search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை வ.உ.சி.மைதானம்"

    • கண்காட்சி வருகிற 7-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடக்கிறது
    • கண்காட்சி நடைபெற உள்ள இடத்ைத அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் ஆய்வு செய்தார்.

    கோவை

    கோவை வ.உ.சி மைதானத்தில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வரலாற்று புகைப்பட கண்காட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.

    இந்த பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று நேரில் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்த புகைபடகண்காட்சி சென்னை, மதுரையை தொடர்ந்து கோவையில் நடைபெற உள்ளது.

    வ.உ.சி மைதானத்தில் வருகிற 7-ந் தேதி இந்த புபைப்பட கண்காட்சி மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்படுகிறது.

    கண்காட்சியானது வரும் 14-ந் தேதி வரை நடைபெறுகிறது. புகைப்பட காண்காட்சியை திறந்து வைக்கும் சிறப்பு விருந்தினர் இன்னும் முடிவாகவில்லை.

    இந்த கண்காட்சியில் 300-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம் பெறுகிறது. இதில் கோவைக்கு முதல்-அமைச்சர் கொடுத்த திட்டங்கள் குறித்த புகைப்படங்களும் இடம்பெறும்.

    பள்ளி, கல்லூரி மாணவர்கள் அழைத்து வரபடுவார்களா? என்ற கேள்விக்கு, யாரையும் கட்டாயபடுத்தி அழைத்து வருவதில்லை. விருப்பத்தின் பெயரால் மட்டுமே கண்காட்சிக்கு வருவார்கள்.

    மதுபாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த ப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதில் அளிக்காமல் தவிர்த்துவிட்டார்.

    இதில் தி.மு.க மாவட்ட செயலாளர்கள் தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், மேயர் கல்பனா, முன்னாள் எம்பி நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 10 டன் அளவிற்கு குப்பை தேங்கியுள்ளது.
    • தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்து வருகின்றனர்.

    கோவை

    கோவை வ. உ .சி மைதானத்தில் வருகிற 26-ந் தேதி குடியரசு தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.

    இதையடுத்து வ.உ.சி மைதானத்தில் தூய்மை பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் வ.உ.சி மைதானத்தில் பொருட்காட்சி கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. மேலும் தொடர் பொங்கல் விடுமுறை வந்ததால் அதிகமான பொதுமக்கள் அங்கு குவிந்தனர்.

    இதனால் வ.உ.சி மைதானம் முழுவதும் 10 டன் அளவிற்கு குப்பை தேங்கியுள்ளது. இதனை தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்து வருகின்றனர்.

    குப்பைகள்

    இந்த பணியில் 50 தூய்மை பணியாளர்கள் சுழற்சி முறையில் ஈடுபட்டுள்ளனர்.

    அங்கு கிடக்கும் குப்பைகள் அனைத்தையும் சேகரித்து சுத்தம் செய்யும் பணி முழுவீச்சில் தீவிரமாக நடந்து வருகிறது.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கோவை வ.உ.சி மைதானத்தில் வருகிற 26-ந் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மைதானத்தை சுத்தம் செய்து நாளை போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளோம். தொடர் விடுமுறையாளும், பொருள்காட்சி நடந்ததாலும் பொதுமக்கள் அதிகளவில் வந்து சென்றுள்ளனர்.

    இதனால் வ.உ.சி மைதானம் முழுவதும் அதிகளவில் குப்பைகள் தேங்கியுள்ளது. இதுவரை 5 லாரிகளில் குப்பைகளை சேகரித்துள்ளோம். 10 டன் அளவிற்கு குப்பைகள் தேங்கி உள்ளது. தொடர்ந்து சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. நாளை மைதானத்தை போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளதால் 50 தூய்மை பணியாளர்களை 30 பேர், 20 பேர் என பிரித்து சுழற்சி முறையில் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளோம். இந்த பணி இன்று காலை 4 மணிக்கு தொடங்கப்பட்டது. இரவு 7 மணி வரை தூய்மை பணியில் ஈடுபடுவோம்.

    இந்த குப்பைகளை பொருட்காட்சி நிர்வாகம் தான் அகற்றி தர வேண்டும். ஆனால் அவர்கள் செய்யாததால் நாங்கள் செய்து வருகிறோம். நாளைக்குள் முடிப்பதற்காக பணிகளை தீவிரமாக சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

    ×