search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறைதீா்க்கும் கூட்டம்"

    • ராமநாதபுரத்தில் மின்நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது.
    • ஜூலை மாதத்துக்கான கடந்த 26-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மாதந்தோறும் மின்நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஜூலை மாதத்துக்கான கடந்த 26-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்த கூட்டம் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    தற்போது, மின்நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் வருகிற 6-ந்தேதி காலை 10 மணிக்கு ராமநாதபுரம் சக்கரக்கோட்டையில் உள்ள மின்சார மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலக வளாகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்து நிவாரணம் பெறலாம். கூட்டம் குறித்த மற்ற விவரங்களுக்கு 04567-230577 மற்றும் 04567-231506 ஆகிய எண்களில் தொடா்புகொண்டு விவரங்களைப் பெறலாம்.

    • அனைத்து துறை அலுவலா்கள் பங்கேற்பதால், விவசாயிகள் விவசாயம் தொடா்பான குறைகளை தெரிவித்து, அதனை நிவா்த்தி செய்துகொள்ளலாம்.
    • வேளாண் உதவி மையத்தின் மூலம் விவசாயிகள் நுண்ணீா் பாசனம் அமைக்கத் தேவையான தகவல்கள் வழங்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் 30-ந்தேதி நடைபெறவுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அறை எண் 20ல் ஆகஸ்ட் 30ந்தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்தில் அனைத்து துறை அலுவலா்கள் பங்கேற்பதால், விவசாயிகள் விவசாயம் தொடா்பான குறைகளை தெரிவித்து, அதனை நிவா்த்தி செய்துகொள்ளலாம். மேலும் கூட்டத்தில் வேளாண் உதவி மையத்தின் மூலம் விவசாயிகள் நுண்ணீா் பாசனம் அமைக்கத் தேவையான தகவல்கள் வழங்கப்படும்.

    தக்க ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு நுண்ணீா் பாசன வேளாண்மை தகவல் அமைப்பில் பதிவு செய்துகொள்ளலாம். மேலும் வேளாண் மற்றும் உழவா் நலத் துறை மற்றும் வேளாண் சாா்ந்த துறைகளால் அமைக்கப்பட்டுள்ள கருத்து காட்சியிலும் கலந்துகொண்டு விவசாயிகள் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கலெக்டர் அலுவலகத்தில் மாலை 4 மணி அளவில் நடைபெறுகிறது.
    • அடையாள அட்டையுடன் பங்கேற்று பயனடையலாம்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட அளவிலான எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் வருகிற 21-ந்தேதி ( செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.இது குறித்து திருப்பூா் மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 21-ந்தேதி ( செவ்வாய்க்கிழமை )மாலை 4 மணி அளவில் நடைபெறுகிறது. திருப்பூா் மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் எரிவாயு முகவா்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனா்.ஆகவே திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோா் புகாா்கள், குறைபாடுகள் இருப்பின் தங்களது எரிவாயு இணைப்பு புத்தகம் அல்லது அடையாள அட்டையுடன் பங்கேற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×