search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பி.எப். அலுவலகம் சார்பில் மக்கள் குறைதீர்வு முகாம்
    X

    பி.எப். அலுவலகம் சார்பில் மக்கள் குறைதீர்வு முகாம்

    • நாளை நடக்கிறது
    • மோசடி தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது

    வேலூர்:

    வேலூர், திருவண்ணா மலை, திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பி.எப். அலுவலகங்கள் சார்பில் மக்கள் குறை தீர்வு முகாம் நாளை நடைபெற உள்ளது.

    காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் முதலாளி, தொழிலா ளிகளின் கடமைகள் மற்றும் பொறுப்புகளுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.

    ஆன்லைன் சேவை பற்றிய செயல்முறை விளக்கம், புதிய முயற்சி மற்றும் சீர்திருத்தங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    மேலும் டிஜிட்டல் சேவைகள் பற்றி கற்பித்தல், முதலாளிகள் தொடர்பான ஊழியர்களின் உரிமைகள் மற்றும் மோசடி தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

    இந்த முகாம் வேலூரில், அப்துல்லாபுரத்தில் உள்ள பல்லவன் கல்வியியல் கல்லூரியிலும், திருவண்ணா மலை மாவட்டத்தில் உள்ள வர்களுக்கு ஆரணி, கொசப்பாளையத்தில் உள்ள ஹீரோ கிட்சிலுல், திருப்பத்தூரில் ஒய் எம் சி ஏ இண்டஸ்ட்ரீஸ் பயிற்சி நிறுவனத்திலும், ராணிப்பேட்டையில் வாலாஜா சீகராஜபுரத்தில் உள்ள ரிஷி மெட்ரிகுலேஷன் பள்ளியிலும் நடக்கிறது.

    இந்த முகாமில் பங்கு பெற விரும்புபவர்கள் தங்களது விவரங்களை இணையத்தில் பதிவு செய்யுமாறு மண்டல ஆணையாளர் ரிதுராஜ் மேதி தெரிவித்ததுள்ளார்.

    Next Story
    ×