search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் வளாகம்"

    செங்குன்றம் அருகே கோவில் வளாகத்தில் பதுங்கி இருந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

    செங்குன்றம்:

    செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகரை சேர்ந்தவர் ராகுல் (வயது 22). இவர் செங்குன்றம் பகுதியில் ரவுடியாக வலம் வந்தார். இவர் மீது கொலை முயற்சி, அடிதடி, கொலை மிரட்டல் உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

    தொடர்ந்து பல்வேறு குற்றங்களில் ஈடுபடுவதாக புகார்கள் வந்தன. இந்த நிலையில் நேற்று வழிப்பறியில் ஈடுபட்டார்.

    ஜோதிநகரில் கணேசன் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்த போது, ரவுடி ராகுல் வழிமறித்து நிறுத்தினார். அவரிடம் இருந்து ரூ. 5 ஆயிரம் ரொக்கம், செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டார்.

    இதையடுத்து செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் ரவுடி ராகுலை தேடி வந்தனர். இந்த நிலையில் பாடியநல்லூர் அங்காளஈஸ்வரி கோவில் வளாகத்தில் பதுங்கி இருந்த ரவுடி ராகுலை கைது செய்தனர்.

    தமிழகத்தில் உள்ள கோவில் வளாகங்களில் இருக்கும் கடைகளை அகற்ற அரசு உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், கடைகளை அகற்ற கால அவகாசத்தை நீட்டித்து ஐகோர்ட் மதுரை கிளை இன்று உத்தரவிட்டுள்ளது. #MeenakshiAmmanTemple
    சென்னை:

    பிப்ரவரி 2-ம் தேதி உலக புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள கடைகளில் தீவிபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    கோவில் தீ விபத்துக்கு அறநிலையத்துறையின் அலட்சியமே காரணம் என பல்வேறு இந்து அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தினர். தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களையும் அதன் சொத்துக்களையும் இந்து அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

    இதற்கு பலகட்ட போராட்டங்களும் அரங்கேறின. இதையடுத்து, தீப்பிடித்த சில தினங்களிலேயே மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்த கடைகள் அகற்றப்பட்டன.

    மேலும், தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களின் வளாகங்களில் உள்ள அனைத்து கடைகளையும் அகற்ற வேண்டும் என அறநிலையத்துறை உத்தரவிட்டது. இதற்கு வணிகர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    மேலும், வணிகர்கள் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கால அவகாசம் வேண்டி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அந்த தீர்ப்பில், கோவில் வளாகங்களில் உள்ள கடைகளை அகற்றுவதற்கு டிசம்பர் 31-ம் தேதி வரை கால அவகாசம் அளித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #Madurai #MeenakshiAmmanTemple
    ×