search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காய்ச்சல் பாதிப்பு"

    • மூடுபனியுடன் கடும்குளிர் கொட்டுகிறது
    • பொதுமக்கள் முன்னெச்சரிகை நடவடிக்கையுடன் செயல்பட வேண்டுமென சுகாதாரத்துறையினர் கூறியுள்ளனர்.

    ஊட்டி, 

    நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்தது. அங்கு தற்போது சாரல் மட்டுமே பெய்கிறது. மேலும் ஊட்டியில் பனிமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக மாலை நேரங்களில் கடுங்குளிர் காணப்படுகிறது.

    எனவே ஊட்டியில் தற்போது நிலவி வரும் மாறுபட்ட காலநிலை கார ணமாக பொதுமக்களுக்கு தலைவலி, காய்ச்சல் மற்றும் வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் அங்கு உள்ள மருத்துவமனை மற்றும் கிளினிக்குகளில் நோயாளி களின் கூட்டம் அதிகளவில் காணப்படு கிறது.

    இதுகுறித்து நீலகிரி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் மாறுபட்ட காலநிலை நிலவுவதால் பொதுமக்க ளுக்கு காய்ச்சல், தலைவலி மற்றும் சளித்தொல்லை போன்ற நோய் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

    எனவே மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மேலும் சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால், பாதிக்கப்ப ட்டோர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.

    மேலும் மாறுபட்ட காலநிலையால் ஏற்படும் நோய் பாதிப்புகளில் இருந்து தங்களை காத்து கொள்ள குடிநீரை நன்றாக காய்ச்சி குடிக்க வேண்டும். சூடான உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதுதவிர காதுகளில் குளிர் காற்று புகாதவகையில் தொப்பி அல்லது மப்ளர் ஆகியவற்றை பயனபடுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    • டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களின் ரத்தம் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு உள்ளது.
    • கொசு உற்பத்தி ஆகும் வகையில் உள்ள குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகின்றன.

    செங்கல்பட்டு:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தலைவலி, காய்ச்சளி, சளி, இருமல், உடல்வலியுடன் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். 10 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருப்பதால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக படையெடுத்து வருகிறார்கள். இதனால் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் டெங்கு காய்ச்சலும் பொதுமக்களை மிரட்டி வருகிறது.

    செங்கல்பட்டு மாவட்டத்திலும் காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. இதனால் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து உள்ளது. தற்போது தினந்தோறும் சுமார் 250-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 11 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களின் ரத்தம் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு உள்ளது.

    இதைத்தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து உள்ளது. சுகாதார அதிகாரிகள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். வீடுகளில் தண்ணீர் தேங்காத வண்ணம் சுகாதாரமாக இருக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள். மேலும் கொசு உற்பத்தி ஆகும் வகையில் உள்ள குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகின்றன.

    மறைமலை நகராட்சியில் டெங்குகாய்ச்சல் தடுப்பு பணியாளர்கள் 95 பேர் மற்றும் பொறியாளர் பிரிவு அலுவலர்கள் உட்பட அனைத்து துறை ஊழியர்கள் உள்ளடக்கிய குழுவினர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்கள்.

    ஒவ்வொரு வீடாக சென்று கொசு புழுக்களை அழித்தல், காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரை கணக்கெடுத்தல், நிலவேம்பு கசாயம் வழங்குதல், புகை மருந்து தெளிப்பது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆய்வின் போது பொத்தேரி கக்கன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கொசு உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமின்றி இருந்ததால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இதுகுறித்து மறை மலைநகர் நகராட்சி ஆணையர் சவுந்தர்ராஜன் கூறும்போது, பொதுமக்கள் மற்றும் தொழில் சாலை நிர்வாகத்தினர் தங்களது வளாகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அனைவரும் நன்கு கொதிக்க வைத்த தண்ணீரை குடிக்க வேண்டும். காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுங்கள் என்றார்.

    • எச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளனர்.
    • 40 படுக்கை வசதிகள் தயார்நிலையில் உள்ளன.

    கோவை

    கடந்த சில மாதங்களாக தென்மேற்கு பருவமழை பெய்தது. இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மழைப்பொழிவு குறைந்து வெயில் சுட்டெரித்து வருகிறது. தற்போது சீதோஷ்ண நிலை மாறி வருவதால் சளி, இருமல், காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.

    இதற்கிடையில் குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. எனவே சுகாதர துறையினர் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கோவை ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனா். பள்ளிக்கு வந்த 8-ம் வகுப்பு மாணவிகள் 2 பேர் வாந்தி எடுத்துள்ளனா். இதனைத் தொடா்ந்து, பள்ளி நிா்வாகம் சாா்பில் சுகாதாரத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    மாநகராட்சி நகா் நல அலுவலா் பிரதீப் வ.கிருஷ்ணகுமாா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு வாந்தி எடுத்த மாணவா்களுக்கு சிகிச்சை அளித்தனா்.

    இது தொடா்பாக மாநகராட்சி நகா் நல அலுவலா் பிரதீப் வ.கிருஷ்ணகுமாா் கூறியதாவது:-

    மாணவிகள் 2 பேருக்கு காலையில் வீட்டில் இருந்து வந்த போதே காய்ச்சல் இருந்துள்ளது. இதனைத் தொடா்ந்து பள்ளிக்கு வந்தவுடன் வாந்தி எடுத்துள்ளனா். இதனைத் தொடா்ந்து, பள்ளியில் மருத்துவப் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.

    இதில் 834 மாணவா்களுக்குப் பரிசோதனை செய்யப்பட்டதில் 8-ம் வகுப்பில் 9 பேருக்கு, 10-ம் வகுப்பில் 3 பேருக்கும் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது.

    இதனைத் தொடா்ந்து, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவிகள் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். பின்னா் பள்ளியில் டெங்கு கொசுப்புழு அழிப்பு உள்ளிட்ட தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இது பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சாதாரண புளூ காய்ச்சல்தான். காய்ச்சல் இருந்தால் மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று பெற்றோா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கோவை மாநகரில் ப்ளூ காய்ச்சல் தொடர்பாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளோம். ஒரே இடத்தில் 3 பேருக்கு மேல் காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அந்த இடம் ஹாட் ஸ்பாட் என அறிவிக்கப்படும். கோவையில் அதுபோன்ற நிலை இல்லை. காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் தங்களை வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். வாந்தி பாதிப்பு ஏற்பட்ட மாணவிகளும் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பி விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் கபசுர குடிநீர் வழங்க அறிவுறுத்தப்பட்டது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் காய்ச்சல் பாதிப்புக்கு 62 குழந்தைகள் உள்நோயாளிகளாகவும், 739 பேர் வெளி நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்றுள்ளனர்.

    இந்த மாதம் 407 பேர் காய்ச்சல் பாதிப்புக்கு புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர். தற்போது சிறியவர், பெரியவர் என 30 பேர் காய்ச்சல் பாதிப்புக்கு உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் பாதிப்புக்காக வரும் குழந்தைகளை உள்நோயாளிகளாக அனுமதித்து சிகிச்சை அளிக்கும் வகையில் 40 படுக்கை வசதிகள் தயார்நிலையில் உள்ளன.

    ×