search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்"

    புரோ கபடி லீக் போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் - உ.பி.யோத்தா அணிகள் இன்று மோதுகின்றன. #ProKabaddi #GujaratFortunegiant #UPYoddha
    மும்பை:

    6-வது புரோ கபடி லீக் தொடரில் மும்பையில் இன்று நடக்கும் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் சுனில் குமார் தலைமையிலான குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்-ரிஷாங் தேவாடிகா தலைமையிலான உ.பி.யோத்தா அணிகள் பலப்பரீட்சையில் இறங்குகின்றன.

    லீக் சுற்றில் தட்டுத் தடுமாறி ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் தடம் பதித்த உ.பி.யோத்தா அணி வெளியேற்றுதல் சுற்று ஆட்டங்களில் முன்னாள் சாம்பியன் மும்பை, தபாங் டெல்லி ஆகிய அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி 2-வது தகுதி சுற்றுக்குள் நுழைந்து இருக்கிறது. இந்த கடைசி தடையை தாண்டினால் உ.பி.யோத்தா அணி இறுதிப்போட்டியை எட்டி விடும். கடைசி 8 ஆட்டங்களில் தோல்வியையே சந்திக்காத அந்த அணி அதே உத்வேகத்தை இந்த ஆட்டத்திலும் தொடர முயற்சிக்கும்.

    குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி லீக் ஆட்டங்களில் 17 வெற்றி, 3 தோல்வி, 2 ‘டை’யுடன் தனது பிரிவில் (ஏ) முதலிடம் பிடித்தது. ஆனால் முதலாவது தகுதி சுற்றில் அந்த அணி, பெங்களூரு புல்சிடம் தோல்வி கண்டு தனது முதல் வாய்ப்பை கோட்டை விட்டது. 2-வது தகுதி சுற்றிலும் தோல்வி அடைந்தால், வெளியேற வேண்டியது தான் என்பதால் இந்த ஆட்டத்தில் குஜராத் அணி வெற்றிக்காக பலமாக மல்லுக்கட்டும். கடைசி ஆட்டத்தில், தற்காப்பு யுக்தியில் சரிவு கண்டதே குஜராத் அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. அந்த தவறை சரி செய்து புத்துணர்ச்சியுடன் களம் காணும். இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

    இந்த சீசனில் இரு அணிகளும் ஒரே ஒரு முறை லீக் ஆட்டத்தில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அதில் குஜராத் அணி 37-32 என்ற புள்ளி கணக்கில் உ.பி.யோத்தாவை வீழ்த்தி இருந்தது. இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.  #ProKabaddi #GujaratFortunegiant #UPYoddha 
    புரோ கபடி லீக்கில் இன்று நடைபெற்ற முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் குஜராத்தை 41 - 29 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி பெங்களூரு இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. #ProKabaddiLeague #GujaratFortuneGiants #BengaluruBulls
    கொச்சி:

    6-வது புரோ கபடி லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 12 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் ‘ஏ’ பிரிவில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ், யு மும்பா, தபாங் டெல்லி, ‘பி’ பிரிவில் பெங்களூர் புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், உ.பி.யோத்தா ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே ஆப்ஸ் சுற்று) முன்னேறின.
     
    நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் உ.பி. யோதா 34 - 29 என்ற புள்ளிக்கணக்கில யு மும்பாவை தோற்கடித்தது. மற்றொரு சுற்றில் தபாங் டெல்லி 39 - 28 என்ற புள்ளிக்கணக்கில் பெங்காலை விரட்டியது. அதன்மூலம் யு மும்பா, பெங்கால் அணிகள் வெளியேற்றப்பட்டன.

    இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதிச்சுற்று ஆட்டம் இன்று இரவு 8 மணிக்கு கொச்சியில் நடைபெற்றது. இதில் ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவில் முதலிடத்தை பிடித்த குஜராத் - பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் அதிரடியாக ஆடினர். முதலில், குஜராத் அணி வீரர்கள் சிறப்பாக ஆடியதால் முதல் பாதியில் 14 - 13 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்றது.

    ஆனால், இரண்டாவது பாதியில் பெங்களூரு அணி அபாரமாக ஆடியது. இதனால் ஆட்டத்தின் முடிவில் 41 - 29 என்ற புள்ளிக் கணக்கில் குஜராத்தை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் பெங்களூரு அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதில் தோற்ற குஜராத் அணி 2-வது தகுதி சுற்றில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது. #ProKabaddiLeague #GujaratFortuneGiants #BengaluruBulls
    புரோ கபடி லீக்கில் இன்று நடைபெறும் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் குஜராத் - பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #ProKabaddiLeague
    கொச்சி:

    6-வது புரோ கபடி லீக் தொடர் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. 12 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் ‘ஏ’ பிரிவில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ், யு மும்பா, தபாங் டெல்லி, ‘பி’ பிரிவில் பெங்களூர் புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், உ.பி.யோத்தா ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்ஸ் சுற்று) முன்னேறின.

    பிளே-ஆப்ஸ் சுற்று நேற்று தொடங்கியது. இதில் முதலாவது வெளியேற்றுதல் சுற்றில் (எலிமினேட்டர்) உ.பி. யோத்தா 34 - 29 என்ற புள்ளி கணக்கில யு மும்பாவை தோற்கடித்தது.

    இதேபோல் இன்னொரு வெளியேற்றுதல் சுற்றில் தபாங் டெல்லி 39 - 28 என்ற புள்ளி கணக்கில் பெங்காலை விரட்டியது. அதன்மூலம் யு மும்பா, பெங்கால் வெளியேற்றப்பட்டன.

    இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று ஆட்டம் இன்று இரவு 8 மணிக்கு கொச்சியில் நடக்கிறது. இதில் ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவில் முதலிடத்தை பிடித்த குஜராத் - பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    குஜராத் அணியில் சுனில் குமார், அஜய்சமார் பிரபஞ்சன் போன்ற வீரர்கள் உள்ளனர். இருஅணிகளும் 2-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் முனைப்பில் உள்ளன.

    பெங்களூர் அணியில் கேப்டன் ரோகித்குமார் முதுகெலும்பாக உள்ளார். முதல் தகுதி சுற்றில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

    தோற்கும் அணி 2-வது தகுதி சுற்றில் விளையாடும். அதனால் இன்றைய போட்டியிலேயே வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறும் ஆர்வத்தில் அணிகளும் உள்ளதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

    இரவு 9 மணிக்கு நடக்கும் 3-வது வெளியேற்றுதல் சுற்றில் உ.பி. யோத்தா - தபாங் டெல்லி அணிகள் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி 2-வது தகுதி சுற்றில் விளையாடும்.
    ×