search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் செல்போன் திருடிய 2 வாலிபர்கள் கைது
    X

    கோவையில் செல்போன் திருடிய 2 வாலிபர்கள் கைது

    • அந்த பகுதியில் உள்ள அறை எடுத்து தங்கி இருந்து ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
    • மர்மநபர்கள் 2 செல்போன்களை திருடி தப்பிச் சென்றனர்.

    கோவை:

    கோவை பாப்பநாயக்கன் பாளையம் அருகே உள்ள செங்காட்டை சேர்ந்தவர் சதீஸ்குமார் (வயது 29). இவர் அந்த பகுதியில் உள்ள அறை எடுத்து தங்கி இருந்து ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று அறையில் இருந்த இவர் தனது செல்போனை சார்ஜ் போட்டு விட்டு தூங்கினார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் 2 செல்போன்களை திருடி தப்பிச் சென்றனர். இது குறித்து சதீஸ்குமார் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி செல்போனை திருடிய உணவு பார்சல் நிறுவனத்தில் டெலிவரி மேனாக வேலை பார்த்து வரும் தினேஷ்குமார் (28), உதயகுமார் (27) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ெஜயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×