search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை மாவட்டம்"

    • கோவையில் பல்வேறு அணைக்கட்டு பகுதிகளில் உள்ள மதகுகள் சிதிலம் அடைந்துள்ளது.
    • அரசு உடனடியாக சாலையோரம் உள்ள கிணறுகளை சுற்றி பாதுகாப்பு தடுப்பு அமைக்க வேண்டும்

    கோவை

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சமீரன் தலைமையில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நடைபெற்றது.

    இதில் மாவட்டத்தில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக கொடுத்தார். கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் பேசியதாவது:-

    கோவை மாவட்டத்தில் பல்வேறு நீர் தேக்கப் பகுதிகளில் உள்ள மதகுகள் சரிபார்க்கப்பட வேண்டும். பல்வேறு அணைக்கட்டு பகுதிகளில் உள்ள மதகுகள் சிதிலம் அடைந்துள்ளது. ஷட்டர்கள் பழுது பார்க்கப்பட வேண்டும். பரம்பிக்குளம், ஆழியார் போன்ற ஷட்டர் விபத்துக்கள் தவிர்க்கப்பட வேண்டும். நீர் ஆதாரப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்.

    தமிழகத்தில் நெல் உற்பத்தி செலவு ஒரு குவிண்டாலுக்கு ரூ.1805 ஆகிறது. கேரளாவில் நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.2820 என கேரளா அரசு தற்சமயம் அறிவித்துள்ளனர்.

    அதே போல் தமிழகத்தில் நெல் விவசாயிகளுக்கு ரூ.2820 வழங்க வேண்டும். கோவை மாவட்டத்தில் நெடுஞ்சாலை மற்றும் கிராம பொது பாதைகளில் ஓரமாக பயன்படுத்தாத கிணறுகள், விவசாயத்துக்கு பயனுள்ள கிணறுகள் உள்ளது.

    குறிப்பாக காரமடை ஒன்றியம், தொண்டா முத்தூர், புத்தூர், தேவரா யம்பாளையம் போகும் வழியில் உள்ள கிணறுகள் பாதுகாப்பாக இல்லாத நிலையில் சாலை விபத்துகள் ஏற்படுகிறது. அரசு உடனடியாக சாலையோரம் உள்ள கிணறுகளை சுற்றி பாதுகாப்பு தடுப்பு அமைக்க வேண்டும். தமிழகத்தில் வனப்பரப்பு அதிகரிக்க பசுமை தமிழகம் இயக்கம் கோவைக்கு விரிவாக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினார்.

    • கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • கொரோனா பரவல் உள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு பணி மற்றும் சுகாதார பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றானது ஒற்றை இலக்கத்திலேயே பதிவாகி வந்தது. இதனால் கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டன.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கோவை மாவட்டத்தில் தொற்று பாதிப்பு மெல்ல, மெல்ல உயர்ந்து வருகிறது. குறிப்பாக கடந்த 3 தினங்களாக பாதிப்பானது 50-யை தாண்டி பதிவாகி வருகிறது. நேற்று முன்தினம் 89 பேருக்கு தொற்று பதிவாகி இருந்த நிலையில், நேற்று 104 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

    6 மாதங்களுக்கு பிறகு நேற்று மாவட்டத்தில் தொற்று பாதிப்பானது 100யை கடந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 30 ஆயிரத்து 773 ஆக உயர்ந்துள்ளது.

    நேற்று தொற்றில் இருந்து குணமடைந்து 22 பேர் வீடு திரும்பினர். இதுவரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 727 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 429 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மாவட்டத்தில் தொற்று பரவல் அதிகமுள்ள பகுதிகளாக ஆர்.எஸ்.புரம், வடவள்ளி, தொண்டாமுத்தூர், எஸ்.எஸ்.குளம், குரும்பபாளையம் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. இதுதவிர மாவட்டம் முழுவதும் தொற்று பரவல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் உள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு பணி மற்றும் சுகாதார பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    எஸ்.எஸ்.குளம் வட்டாரத்தில் குரும்பபாளையம் ஸ்ரீகார்டன் முதல் தெருவில் ஒரே வீட்டில் 4 பேருக்கும், ஆர்.எஸ்புரத்தில் ஒரே வீட்டில் 3 பேருக்கும் தொற்று உறுதியானதை அடுத்து அந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக (மைக்ரோ) அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் புதிய கிளாஸ்டர்கள் கண்டறியப்பட்டுள்ள 2 பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட தூய்மை பணிகளை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டனர். தொடர்ந்து தொற்றுக்கு ஆளானவர்களை சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குனர் அருணா கூறுகையில், ஒரே வீட்டில் 3 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டால் மைக்ரோ கட்டுப்பாட்டு பகுதிகள் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவையில் நோய் தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் முக கவசம் அணிய வேண்டும். அலட்சியம் ஆபத்தை விளைவிக்கும் என்பதை மக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.

    கோவையில் தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து நேற்றுமுன்தினம் முதல் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணியதாவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    மாநகராட்சி பகுதியில் நேற்று ஒரே நாளில் மட்டும் முககவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.2,500 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

    ×