search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடீநீர் தட்டுப்பாடு"

    திருப்பாலைக்குடி கிராமத்தில் உள்ள குடிநீர் பற்றாக்குறையினை சரிசெய்திடும் வகையில் ரூ.23.05 லட்சம் மதிப்பில் 1300 அடியில் ஆழ்குழாய் அமைப்பதற்கான ஆணையினை கலெக்டர் வழங்கினார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்களின் குறைகளை கேட்ட கலெக்டர் அதிகாரிகளை அழைத்து மனுவில் குறிப்பிட்ட தேதிக்குள் குறைகளை தீர்க்க உத்தரவிட்டார். பொதுமக்களிடமிருந்து மொத்தம் 267 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கான உதவித்தொகையாக தலா ரூ.17 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.51 ஆயிரத்துக்கான காசோலைகளையும், சமூகநலத்துறையின் சார்பில் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதிர்வுத் தொகையாக 6 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1,85,157-க்கான காசோலைகளையும் கலெக்டர் வழங்கினார்.

    ராமேசுவரம் வட்டம், தங்கச்சிமடம் கிராமத்தைச் சேர்ந்த சத்தியா என்பவரின் மகன் பூண்டிராஜ் என்ற மீனவர் படகு மோதிய விபத்தில் தனது இடது கை இழந்தமைக்காக அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையினையும், வருவாய்த்துறையின் சார்பில் நலிந்த கலைஞர்களுக்கு மாத உதவித்தொகையாக 9 பயனாளிகளுக்கு ரூ.12 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1,08,000க்கான காசோலைகள் என மொத்தம் 19 பயனாளிகளுக்கு ரூ.3,94,157 மதிப்பிலான காசோலைகளை கலெக்டர் வழங்கினார்.

    அதனைத் தொடர்ந்து, கடந்த 5-ந் தேதியன்று திருப்பாலைக்குடிக்கு சென்ற கலெக்டரிடம் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருவதாகவும், குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    அதனை பரிசீலித்த கலெக்டர் திருப்பாலைக்குடி கிராமத்தில் உள்ள குடிநீர் பற்றாக்குறையினை சரிசெய்திடும் வகையில் ரூ.23.05 லட்சம் மதிப்பில் 1300 அடியில் ஆழ்குழாய் அமைப்பதற்கான ஆணையினை வழங்கினார். இந்த பணிக்கு கிராம பொது மக்களும் தாமாகவே முன் வந்து ரூ.7 லட்சத்தினை மக்கள் பங்களிப்பாக செலுத்தினர்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஹெட்சி லீமாஅமாலினி, மகளிர் திட்ட இயக்குநர் குருநாதன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் காளிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
    ஈரோடு வீரப்பம்பாளையத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் தற்காலிகமாக லாரிகள் மூலம் மேல்நிலை தொட்டியில் குடிநீர் ஏற்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திண்டல்:

    ஈரோடு மாநகராட்சி 32-வது வார்டுக்குட்பட்ட வீரப்பம் பாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாகவே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

    வீரப்பம்பாளையம் பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் ஆற்றுநீர், ஆழ் குழாய் நீர் மேல்நிலை தொட்டி அமைத்து குழாய் மூலம் குடிநீர் பெற்று வருகின்றனர்.

    இது குறித்து வீரப்பம் பாளையம் பகுதி மக்கள் கூறியதாவது.-

    எங்கள் பகுதியில் கடந்த சில நாட்களாகவே கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் ஆற்று நீர் நீரேற்று நிலையத்தில் பழுது ஏற்பட்டதால் இப்பகுதிக்கு முறையாக ஆற்று நீர் கிடைக்கவில்லை.

    அதே போல் ஆழ்நிலை குழாய்கள் வறண்டு விட்டதால் முறையாக தண்ணீர் வருவதில்லை. ஒரே ஒரு ஆழ்குழாய் மூலம் தற்போது தண்ணீர் பிடித்து வருகிறோம். அதுவும் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து பிடிக்க வேண்டி உள்ளது.

    மேலும் எங்கள் பகுதிக்கு வரும் கீழ்பவானி வாய்க்காலில் வரும் தண்ணீரும் முறையாக பராமரிப்பு இன்றியும், தூர்வார படாததாலும் குறைந்த அளவே வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது.

    எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எங்கள் பகுதிக்கு சீராக தண்ணீர் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். அது வரைக்கும் தற்காலிகமாக லாரிகள் மூலம் மேல்நிலை தொட்டியில் குடிநீர் ஏற்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #tamilnews
    ×