என் மலர்
நீங்கள் தேடியது "சனிதோஷ பரிகாரம்"
- துர்க்கை பூஜை வழிபாட்டு குழுவினர் திருவிளக்கு பூஜைகளும் நடத்தி வருகின்றார்கள்.
- பத்ரகாளி அம்மன் கோவிலில் உள் வளாகத்தில் ஆஞ்சநேயர் இருப்பது மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவர்களது வேண்டுதல்களும் விரைவில் நிறைவேறியும் வருகின்றது.
இதில் ஆடி மாதம் வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆடி வெள்ளிக்கிழமை தோறும் பக்தர்களுக்கு கூழ் பிரசாதமாக கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் துர்க்கை பூஜை வழிபாட்டு குழுவினர் திருவிளக்கு பூஜைகளும் நடத்தி வருகின்றார்கள். அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் ராகு, கேது, சனி தோஷம் விலகும்.
சிறப்பு தலமாகவும் விளங்குகிறது. பத்ரகாளி அம்மன் கோவிலில் உள் வளாகத்தில் ஆஞ்சநேயர் இருப்பது மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. சனிதோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து தரிசனம் செய்து செல்லும் போது சனியால் ஏற்படும் இன்னல்கள் தணிந்து, நன்மைகள் நடைபெறுவது இந்த கோவில் சிறப்பு அம்சமாகும்.
மேலும் திருமணத்தடை, குழந்தை பாக்கியம், மாங்கல்ய பேறு, நோய் தீர்க்கும் அம்மனாகவும் அந்தியூர் பத்ரகாளியம்மன் விளங்கி வருகிறார். இதனால் பண்டிகை காலங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்வது தொன்று தொட்டு வழக்கமாக நடந்து வருகிறது.
- சனி பகவான், விநாயகரையும், ஆஞ்சநேயரையும் மட்டும் பிடிக்க முடியவில்லை.
- நளன் சரித்திரத்தை படிப்பதனாலும், கேட்பதினாலும் சனி தோஷம் நீங்கும்.
சனி பகவானால் பிடிபடாதவர்கள் யாரும் இல்லை. தேவர்கள் முதல் மும்மூர்த்திகளையும் கூட அவர், தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.
அப்படிப்பட்ட சனி பகவானால், விநாயகரையும், ஆஞ்சநேயரையும் மட்டும் பிடிக்க முடியவில்லை. அதனால்தான் விநாயகரையும், ஆஞ்சநேயரையும் வழிபடுவதன் மூலம் சனியின் பிடியில் இருந்து விடுபடலாம் என்கிறார்கள்.

விநாயகரை பிடிப்பதற்காக சனி பகவான் வந்தபோது, அவரிடம் "நான் இன்று முக்கிய பணியில் இருக்கிறேன். அதனால் நாளை வந்து என்னை பிடித்துக் கொள். எனவே இன்றுபோய் நாளை வா" என்று கூறினாராம், விநாயகர்.
மறுநாள் சனி பகவான் வந்தபோது, "நான் உன்னிடம் என்ன சொன்னேன்" என்று கேட்டாராம், விநாயகர். அதற்கு சனி பகவான் "இன்று போய் நாளை வா என்று சொன்னீர்கள்" என்று தெரிவித்தார்.
அதைப் பிடித்துக் கொண்ட விநாயகர், "அப்படியானால், நீ இன்று போய் நாளை வா" என்றாராம். விநாயகரின் சாதுரியத்தால், இன்றுவரை அவரை சனி பகவானால் பிடிக்க முடிவில்லை.

ஆஞ்சநேயரை பிடிப்பதற்காக சனி பகவான் சென்றபோது, இலங்கைக்கு பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார், ஆஞ்சநேயர். அவரது தலையில் அமரப் போன சனி பகவானை தடுத்து நிறுத்திய ஆஞ்சநேயர், "நீங்கள் என் தலையில் அமர்ந்தால், என்னால் பாலம் கட்டும் பணியில் ஈடுபட முடியாது. எனவே என்னுடைய காலை பிடித்துக் கொள்ளுங்கள்" என்றாராம்.
அதன்படியே சனி பகவான், ஆஞ்சநேயரின் காலை பிடித்துக் கொள்ள, சனியை தன் காலில் வைத்து பலமாக அழுத்தினாராம், ஆஞ்சநேயர். அதனால் அனுமனை விட்டு விட்டார், சனி பகவான். மேலும் ராம பக்தர்களை ஒன்றும் செய்யக்கூடாது என்ற வரத்தையும் சனியிடம் இருந்து அனுமன் பெற்றுக்கொண்டார்.
செங்கல்பட்டில் உள்ள கோதண்டராம சுவாமி கோவிலில், சனி பகவானை தன் காலடியில் வீழ்த்தியிருக்கும் வீர ஆஞ்சநேயரை தரிசிக்கலாம். மேலும் இந்த ஆலயத்தின் பிரகாரத்திலும் ஆஞ்சநேயருக்கு தனி சன்னிதி இருக்கிறது.
சனியின் பாதிப்பில் இருந்து விடுபட சில பரிகாரங்களை இங்கே பார்ப்போம்.

* சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து, உளுந்து, நல்லெண்ணெய், தூய்மையான நீலக்கல், எள்ளு, கொள்ளு, இரும்பு ஆகியவற்றை தானமாக அளிக்கலாம்.
* புராணங்களில் வரும் நளன் சரித்திரத்தை படிப்பதனாலும், கேட்பதினாலும் சனி தோஷம் நீங்கும்.
* நல்லெண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றையும் கலந்து, இரும்பு விளக்கில் திரிகளைப் போட்டு சனி பகவானுக்கு விளக்கேற்றி வழிபட வேண்டும்.
* சனிப் பிரதோஷம் வரும் நாள் முழுவதும் விரதம் இருந்து சனியை வழிபடுவதுடன், மவுன விரதமும் மேற்கொள்ளலாம்.
* சனிக்கிழமை தோறும் காகத்திற்கு அன்னமிடுங்கள்.
* தினமும் சனி பகவான் துதி பாடல்களை படியுங்கள்.






