search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது
    X

    திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

    வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் போட்டு வைத்திருந்த ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான இரும்பு உள்ளிட்ட பழைய பொருட்களை காணவில்லை.

    கோவை:

    கோவை பீளமேடு அண்ணாநகரை சேர்ந்தவர் மோசஸ் ஜெபராஜ் (வயது 56). இவர் தனியார் தொண்டு நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். இவர் தனது வீட்டருகே உள்ள காலி இடத்தில் ேமாட்டார் சைக்கிளை நிறுத்துவது வழக்கம்.

    மேலும் அங்கு இரும்பு உள்ளிட்ட பழைய பொருட்களை போட்டு வைத்திருந்தார். இந்நிலையில், அங்கு வைக்கப்பட்டு இருந்த ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இது குறித்து அவர் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திருட்டில் ஈடுபட்டது வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த முத்துக்குமார் (22) மற்றும் சதாம் உசேன் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×