search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொத்தடிமை தொழிலாளர்"

    • கொத்தடிமை தொழிலாளர் எதிர்ப்பு தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.
    • 28 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 43 ஆயிரத்து 895 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது. இதில் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்தி றனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 339 மனுக்கள் பெறப்பட்டன.

    வருவாய்த்துறையின் சார்பில் சமூகப்பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு பல்வேறு வகையான உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.

    இளையான்குடி வட்டம் கீழாயூர் கிராமத்தில் அரவிந்தன் என்பவர் மின்சாரம் தாக்கி மரணமடைந்ததையொட்டி அவரது வாரிசுதாரருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதித்தொகை ரூ.1 லட்சத்திற்கான காசோலையையும், வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.2 ஆயிரம் மதிப்பீட்டிலான மானியத் தொகையில் பேட்டரி தெளிப்பான்களையும், 3 பயனாளிகளுக்கு மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தலா ரூ.1,465 வீதம் மொத்தம் ரூ.4 ஆயிரத்து 395 மதிப்பீட்டிலான மானியத் தொகையில் பண்ணைக் கருவிகளையும் கலெக்டர் வழங்கினார்.

    மேற்கண்டவை உள்பட மொத்தம் 28 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 43 ஆயிரத்து 895 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    பள்ளிக்கல்வித் துறையின் சார்பில், கொத்தடிமை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி நடந்த கட்டுரை, ஓவியம், பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு முதல் 3 இடங்களில் வெற்றி பெற்ற 9 மாணவ-மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், உதவி ஆணையர் (கலால்) ரத்தினவேல், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் (பொறுப்பு) சாந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • 30-ந்தேதி முதல் மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • விழுதுகள் அமைப்பின் நிர்வாகிகள், பொதுமக்கள் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொழிலாளர் துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் அறிவுரையின்படி, கடந்த மாதம் 30-ந்தேதி முதல் மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    கொத்தடிமை தொழிலாளர் குறித்து பொதுமக்களிடம் தெரிவிக்கும் வகையில் விழிப்புணர்வு நோட்டீசு வழங்கப்பட்டது. திருப்பூரில் நடந்த புத்தக திருவிழாவில் கையெழுத்து இயக்கம், பள்ளி குழந்தைகள் மூலம் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தொழிலாளர் துறை உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்கொடி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

    கொத்தடிமை தொழிலாளர் தொடர்பான உறுதிமொழியை கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர். பின்னர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில், கொத்தடிமை தொழிலாளர் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி, கவிதைகள் வாசித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியின் முடிவில் கல்லூரி முதல்வர் கிருஷ்ணன், விழுதுகள் தன்னார்வ தொண்டு அமைப்பினர், மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், தொழிலாளர் துறையை சேர்ந்த அலுவலர்கள் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, தொழிலாளர் துறை, தன்னார்வலர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் திருப்பூர் மத்திய பஸ் நிலையம் முன் நடைபெற்றது. பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் ஆகியோருக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. கொத்தடிமை தொழிலாளர் முறை பற்றி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும் சார்பு நீதிபதியுமான மேகலா மைதிலி, தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்கொடி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இதில் வக்கீல்கள், விழுதுகள் அமைப்பின் நிர்வாகிகள், பொதுமக்கள் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    • கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் பிப்ரவரி 9-ந் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
    • பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    பல்லடம் :

    கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 9-ந்தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து பல்லடத்தில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பல்லடம் தொழிலாளர் நலத்துறை மற்றும் வருவாய்துறை சார்பில், பல்லடம் பஸ் நிலையம் மற்றும் கடைவீதி உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில், பொதுமக்கள் மற்றும் கடைகளில் பணி புரியும் தொழிலாளர்கள், கடை உரிமையாளர்கள் ஆகியோருக்கு துண்டுப்பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில் பல்லடம் தொழிலாளர் நல உதவி ஆய்வாளர் சுகந்தி, வருவாய்த்துறை ஆய்வாளர் அனிதா, கிராம நிர்வாக உதவியாளர் செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×