search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவையில் வாலிபர்கள் கைது"

    • அந்த பகுதியில் உள்ள அறை எடுத்து தங்கி இருந்து ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
    • மர்மநபர்கள் 2 செல்போன்களை திருடி தப்பிச் சென்றனர்.

    கோவை:

    கோவை பாப்பநாயக்கன் பாளையம் அருகே உள்ள செங்காட்டை சேர்ந்தவர் சதீஸ்குமார் (வயது 29). இவர் அந்த பகுதியில் உள்ள அறை எடுத்து தங்கி இருந்து ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று அறையில் இருந்த இவர் தனது செல்போனை சார்ஜ் போட்டு விட்டு தூங்கினார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் 2 செல்போன்களை திருடி தப்பிச் சென்றனர். இது குறித்து சதீஸ்குமார் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி செல்போனை திருடிய உணவு பார்சல் நிறுவனத்தில் டெலிவரி மேனாக வேலை பார்த்து வரும் தினேஷ்குமார் (28), உதயகுமார் (27) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ெஜயிலில் அடைத்தனர். 

    வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் போட்டு வைத்திருந்த ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான இரும்பு உள்ளிட்ட பழைய பொருட்களை காணவில்லை.

    கோவை:

    கோவை பீளமேடு அண்ணாநகரை சேர்ந்தவர் மோசஸ் ஜெபராஜ் (வயது 56). இவர் தனியார் தொண்டு நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். இவர் தனது வீட்டருகே உள்ள காலி இடத்தில் ேமாட்டார் சைக்கிளை நிறுத்துவது வழக்கம்.

    மேலும் அங்கு இரும்பு உள்ளிட்ட பழைய பொருட்களை போட்டு வைத்திருந்தார். இந்நிலையில், அங்கு வைக்கப்பட்டு இருந்த ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இது குறித்து அவர் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திருட்டில் ஈடுபட்டது வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த முத்துக்குமார் (22) மற்றும் சதாம் உசேன் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×