search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராம உதவியாளர் தேர்வு"

    • ஸ்கில் டெஸ்ட் என்று சொல்லக்கூடிய திறன் தேர்வு இந்த மாதம் 15 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.
    • தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தலாம்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் தியாகி நாராயணசாமி நகராட்சி மேல் நிலைப்பள்ளியில் கிராம உத வியாளர் பதவிக்கான தேர்வு நடைபெற்ற தேர்வு மையத்தை கலெக்டர் இரா. லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வுக்குப் பின் கலெக்டர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணைப்படி தமிழக முழுவதும் கிராம நிர்வாக உதவியாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு நேற்று நடை பெறுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராம உதவியாளர் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 29 பதவிகளுக்கு எழுத்து தேர்வு நடைபெறுகிறது.

    2119 நபர்கள் தேர்வு எழுதி உள்ளனர். மாவட்டத்தில் உள்ள நான்கு தாலுக்காகளிலும் தேர்வு நடைபெற்றது.

    அதில் தமிழில் படிப்பதை எழுத வேண்டும். ஆங்கிலத்தில் படிப்பதை எழுத வேண்டும். ஸ்கில் டெஸ்ட் என்று சொல்லக்கூடிய திறன் தேர்வு இந்த மாதம் 15 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.

    விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் அலை பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். இந்த திறன் தேர்வு வட்டாட்சியர் தலைமை குழு அமைத்து அதன் கீழ் கமிட்டி அமைத்து நடைபெற உள்ளது.

    இதில் வந்து தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தலாம். என கலெக்டர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

    இந்த ஆய்வின் போது மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா, தாசில்தார் மகேந்திரன், சமூக நலத்துறை தாசில்தார் தையல்நாயகி, தலைமை இடத்து துணை வட்டாச்சியர் தெட்ஷிணாமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்

    • திருப்பத்தூர் கோட்டாட்சியர் ஆய்வு
    • அதிகாரிகள் உடன் இருந்தனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி பகுதியில் இன்று நடைபெறும் கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு மையங்களை திருப்பத்தூர் கோட்டாட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதனையொட்டி திருப்பத்தூர் மாவட்ட நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளியில் கிராம உதவியாளர் தேர்வு நடைபெறுயுள்ளது இதனையடுத்து நேற்று தேர்வு நடைபெறும் மையங்களை திருப்பத்தூர் கோட்டாட்சியர் லட்சுமி தலைமையில் திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது நாட்டறம்பள்ளி தாசில்தார் க.குமார், மண்டல துணை வட்டாட்சியர் ராஜேஷ், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சித்ரா மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவை பிரிவு சேர்ந்த அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • கலெக்டர் ஆய்வு
    • 1,070 பேர் எழுதினர்

    ஆற்காடு:

    ஆற்காடு ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று கிராம உதவியாளருக்கான எழுத்து தேர்வில் 1070பேர் எழுதினர். இந்த தேர்வு மையத்தை ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தேர்வு நடைபெற்ற அனைத்து அறைகளையும் பார்வையிட்டார்.

    அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், ஆற்காடு தாசில்தார் சுரேஷ், தலைமையிடத்து துணை தாசில்தார் ராஜலட்சுமி, மண்டல துணை தாசில்தார் பாலாஜி, வருவாய் ஆய்வாளர் பாரதி, வி.ஏ.ஓ.சக்கரவர்த்தி மற்றும் வருவாய் துறையினர் உடன் இருந்தனர்.

    • விண்ணப்பதாரர்கள் அனைவரும் காலை 9.30 மணிக்கு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர்.
    • அனுமதிச்சீட்டு இல்லாமல் எந்த விண்ணப்பதாரர்களும் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டகலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 59 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வருவாய் தாசில்தார்கள் மூலம் விண்ணப்பங்கள் கூராய்வு செய்யப்பட்டு, ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும், மாவட்ட வேலைவாய்ப்பகம் மற்றும் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் வருகிற 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று எழுத்து தேர்வு கீழ்கண்ட மையங்களில் நடத்தப்படவுள்ளது.

    எம்.எல்.எம்.மாமல்லன் மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பெரிய காஞ்சிபுரம். பாரதி தாசன் மெட்ரிக் மேல்நிலை பள்ளி, தாண்டவராய நகர், ஓரிக்கை, பெரிய காஞ்சிபுரம், எஸ்.எஸ்.கே.வி. மெட்ரிக் பள்ளி, பெரிய காஞ்சிபுரம்.

    ஆதி என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, சங்கராபுரம், வாலாஜாபாத் எம்.சி.ஏ. மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பழைய சீவரம், வாலாஜாபாத், செயின்ட் ஜோசப் மேல்நிலை பள்ளி, பாரதி நகர், வாலாஜாபாத்.மீனாட்சி அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உத்திரமேரூர்மீனாட்சி அம்மாள மெட்ரிக் மேல்நிலை பள்ளி, உத்திரமேரூர். மீனாட்சி அம்மாள் குளோபல் பள்ளி, பெருங்கோழி, உத்திரமேரூர். மகரிஷி பள்ளாட்டு உறைவிட பள்ளி, சுங்குவார் சத்திரம், மாதா என்ஜினீயரிங் கல்லூரி, குன்றத்தூர்.

    இணையவழியில் பதிவு செய்து ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு எழுத்து தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பத்தில் பதிவு செய்த கைபேசி எண், மின்னஞ்சல் முகவரிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதன் மூலம் அனுமதி சீட்டை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கிராம உதவியாளர் பணிக்கு இணைய வழியில் விண்ணப்பித்த இணையதள முகவரியானேhttps://agaram.tn.gov.in/olineforms/formpage-open.phd?id=43-174என்ற இணையதளத்தினுள் சென்று பதிவு எண்ணையும், கைபேசி எண்ணையும் பதிவு செய்து அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    மாவட்ட வேலைவாய்ப்பகம் மற்றும் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தபால் மூலம் பதிவஞ்சலில் தேர்வு அனுமதிசீட்டு அனுப்பி வைக்கப்படும்.

    மேலும், கூராய்வு செய்து ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பதாரர்கள் அனுமதி சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி உரிய தேர்வு மையத்திற்கு சரியான நேரத்தில் கலந்து கொள்ளுமாறு தேர்வர்கள் கேட்டு்கொள்ளப்படுகிறார்கள்.

    அனைத்து விண்ணப்பதாரர்களும் தேர்வு நாளன்று கீழ்காணும் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்:

    விண்ணப்பதாரர்கள் அனைவரும் காலை 9.30 மணிக்கு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் எவரும் தேர்வு அறைக்குள் காலை 9.50-க்கு பின் அனுமதிக்கப்படமாட்டார்கள் மற்றும் காலை 10.50-க்கு முன் தேர்வு அறையை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    அனுமதிச்சீட்டு இல்லாமல் எந்த விண்ணப்பதாரர்களும் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.

    விண்ணப்பதாரர்கள் கருப்பு பால்பாயின்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அனுமதி சீட்டு மற்றும் கருப்பு பால்பாயின்ட் பேனாவை தவிர தேர்வறைக்குள் வேறு எந்த பொருளையும் கொண்டுவரக் கூடாது.

    விண்ணப்பதாரர்கள் அலைபேசி, புத்தகங்கள், கைப்பைகள் மற்றும் வேறு எந்தவொரு மின்னணு சாதனங்களையும் தேர்வு மையத்திற்குள் கொண்டுவரக்கூடாது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×