search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோழிக்கொண்டை பூ"

    • 300க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் கோழிக்கொண்டைப் பூ சாகுபடி செய்யப்பட்டுவருகிறது.
    • ஒரு ஏக்கருக்கு சொட்டு நீர் பாசனத்தில் கோழிக்கொண்டை சாகுபடி செய்ய ரூ.40 ஆயிரம் வரை செலவாகும்.

    பல்லடம் : 

    பல்லடம் சுற்று வட்டாரப் பகுதிகளான கணபதிபாளையம், கள்ளகிணறு,ஆலூத்துப்பாளையம், இலவந்தி, சித்தம்பலம், உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் கோழிக்கொண்டைப் பூ சாகுபடி செய்யப்பட்டுவருகிறது. ஒரு ஏக்கருக்கு சொட்டு நீர் பாசனத்தில் கோழிக்கொண்டை சாகுபடி செய்ய ரூ.40 ஆயிரம் வரை செலவாகும். இதில் ஏக்கருக்கு 1000 கிலோ முதல்2000 கிலோ வரை பூக்கள் அறுவடை செய்யலாம்.

    கோழிக்கொண்டைப்பூக்கள் சிவப்பு, ஊதா ஆகிய நிறங்களில் செடிகளில் பூக்கும். சம்பங்கி, செண்டுமல்லி ஆகிய பூ மாலைகளுக்கு அழகு சேர்க்க கோழிக்கொண்டை பூக்கள் பயன்படுகிறது. பல்லடம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் கோழிக்கொண்டைப்பூக்கள் திருப்பூர் மற்றும் கோவை பூ மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.இந்த நிலையில் ரோஜா பூக்களின் உற்பத்தி அதிகரித்ததால் கோழி கொண்டை பூ விற்கான தேவை குறைந்து விலை சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து கோழி கொண்டை பூ விவசாயிகள் கூறுகையில், முன்பு முகூர்த்த காலங்களில் கிலோ ரூ.60 க்கு விற்ற கோழி கொண்டை பூ தற்போது ரூ.30,ஆக சரிந்து விட்டது.மேலும் தற்பொழுது ரோஜா பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது.ரோஜாவை வைத்து மாலை கட்டும் பொழுது 3 நாட்கள் வரை வாடாமல் இருக்கும். இதனால் கோழிகொண்டை பூவுக்கான தேவை குறைந்து விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.மேலும் தற்போது கோழிகொண்டை பூ வாங்க வியாபாரிகள் முன் வராததால், பல வாரங்கள் பராமரித்து வளர்த்த செடிகளில் பூத்து குலுங்கும் பூக்கள், தற்போது செடியோடு கருகும் நிலையில் உள்ளது இதனால் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு சுமார் ரூ.20 ஆயிரத்திற்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • திருவிழாக்கள், திருமணம் உள்ளிட்ட விசேஷங்களில் மாலைகளுக்கான தேவை இருந்து கொண்டே இருக்கிறது.
    • மாலை கட்ட கோழி கொண்டை முக்கிய பங்கு வகிக்கிறது.

    திருப்பூர் :

    கோவில் திருவிழாக்கள், திருமணம் உள்ளிட்ட விசேஷங்களில் மாலைகளுக்கான தேவை இருந்து கொண்டே இருக்கிறது. மாலை கட்ட கோழி கொண்டை முக்கிய பங்கு வகிக்கிறது.

    கொரோனா ஊரடங்கு காலத்தில் கோழி கொண்டை பூக்களுக்கு விற்பனை இல்லாததால் பல விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.அதன்பின் நிலைமை சீரடைந்தது. தற்போது ரோஜா பூக்களின் உற்பத்தி அதிகரித்ததால் கோழி கொண்டை பூவிற்கான தேவைகுறைந்து விலை சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.விவசாயிகள் கூறுகையில், கிலோ 60 ரூபாய்க்கு விற்ற கோழி கொண்டை 35 ரூபாயாக சரிந்து விட்டது. தற்பொழுது ரோஜா பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது.ரோஜாவை வைத்து மாலை கட்டும் போது 3நாட்கள் வரை வாடாமல் இருக்கும். எனவே கோழிகொண்டைக்கான தேவை குறைந்து விலை சரிவு ஏற்பட்டுள்ளது என்றனர்.

    • 50 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் கோழிக் கொண்டை பூ பயிரிட்டு வந்தனர்.
    • விளையும் கோழி கொண்டை பூக்கள் பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விற்கப்படுகிறது.

    உடுமலை :

    உடுமலை பகுதியில் விவசாயிகள் மீண்டும் கோழிக் கொண்டை பூ சாகுபடி செய்ய தொடங்கியுள்ளனர்.

    உடுமலை மேற்கு ஒன்றிய பகுதிகளான புங்கமுத்தூர் ,பெரிய பாப்பனூத்து, சடைய கவுண்டனூர் உள்ளிட்ட இடங்களில் சுமார் 50 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் கோழிக் கொண்டை பூ பயிரிட்டு வந்தனர். ஏக்கருக்கு ரூ. 20ஆயிரம் வரை செலவு செய்யும் விவசாயிகள் பூ விற்பனை மூலம் கணிசமான அளவு லாபம் கிடைப்பதாக தெரிவித்தனர். இங்கு விளையும் கோழி கொண்டை பூக்கள் பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விற்கப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா தாக்குதல் காரணமாக விசேஷ நிகழ்ச்சிகள் ,கோயில் விழாக்கள் தடைபட்டதால் பூ விற்பனை குறைந்தது. கோழிகொண்டை பூக்களை யாரும் வாங்கவில்லை .இதனால் கோழி கொண்டை பூ சாகுபடியை விவசாயிகள் கைவிட்டு கத்தரி, வெண்டை, கீரை போன்றவற்றை பயிரிட்டனர் .இந்நிலையில் கொரோனாவின் தாக்குதல் குறைந்து உள்ளதால் இப்பகுதி விவசாயிகள் மீண்டும் கோழிக் கொண்டை பூ சாகுபடி செய்ய ஆர்வம் காட்டி வருகி

    ×