search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரள மாணவி"

    • சிறுவயதிலேயே மோட்டார் சைக்கிள்களை பழுது நீக்குவதை தந்தையிடமிருந்து தியா கற்றுக்கொண்டார்.
    • தியா எங்களது பட்டறையில் இருப்பது மகிழ்ச்சியை தருகிறது.

    திருவனந்தபுரம்:

    மோட்டார்சைக்கிளை கையாள்வது ஆண்களை விட பெண்களுக்கு சற்று கடினமாகத்தான் இருக்கும். இதனால் பெண்கள் அதிகமாக ஸ்கூட்டர்களையே ஓட்டுகிறார்கள். அதே வேளையில் பல பெண்கள் மோட்டார்சைக்கிளையும் ஓட்டத்தான் செய்கிறார்கள்.

    இருசக்கர வாகனத்திலேயே அதிக எடை கொண்டதாக புல்லட் உள்ளிட்ட சில வாகனங்கள் திகழ்கின்றன. அவற்றை கையாளுவது ஆண்களுக்கே சற்று சிரமம் தான். இந்நிலையில் கேரள மாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் இளைய தொழில்முறை மெக்கானிக் என்று புகழப்படுகிறார்.

    கேரள மாநிலம் கோட்டத்தை சேர்ந்த ஜோசப் டொமினிக் என்பவரின் மகள் தியா ஜோசப். 21 வயது இளம்பெண்ணான இவர் மெல்லிய உடலமைப்பை கொண்டவர். காஞ்சிரப்பள்ளியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

    350 சி.சி. திறன் கொண்ட 200 கிலோ எடையுள்ள மோட்டார்சைக்கிளை சர்வசாதாரணமாக ஓட்டி செல்கிறார். சாலையில் அவர் செல்லும்போது, அவர் கடந்து செல்லும் வரை இமைக்காமல் பார்ப்பவர்களே அதிகம். ஒல்லியான தேகம் கொண்ட அவர், எடை அதிகமுள்ள மோட்டார்சைக்கிளை ஓட்டிச்சென்றால் பார்க்கத் தானே செய்வார்கள்.

    அவரது திறமை அது மட்டுமல்ல. அதிக திறன் கொண்ட மோட்டார்சைக்கிள்களை பழுதுநீக்குவதில் தனித்துவத்துடன் திகழ்ந்து வருகிறார். இவரது தந்தை இருசக்கர வாகன ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். தனது தந்தையின் ஒர்க்ஷாப்பிற்கு தியா சிறு வயதில் இருந்தே, வீட்டில் இருக்கும்போது அடிக்கடி சென்று வருவது வழக்கம்.

    இதனால் சிறுவயதிலேயே மோட்டார் சைக்கிள்களை பழுது நீக்குவதை தந்தையிடமிருந்து தியா கற்றுக்கொண்டார். அவர் பத்தாம் வகுப்பு படிக்கும் போதே இருசக்கர வாகன பழுதுநீக்கும் பணியை மேற்கொள்ள தொடங்கினார். அது மட்டுமின்றி இருசக்கர வாகன என்ஜினில் ஏற்படும் சிக்கலான பழுதுகளையும் எளிதாக கையாண்டு பழுது நீக்கக்கூடிய வகையில் முன்னேற்றம் கண்டார்.

    இதனால் விடுமுறை நாட்களில் பெரும்பாலான நேரத்தை தனது தந்தையின் ஒர்க்ஷாப்பில் கழிக்க தொடங்கினார். மகளின் ஆர்வத்தை பார்த்து பழுது நீக்கும் பணிகளை மகளுக்கு ஜோசப் டொமினிக் கொடுத்தார். அதில் பல புதிய யுக்திகளை கடைபிடித்து வேலையை விரைவாக முடித்தார். 

    தந்தை ஜோசப் டொமினிக், தாய் ஷைன், சகோதரி மரியாவுடன் மாணவி தியா.

    தந்தை ஜோசப் டொமினிக், தாய் ஷைன், சகோதரி மரியாவுடன் மாணவி தியா.

    இதன் காரணமாக இருசக்கர வாகன பழுது நீக்குவதில் இளம் வயதிலேயே திறமையானவராக மாறினார். இதனால் தான் இளைய தொழில்முறை மெக்கானிக் என்று புகழப்படும் அளவுக்கு உருவெடுத்தார். மாணவி தியா குறித்து அவரது தந்தை ஜோசப் டொமினிக் கூறியதாவது:-

    புதிய திறன்களை கற்றுக்கொள்வது எப்போதுமே நன்மை பயக்கும். தியா எங்களது பட்டறையில் இருப்பது மகிழ்ச்சியை தருகிறது. அதிகவேலை இருக்கும்போது அவர் இருப்பது எங்களுக்கு ஓய்வெடுக்க உதவியாக இருக்கிறது. அவர் மிகுந்த நகைச்சுவை உணர்வை கொண்டவர்.

    ஒருமுறை புல்லட்டின் என்ஜினை ஏற்றும்போது தியா கையில் பலத்த காயம் ஏற்பட்டுவிட்டது. அதன்பிறகும் அவர் பின்வாங்கவில்லை. காயம் சரியானதும் வேலைக்கு திரும்பினாள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இளைய தொழில்முறை மெக்கானிக் என்று புகழப்படும் மாணவி தியாவுக்கு சென்னையில் உள்ள ராயல் என்பீல்டு தொழிற்சாலை வேலைக்கு அழைத்திருக்கிறது. இது குறித்து தியா கூறியிருப்பதாவது:-

    இது ஒரு பெரிய ஆச்சரியம். இப்படியொரு அழைப்பை நான் எதிர்பார்க்கவில்லை. எனது ஆசிரியர்கள் என்னைப்பற்றி பெருமைப்படுவதாக கூறி வகுப்பு குழுக்களில் பகிர்ந்தனர். இதுவே நான் அடையக்கூடிய மதிப்புமிக்க அங்கீகாரம்.

    பொதுவாக ஒரு புல்லட்டை சர்வீஸ் செய்ய 2 முதல் 3 நாட்கள் ஆகும். ஆயில் மற்றும் கேபிள்களை மாற்றுவதற்கும், சங்கிலிகளை இறுக்குவதற்கும், மற்ற பாகங்களை இறக்குவதற்கும், ரீலோடு செய்வதற்கும் எனது தந்தைக்கு உதவுகிறேன். என்ஜின் சற்று கனமாக இருக்கும். அதனை தனியாக கையாள்வது சவாலானது.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    தோழியை பார்த்து விட்டு வருவதாக கூறி சென்ற மாணவி மாயமாகி 77 நாட்கள் ஆகியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் அவரை தேடும் பணியில் 500 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கூட்டுதுறையை சேர்ந்தவர் ஜேம்ஸ். தோட்ட தொழிலாளி. இவரது மகள் ஜேஸ்னா (20). இவர் கோட்டயம் மாவட்டம் காஞ்சர பள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி ஜேஸ்னா தனது தோழியை பார்த்து விட்டு வருவதாக கூறி சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து ஜேம்ஸ் கோட்டயம் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார்.

    போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் கல்லூரி மாணவி இறந்து கிடப்பதாக கேரள போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அவர் ஜேஸ்னாவாக இருக்கலாம் என கருதிய கேரள போலீசார் ஜேம்ஸ் மற்றும் அவரது உறவினர்களை அழைத்து கொண்டு செங்கல்பட்டு சென்றனர். ஆனால் பிணமாக கிடந்தவர் ஜேஸ்னா இல்லை என தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் மற்றும் ஜேம்ஸ் குடும்பத்தினர் கேரளா திரும்பினார்கள். தனது மகள் மாயமானது குறித்து ஜேம்ஸ் கோர்ட்டில் கேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்து இருந்தார்.

    மேலும் கேளரள முதல்-மந்திரி, டி.ஜி.பி. ஆகியோரிடமும் புகார் அளித்து இருந்தார்.

    மாயமாகி 77 நாட்கள் ஆகியும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து தேடும் பணிக்கு சிறப்பு குழுவினர் நியமிக்கப்பட்டனர். இதில் ஒரு போலீஸ் சூப்பிரண்டு, 4 டி.எஸ்,பி.க்கள், சர்க்கிள் இன்ஸ்பெக்டர்கள் 8 பேர் என மொத்தம் 500 போலீசார் இடம் பெற்றுள்ளனர்.

    அவர்கள் இன்று முதல் மாணவியை தேடும் பணியை தொடங்கினார்கள். மாணவி ஜேஸ்னா மாயமாகும் முன் தனது தோழிக்கு செல்போனில் தகவல் அனுப்பி உள்ளார். அதில் நான் மரணம் அடைய போகிறேன் என தெரிவித்து உள்ளார்.

    இந்த தகவல் இன்று தான் சைபர் கிரைம் போலீசார் மூலம் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மாணவியை தேடும் பணியில் சிறப்பு குழுவினர் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

    மாணவி மரணம் அடைய போவதாக தகவல் அனுப்பி இருந்ததால் கோட்டயம், இடுக்கி, பத்தனம் திட்டா மாவட்டங்களில் உள்ள ஆறு, கடல், வனப்பகுதி, பாழடைந்த கிணறுகள், குளம் ஆகிய பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. #tamilnews
    ×