக்குளத்தில் நீராடிவிட்டு புளிய மரத்தடியில் உள்ள சிவனை வழிபட்டு, அருகிலேயே ஈசனின் இருப்பிடமான கயிலாயத்தை (வடக்கு) நோக்கி அமர்ந்து சனிபகவானை நினைத்து, சனீஸ்வர ஸ்தோத்திரம் பாடினார். இதையடுத்து அவருக்கு சனீஸ்வர பகவான் காட்சியளித்தார். அகத்தியர் வடக்கு நோக்கி அமர்ந்திருந்ததால் சனீஸ்வர பகவான் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அகத்தியருக்குக் காட்சியளித்தார்.

    குளத்தில் இருந்த கருங்குவளை மலருக்கடியில் ஈஸ்வரன் மறைந்திருந்ததாலும், ஏழரைச்சனி போக்கின்போது அகத்தியர் இக்குளத்தில் நீராடிவிட்டு சனி பகவானை தரிசித்ததாலும் இக்குளம் அகத்தியர் தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

    ஏழரைச்சனி விலகுபவர்கள் மட்டும் இதில் நீராடிவிட்டு சனி பகவானை தரிசிக்க வேண்டும். மற்றவர்கள் நேரடியாக கோவிலுக்குள் சென்று வணங்கலாம். இங்கு பொங்கு சனியாக வீற்றிருந்து அருள்பாலிப்பதால் சனீஸ்வர பகவான் பிரசாதத்தை வீட்டிற்குக் கொண்டு செல்லலாம்.

    திருநெல்வேலி மாவட்டம், தென்காசியில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது இலத்தூர். சென்னை, மதுரை, திருநெல்வேலியிலிருந்து தென்காசிக்கு பேருந்து வசதிகளும், ரெயில் சேவையும் உள்ளது. 
    ஏழரைச்சனி என்பது மூன்று இரண்டரை வருடங்களை கொண்ட ஒரு அமைப்பு. ஒருவரின் ராசிக்கு பின் ராசியான பனிரெண்டாமிடத்தில் சனி நுழைவது விரையச் சனி எனப்படுகிறது.
    ஏழரை வருடங்கள் தொடரும் இந்த அமைப்பில் விரயச் சனி, ஜென்மச் சனி, பாதச் சனி என்பதைப் பற்றியும், ஒரு மனிதனின் வாழ்நாளில் முப்பது வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் இந்நிகழ்வில் முதல் சுற்று, இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்று எனப்படும் மங்குசனி, பொங்குசனி, மரணச்சனி என்ற மூன்று சுற்றுக்களையும் பற்றிய விளக்கங்களை அநேகர் கேட்டிருக்கிறீர்கள்.

    ஏழரைச்சனி என்பது மூன்று இரண்டரை வருடங்களை கொண்ட ஒரு அமைப்பு. ஒருவரின் ராசிக்கு பின் ராசியான பனிரெண்டாமிடத்தில் சனி நுழைவது விரையச் சனி எனப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் ஒரு மனிதருக்கு வருமானங்களை சனி தந்தாலும் அவற்றை சேமிக்க முடியாமல் விரயம் செய்வார் என்று இதைப் பற்றிய அனுபவ ஜோதிட நூல்கள் சொல்கின்றன. இது ஒரு பொதுப் பலன்தான்.

    மிக முக்கியமாக இந்த முதல் இரண்டரை ஆண்டு காலத்தில் ஒரு மனிதர் ஏழரைச் சனியின் கெடுபலன் தாக்கத்தை உணர்வது இல்லை. இன்னும் சொல்லப் போனால் சிலருக்கு அதீதமான பொருள் வரவும் விரயச்சனி காலத்தில் கிடைக்கவே செய்கிறது. இந்த காலகட்டத்தில் ஒரு மனிதனிடம் தாராளமாகவே பணம் இருக்கும்.

    ஏழரைச்சனியின் நடுப்பகுதியும், கடுமையான கெடுபலன்களைச் செய்வதுமான, ஒரு மனிதனின் சொந்த ராசியில் இரண்டரை வருடங்களுக்கு சனி இருக்கும் நிலையே, ஜென்மச்சனி எனப்படுகிறது. இந்த இரண்டரை ஆண்டு காலத்தில், ஒருவரின் சொந்த நட்சத்திரத்தில் சனி செல்லும் ஏறத்தாழ ஒரு ஆண்டு காலத்தில் மிகக் கடுமையான கெடுபலன்களை தருவார். அதிலும் 40 வயதுக்குள் வரும் சனி இந்த நிலைமையை கண்டிப்பாக செய்யும்.

    சுய நட்சத்திரத்தில் சனி செல்லும்போது ஒரு மனிதனுக்கு வாய்விட்டு அழும்படியான கடுமையான மன அழுத்தம் உள்ள நிகழ்ச்சிகள் நடக்கும். இந்த காலகட்டத்தில் ஒரு மனிதனுக்கு எது பிடிக்காதோ அது நடக்கும். அவனை எது பாதிக்குமோ அந்த விஷயத்தில் சனி கடுமையான கெடுபலன்களைச் செய்வார், இது வயதிற்கு ஏற்றார் போல நடக்கும்.

    இந்த நேரத்தில்தான் ஒரு இருபது வயது வாலிபனை, வயதிற்கேற்றார் போல காதல் தோல்வியிலும், முப்பது வயதுகளில் இருப்பவனை தொழில் அமைப்புகளிலும், நாற்பதில் இருப்பவனை தொழில், குடும்ப அமைப்புகளிலும் கடுமையான சிக்கல்களை சனி தருவார். சிலருக்கு நெருங்கிய உறவினர் மரணத்தின் மூலமாக மனப்பதட்டத்தைத் தருவார்.

    கோட்சாரத்தில் ஒருவரின் ஜென்ம ராசியில் இருளாகிய சனி அமரும்போது, அவனது மனதை ஆளுமை செய்து தவறான வழியில் செல்லவோ, முடிவெடுக்கவோ வைக்கிறார். ராசியில் சனி இருக்கும் போது தனது கெடுபலன் தரும் கொடிய பார்வை மூலம் அந்த மனிதனின் தைரியம், நற்பெயர் ஆகியவற்றிற்கு காரணமான மூன்றாமிடத்தைப் பார்த்து, அவனது பெயரைக் கெடுத்து, தைரியத்தைக் குலைத்து எதிர்காலம் பற்றிய மனபயத்தை உண்டு பண்ணுவார். ஜென்ம ராசியில் சனி இருக்கும்போது அவரது பத்தாம் பார்வையால் தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால்தான் ஜென்மச் சனி நடக்கும்போது வேலையிழப்பு, சஸ்பென்ட். தொழில் சரிவு போன்றவைகள் நடக்கின்றன.

    பாதச் சனி எனப்படும் ராசிக்கு இரண்டாமிடத்திற்கு சனி மாறியவுடன் இதுநாள் வரை நடந்த கெடுபலன்கள் குறைய ஆரம்பிக்கும். ஆனாலும் இந்த நிலையில் முழுமையான நன்மைகள் நடந்து விடுவது இல்லை. சனி முழுவதுமாக முடிந்ததும் அந்த மனிதர் செட்டிலாகும் வாழ்க்கை வாழ்வதற்கான ஆரம்பங்கள் இந்த பாதச் சனி அமைப்பில் நடக்கும்.

    மங்கு, பொங்கு, மரணச்சனி விஷயத்தை எடுத்துக் கொண்டால், பிறந்த உடன் முதலில் வருகின்ற சனி மங்கு சனி எனவும், இந்த சனி கெடுபலன்களைத் தரும் எனவும், இரண்டாவது முப்பது வருடங்களில் வருகின்ற சனி பொங்கு சனி எனவும், அது நல்ல பலன்களைத் தரும் எனவும், மூன்றாவதாக முப்பது வருடங்களில் வரும் சனி மரணச்சனி எனவும், அது முதல் சுற்று சனியைப் போலவே கெடுபலன்களைக் கொடுத்து ஒரு மனிதனின் ஆயுள், ஆரோக்கியத்தை குலைக்கும் எனவும் ஜோதிடர்களால் விளக்கப்படுகிறது.



    இதில் சிலர் புரிந்து கொள்ளாத ஒரு முரண்பாடு என்னவெனில் குழந்தையாய் இருக்கும் போது வருகின்ற ஏழரைச்சனியை மங்கு சனி எனவும், அடுத்த முப்பது வயதுகளில் வரும் சனியை இரண்டாவது சுற்று பொங்கு சனி எனச்சொல்லி முப்பது வயதுகளில் வரும் சனி நல்லது செய்யும் என தவறாக நினைத்துக் கொள்கிறார்கள்

    உண்மையில் ஏழரைச் சனி என்பது ஒரு மனிதன் எதிர்காலத்தில் நல்லவிதமாக வாழ்வதற்கான அனுபவங்களையும், பணம் என்றால் என்ன என்பதைப் பற்றிய நேரடி அனுபவத்தையும் தருகின்ற ஒரு அமைப்பு என்பதால் சனிக்கு எவரும் விதிவிலக்காக இருக்க முடியாது. எத்தனை பெரிய யோக ஜாதகமாக இருந்தாலும் அந்த ஜாதகத்திற்கு ஏற்ப சனியின் கெடுபலன்கள் இருக்கவே செய்யும்.

    பூமியில் பிறக்கும் எவரும் ஏழரைச்சனிக்கு விதிவிலக்காக இருக்க முடியாது விபரம் தெரியாத குழந்தைப் பருவமான ஏறத்தாழ 15 வயது வரை வருகின்ற ஏழரைச் சனியை ஒருபோதும் கணக்கில் எடுத்துக் கொள்ளவே கூடாது. ஒருவரின் கர்மா விழிக்காத பருவத்தில் வரும் சனி அவருக்கு நல்ல, கெட்ட பலன்களைச் செய்யாது. அந்தப் பருவத்தில் வரும் சனி அவரது பெற்றோருக்கும், குடும்பத்திற்கும் மட்டுமே தீமைகளைச் செய்யும். அதன் மூலம் அந்தக் குழந்தையும் பாதிக்கப்படும்.

    ஒருவருக்கு பத்து வயதில் ஏழரைச்சனி முடிந்திருக்குமாயின், முப்பத்து மூன்று வயதில் இன்னொரு சுற்று சனி ஆரம்பமாகும். அதனை பொங்கு சனி என்று சொல்லி அந்த இரண்டாம் சுற்று நன்மைகளைச் செய்யும் என்று கணக்கிட கூடாது. உண்மையில் அவருக்கு விபரம் தெரிந்த வயதான இந்த 33 வயதில் வருகின்ற சனியே அவருக்கு முதல் சுற்று சனி போன்ற அனுபவங்களை கொடுத்து கெடுபலன்களை செய்யும்.

    குறிப்பாக இந்த வயதில் வரும் சனி, வேலை தொழில் விஷயங்களில் அவருக்கு சில நிர்ப்பந்தங்களைக் கொடுத்து, தேவையற்றவைகளில் அவரைத் தள்ளி, வயதிற்கேற்ற தொழில், சொந்த வாழ்க்கைகளில் சாதகமற்ற பலன்களை தந்து வாழ்க்கை அனுபவங்களைக் கற்றுக் கொடுக்கும். முப்பது வயதுகளில் இருக்கும் மனிதருக்கு பொங்கு சனி எனப்படும் இரண்டாம் சுற்று சனி பலன் தராது.

    உண்மையில் சற்று விபரம் தெரிந்த இளம்பருவமான இருபது வயதுகளில் இருக்கும்போது நடக்கும் முதல் சுற்று ஏழரைச் சனியை, மங்கு சனி என்று சொல்லி, அடுத்த 50 வயதுகளில் நடக்கும் இரண்டாம் சுற்று சனியை பொங்கு சனி என்று சொல்லலாம். ஐம்பது வயதுகளில் வரும் சனி பெரிய கெடுதல்களை தருவதில்லை. மாறாக நன்மைகளைச் செய்யும்.

    சுருக்கமாக கவனிக்க வேண்டியது என்னவெனில், முதல் சுற்று ஏழரைச் சனி நடக்கும்போது சம்பந்தப்பட்ட மனிதருக்கு, வயதிற்கேற்ற மன அழுத்தங்களை, தோல்விகளை, வாழ்க்கையைப் பற்றிய புரிதல்களை சனி கொடுத்திருந்தால் மட்டுமே அது மங்கு சனியாக இருக்கும். விபரம் தெரியாத குழந்தைப் பருவத்தில் வரும் ஏழரைச் சனியை கணக்கில் எடுத்துக் கொள்ளவே கூடாது.
    ஒருவரின் எதிர்காலத்தைச் சொல்லும் மாபெரும் அறிவியலான வேத ஜோதிடத்தின் நிரந்தரமான விதிகளில் ஏழரைச் சனியும் ஒன்று. ஏழரைச்சனி தரும் அவஸ்தைகளை அறிந்து கொள்ளலாம்.
    ஒருவரின் எதிர்காலத்தைச் சொல்லும் மாபெரும் அறிவியலான வேத ஜோதிடத்தின் நிரந்தரமான விதிகளில் ஏழரைச் சனியும் ஒன்று. கோட்சார நிலையில் வரும் ஏழரைச் சனி அமைப்பு சில நிலைகளில் ஒரு மனிதனை தலைகீழாகப் புரட்டிப் போட்டு விடுகிறது.

    இந்திய ஜோதிட முறைகள் அனைத்திற்கும் தாய் என்று சொல்லப்படக் கூடிய பாரம்பரிய ஜோதிட முறையானது மிகப் பெரிய நுணுக்கங்களையும், சூட்சுமங்களையும் தன்னகத்தே கொண்டது. இந்த முறையில் ஒரு மனிதனின் எதிர்காலத்தை அறிவதற்கு அவனது ஜாதகத்தில் லக்னம், ராசி எனப்படும் இரு முக்கிய அமைப்புகளையும் ஒரு சேரக் கணிக்க வேண்டும்.

    வேத ஜோதிடம் லக்னம், ராசி எனும் இரு சக்கரங்களைக் கொண்டது. இந்த இரண்டில் ஒன்று இல்லாவிட்டாலும் வண்டி நகராது. ஒரு மனிதனின் எதிர்காலம் என்பது மாறாத பிறந்த ஜாதகத்தின் லக்னத்தையும், மாறிக் கொண்டே இருக்கும் கோட்சார நிலையின் மூல அமைப்பான ராசியையும் இணைத்துப் பார்க்கப்பட வேண்டும்.

    ஜாதகம் என்பது ஒருவரின் பிறந்த நாளன்று, வானில் இருந்த கோள்களின் நிலைதான். இது மாறவே மாறாத ஒன்று. கோட்சாரம் எனப்படுவது மாறிக் கொண்டே இருக்கும் தற்போதைய வான் கிரக நிலையைச் சொல்லுவது. மாறாத பிறந்த ஜாதகத்தையும், மாறிக்கொண்டே இருக்கும் கோட்சார நிலைகளையும் இணைத்துதான் ஒரு மனிதனின் எதிர்காலத்தை துல்லியமாக அறிய முடியும். இதுவே ஒரு சுவையான முரண்பாடுதான்.

    பாபக் கோள்களான சனி, செவ்வாய், ராகு, கேது ஆகியவை நமது ராசிக்கு பார்வை, இணைவு எனும் தொடர்பைப் பெறும்போது எதிர்மறைச் சக்திகள் தூண்டப்பட்டு மனம் செயலிழக்கிறது. இந்த அமைப்பினால் அந்தக் காலகட்ட வாழ்க்கையில் தவறான முடிவுகளை எடுத்து தோல்விகளைச் சந்திக்கிறோம்.
    இதில் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகாலம் இருக்கக் கூடிய, மிக மெதுவாக நகரும் தன்மை கொண்ட பாபக் கோளான சனி, ஒரு மனிதனின் ராசிக்கு முன்பின் இடங்களான 12, 2 மற்றும் அவனது ராசியில் இருக்கும் ஏழரை ஆண்டு காலமே ஏழரைச்சனி என்று குறிப்பிடப்படுகிறது.

    மனம் என்பது ஒருவருக்கு வயதுக்கு ஏற்றபடிதான் செயல்படும். இருபது வயதில் உங்களுக்கு முக்கியமாகப் படுகின்ற ஒரு விஷயம் ஐம்பது வயதில் சாதாரணமாகத் தெரியும். சனி ராசியை இருளாக்கி ஆக்கிரமிக்கும் போது ஒருவரின் மனம் அழுத்தம் தரும் சம்பவங்களைச் சந்திக்க வேண்டும் என்பதால் இருபது வயதுகளில் ஏழரைச்சனி நடக்கும்போது ஒருவர், இளம்வயதிற்கே உரிய காதல், படிப்பு போன்றவைகளில் மன அழுத்தத்தை அடைகிறார்.
    இதுவே முப்பது வயதுகளில் இருப்பவருக்கு திருமணம், குழந்தை போன்றவைகளிலும், நாற்பதுகளில் உள்ளவருக்கு அந்த வயதிற்கே உரிய வேலை, தொழில் போன்றவைகளிலும் சங்கடங்கள் நிகழ்கின்றன.



    ஜோதிடத்தை ஆய்வு நோக்கோடு பார்க்க விரும்புபவர்கள் மற்றும் இந்த மாபெரும் கலையை மறுக்கின்ற பகுத்தறிவாளர்கள் அனைவருமே உலகில் பிறக்கும் மனிதர்களின் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி காலங்களை நடுநிலையோடு ஆராயும்போது நிச்சயமாக அவர்களுக்கும் உண்மை புலப்பட்டே தீரும்.

    உண்மையில் கடுமையான ஏழரைச் சனி மற்றும் அஷ்டம சனி காலங்களில் ஒரு மனிதனின் ஜாதகம் எத்தனை பெரிய யோகமான அமைப்பில் இருந்தாலும் செயலற்றுப் போய்விடும்

    ஏழரைச்சனி பற்றி பாரம்பரிய ஜோதிடத்தில் ஏராளமான நுணுக்கங்கள் இருக்கின்றன. ஒரு தகப்பன் அல்லது குடும்பத் தலைவனின் நேரம் நன்றாக இருந்தாலும், அவனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு, அல்லது குழந்தைகளில் ஒருவருக்கு கடுமையான ஜென்மச்சனி நடப்பில் இருக்கும் போது அந்தக் குடும்பத்தில் கெடுபலன்கள் நடக்கின்றன.

    குறிப்பாக குடும்பத் தலைவனின் தொழில் மற்றும் வேலைகளில் சிக்கல்கள் உண்டாகி, அவனை பொருளாதார சிக்கல்களில் சிக்க வைத்து கடன், நோய் போன்ற சிரமங்களைத் தருகின்றன. இதை நான் அடிக்கடி எனது மாணவர்களுக்கு சொல்லுகிறேன்.

    குடும்பம் என்பது ஒரே உயிர் போன்றது. கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள் என்ற குடும்பத்தில் ஒருவருக்கு நடக்கும் கெடுபலன் இன்னொருவரை பாதிக்கவே செய்யும். ஆகவே ஜோதிடப்படி ஒருவருக்கு துல்லியமான பலன் சொல்ல வேண்டும் என்றால், குடும்பத்தில் இருக்கும் அனைவரின் ஜாதகத்தையும் பார்த்து, குடும்ப உறுப்பினர்கள் எவருக்காவது ஏழரைச்சனி, அஷ்டமச்சனி நடக்கிறதா என்பதைக் கருத்தில் கொண்டுதான் பலன் சொல்ல வேண்டும்.

    பலர் ஒருவருடைய வாழ்க்கையில் வரும் ஏழரைச்சனியே கடுமையான கஷ்டங்களைத் தரும் என்று நினைக்கிறார்கள். உண்மையில் நமது மூல நூல்களில் அஷ்டமச் சனியே, ஒருவருக்கு மிகப்பெரிய கஷ்டங்களைத் தரும் என்றும், ஏழரைச்சனி அதற்குக் குறைவான கெடுபலன்களைத் தரும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

    உண்மையில் அஷ்டமச்சனியே நெருங்கிய உறவினர் மரணம், கடுமையான இழப்பு போன்ற கெடுதல்களை அதிகம் தருகிறது.

    ஒருவருக்கு கடுமையான ஜென்மச் சனி மற்றும் அஷ்டமச்சனி நடக்கும்போது, மற்ற எந்தக் கிரகப் பெயர்ச்சியும் பலன் தராது, சனியின் கொடுமைகள் மட்டுமே முன் நிற்கும். சனியின் ஆதிக்கத்தின் முன் மற்ற கிரகங்கள் சாதகமான இடத்தில் இருந்தாலும் பலன் தராது.

    கடுமையான ஜென்மச் சனி, அஷ்டமச் சனி காலங்களில் ஒருவருக்கு சனியின் எதிர்மறை ஆதிக்கம் மட்டுமே மேலோங்கி நிற்கும். அந்த மனிதர் எத்தகைய ராஜயோக ஜாதகத்தைக் கொண்டிருந்தாலும் அது பலன் தராது.
     
    ஏழரைச் சனிக்கு நிச்சயமாக பரிகாரம் செய்யத்தான் வேண்டுமா? இந்த பரிகாரங்களால் என்ன மாற்றங்கள் ஏற்படும்? என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஏழரைச் சனிக்கு நிச்சயமாக பரிகாரம் செய்யத்தான் வேண்டுமா? இந்த பரிகாரங்களால் என்ன மாற்றங்கள் ஏற்படும்? கிரகங்களை ப்ரீதி செய்யும்போது நமக்கு எந்த விதத்தில் அவை நன்மையைச் செய்கின்றன? என்று அறிந்து கொள்ளலாம்.

    ஏழரைச் சனிக்கு பெரும்பான்மையான ஜோதிடர்கள் சொல்லும் பரிகாரங்களில் சில : சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து தயிரும், எள்ளுப்பொடியும் கலந்த சாதத்தை காகத்திற்கு வைத்தபின், ஏழை எளியோருக்கு எள்ளுப்பொடி சாதம் தானம் செய்யலாம். சனி பகவானின் சந்நதியில் எள் முடிச்சிட்ட விளக்கேற்றி வைத்து கருங்குவளை மலர்களால் அர்ச்சனை செய்வதும் சனிக்கு ப்ரீதியான ஒன்று. சனிக்கிழமையில் ஆஞ்சநேயர், விநாயகர் வழிபாடும் ஏழரைச் சனியிடம் இருந்து நம்மைக் காப்பாற்றும்.

    மேற்சொன்ன பரிகாரங்கள் செய்வதால் பெருத்த மாற்றங்களை எதிர்பார்க்க இயலாது. கிரகங்களை ப்ரீதி செய்வதால் கெடு பலன்களின் தாக்கம் குறையுமே அன்றி முழுமையாக அதிலிருந்து விடுபட இயலாது. இவ்வாறான பரிகாரங்கள் செய்வதால் கிரகங்களால் உண்டாகும் பலன்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நமக்கு கிடைக்கிறது. மனம் பக்குவம் அடையும்போது கவலை ஏதும் தெரிவதில்லை.
    ×