search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறைதீர்வு முகாம்"

    • போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது
    • ஏராளமானோர் மனு அளித்தனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்தில் பொதுமக்கள் குறைதீர்வு முகாம் நேற்று நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் சிவனுபாண் டியன் (தலைமையகம்), சவுந்தரராஜன் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றதடுப்பு பிரிவு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது புகார் மனுக்களை போலீஸ் சூப்பி ரண்டுவிடம் வழங்கினர்.

    பெறப்பட்ட மனுக்கள் குறித்து அவர் விசாரணை மேற்கொண்டார் மேலும் சில மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டு விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.

    இந்தமுகாமில் நிலப்பிரச்சினை, பணப்பிரச்சினை தொடர் பாக ஏராளமானவர்கள் மனு அளித்திருந்தனர்.

    • நாளை நடக்கிறது
    • பல்வேறு விவரங்கள் தெரிவிக்கப்பட உள்ளது

    வேலூர்:

    மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், செயல்பட்டு வரும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி(பி.எப்) நிறுவனம் சார்பில், நாளை (செவ்வாய்க்கிழமை) வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் குறைதீர்வு முகாம் நடக்கிறது.

    அதன்படி வேலூர் மாவட்டத்தில் காட்பாடி மாதா கோவில் பின் தெரு, க்ளூனி கான்வென்ட் 14/2, (காமராஜ் ஜூஸ் கடை அருகில்), திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி அகஸ்தியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலவையில் உள்ளஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூரில் உள்ள, பிளெஸ்ஸோ மெட்ரிகுலேஷன் பள்ளியிலும் குறைதீர்வு முகாம் நடக்கிறது. இந்த இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5.45 வரை குறைதீர் முகாம் நடக்கிறது.

    இதில், உறுப்பினர்களுக்கான சேவைகள், குறைகளை நிவர்த்தி செய்தல், முதலா ளிகள், பணியாளர்கள், ஒப்பந்ததா ரர்களுக்கான ஆன்லைன் சேவைகள், ஊழியர்க ளுக்கான இணையதள சேவைகள், முதலாளி கள், ஊழியர்க ளுக்கான சட்டங்கள், கடமைகள், பொறுப்புகள், விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுடன் உள்ள தொடர்புகள், புதிய முயற்சிகள் மற்றும் சீர்திருத்தங்கள் பற்றிய விழிப்புணர்வு, ஓய்வூதியதாரர்கள் டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ்களை சமர்ப்பி த்தல், உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் முதலாளி களிடமிருந்து வரும் குறைகளை நிவர்த்தி செய்தல், மின்- நாமினேஷனை தாக்கல் செய்தல், ஒப்பந்த தாரர்களின் விவரங்களைப் பதிவேற்றுதல் தொடர்பான விவரங்கள் தெரிவிக்கப்பட உள்ளது.

    • வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது
    • மாவட்ட வருவாய் அலுவலர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள காயிதே மில்லத் கூட்டரங்கில் 2 மாதத்திற்கு ஒரு முறை நடக்கும் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்வு கூட்டம் இன்று காலை நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி தலைமை தாங்கினார்.

    மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி மாற்றுத்திற னாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.

    இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    விபத்தில் மரணமடைந்த மாற்றுத்திறனாளிகள் 2 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.4 லட்சமும், .இயற்கை மரணம் அடைந்த மாற்றுத்திறனாளிக ளுக்கான ஈமச்சடங்கு தொகை ரூ.17 ஆயிரம் வீதம் 8 நபர்களுக்கு ரூ.1.36 லட்சம் என மொத்தம் ரூ.5.36 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    • நாளை நடக்கிறது
    • மோசடி தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது

    வேலூர்:

    வேலூர், திருவண்ணா மலை, திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பி.எப். அலுவலகங்கள் சார்பில் மக்கள் குறை தீர்வு முகாம் நாளை நடைபெற உள்ளது.

    காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் முதலாளி, தொழிலா ளிகளின் கடமைகள் மற்றும் பொறுப்புகளுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.

    ஆன்லைன் சேவை பற்றிய செயல்முறை விளக்கம், புதிய முயற்சி மற்றும் சீர்திருத்தங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    மேலும் டிஜிட்டல் சேவைகள் பற்றி கற்பித்தல், முதலாளிகள் தொடர்பான ஊழியர்களின் உரிமைகள் மற்றும் மோசடி தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

    இந்த முகாம் வேலூரில், அப்துல்லாபுரத்தில் உள்ள பல்லவன் கல்வியியல் கல்லூரியிலும், திருவண்ணா மலை மாவட்டத்தில் உள்ள வர்களுக்கு ஆரணி, கொசப்பாளையத்தில் உள்ள ஹீரோ கிட்சிலுல், திருப்பத்தூரில் ஒய் எம் சி ஏ இண்டஸ்ட்ரீஸ் பயிற்சி நிறுவனத்திலும், ராணிப்பேட்டையில் வாலாஜா சீகராஜபுரத்தில் உள்ள ரிஷி மெட்ரிகுலேஷன் பள்ளியிலும் நடக்கிறது.

    இந்த முகாமில் பங்கு பெற விரும்புபவர்கள் தங்களது விவரங்களை இணையத்தில் பதிவு செய்யுமாறு மண்டல ஆணையாளர் ரிதுராஜ் மேதி தெரிவித்ததுள்ளார்.

    ×