பொதுமக்கள் குறைதீர்வு முகாம்

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்ததுஏராளமானோர் மனு அளித்தனர்
பொதுமக்கள் குறைதீர்வு முகாம்
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்தில் பொதுமக்கள் குறைதீர்வு முகாம் நேற்று நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் சிவனுபாண் டியன் (தலைமையகம்), சவுந்தரராஜன் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றதடுப்பு பிரிவு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது புகார் மனுக்களை போலீஸ் சூப்பி ரண்டுவிடம் வழங்கினர்.

பெறப்பட்ட மனுக்கள் குறித்து அவர் விசாரணை மேற்கொண்டார் மேலும் சில மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டு விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.

இந்தமுகாமில் நிலப்பிரச்சினை, பணப்பிரச்சினை தொடர் பாக ஏராளமானவர்கள் மனு அளித்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com