search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதல்ஜோடி தஞ்சம்"

    • திருப்பூரில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
    • இன்று காலை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்து மனு கொடுத்தனர்.

    கோவை,

    கோவை பட்டணம் அடுத்த நடுப்பாளையத்தை சேர்ந்தவர் பாலாஜி(வயது23).

    இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பட்டணம் பகுதியை சேர்ந்த யோகேஸ்வரி(22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் கடந்த 3 ஆண்டுகளாக ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.

    இந்த நிலையில் இவர்களது காதல் விவகாரம் யோகேஸ்வரின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வாலிபரிடம் பேசுவதையும் தவிர்க்குமாறு கூறியதாக தெரிகிறது.

    இருப்பினும் காதல்ஜோடியினர் செல்போனில் பேசி தங்கள் காதலை வளர்த்து வந்தனர். இந்த நிலையில் பெற்றோர் தங்களை சேர விடமாட்டார்கள் என நினைத்த காதலர்கள் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

    அதன்படி சம்பவத்தன்று காதல் ஜோடியினர் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி, திருப்பூரில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

    இவர்கள் திருமணம் செய்து கொண்டது தெரியவரவே பெண்ணின் பெற்றோர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் காதலர்களான பாலாஜி, யோகேஸ்வரி ஆகியோர் பாதுகாப்பு கேட்டு இன்று காலை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்து மனு கொடுத்தனர்.

    மனுவில், நாங்கள் இருவரும் காதலித்து வந்தோம். பின்னர் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எங்களது வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மிரட்டலும் விடுக்கின்றனர். எங்களது உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளது. எனவே எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.

    • வடமதுரை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு புதுமண காதல்ஜோடி தஞ்சம் அடைந்தனர்
    • போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே ரெட்டியபட்டியை சேர்ந்தவர் பிரவீன் குமார்(20). இவர் வடமதுரை அருகே வேலாயுதம் பாளையத்தை சேர்ந்த கிருஷ்ண பிரபா(19) என்ற பெண்ணை வட மதுரையில் பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்து காதலித்து வந்துள்ளார்.

    கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவரும் வெவ்வேறு பிரிவினர் என்பதால் பிரபா வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் அவருக்கு வேறு இடத்தில் திருமணம் முடிக்க மாப்பிள்ளையும் பார்த்தனர். இதனால் அவர் வீட்டைவிட்டு வெளியேறி வடமதுரை அருகே உள்ள ஒரு கோவிலில் தனது காதலரை திருமணம் செய்து கொண்டார்.

    தனது மகளை காணாமல் பல இடங்களில் தேடிப்பார்த்த அவரது பெற்றோர் பின்னர் இதுகுறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் தங்களை தேடிவருவதை அறிந்ததும் காதல் தம்பதி தங்களுக்கு பாதுகாப்பு வழங்கும்படி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் இருவரது பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது பிரபாவின் தாய் தன்னுடன் வீட்டிற்கு வருமாறு கதறி அழுதார். ஆனால் தான் காதலனுடன்தான் செல்வேன் என்று பிடிவாதமாக தாயின் வார்த்தையை கேட்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரத்தில் தனது மகளுக்கு சாபம் விடுத்து அவரது தாய் அங்கிருந்து கண்ணீருடன் சென்றுவிட்டார். இச்சம்பவத்தால் போலீஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    வடமதுரை போலீஸ் நிலையம் எப்போதுமே காதலர்களுக்கு அடைக்கலம் தரும் சரணாலயமாகவே இருந்து வருகிறது. கடந்த 21 நாட்களில் 70-க்கும் மேற்பட்ட காதல் தம்பதி இங்கு அடைக்கலம் வந்துள்ளனர். அவர்களை போலீசார் சமரசமாக பேசி பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர்.

    வடமதுரை சுற்றுவட்டார பகுதி மட்டுமின்றி மாவட்டத்தின் பல இடங்களில் இருந்தும் காதல் திருமணம் செய்து கொள்ளும் தம்பதி இங்குவந்து தங்கள் பிரச்சினையை தீர்த்துச்செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வடமதுரை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்தனர்.
    • ஒரே நாளில் அதிக அளவில் காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்ததால் போலீஸ் நிலையம் திருமண மண்டபம் போல் காட்சி அளித்தது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள ஒத்தநாவலபட்டியைச் சேர்ந்தவர் வெள்ளம்மாள் (வயது 20). அதே பகுதியைச் சேர்ந்தவர் குருமூர்த்தி (23). இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் காதலுக்கு இரு வீட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து கோவிலில் திருமணம் செய்து கொண்ட காதலர்கள் வடமதுரை போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

    வடமதுரை அருகே உள்ள கோப்பம்பட்டியைச் சேர்ந்தவர் சரண்யா (20). நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவரும் செட்டியபட்டி முள்ளிப்பாடியைச் சேர்ந்த ஈஸ்வரன் (22) என்பவரும் கடந்த 1 ஆண்டுக்கும் மேலாக காதலித்து வந்தனர்.

    நேற்று திருமலை க்கேணியில் திருமணம் செய்து கொண்ட இவர்கள் பாதுகாப்பு கேட்டு வடமதுரை போலீசில் தஞ்சமடைந்தனர்.

    எரியோடு மூக்கைய கவுண்டனூரைச் சேர்ந்தவர் நல்லேந்திரன் (வயது 20). ஜே.சி.பி. டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரும் தென்னம்பட்டி கணபதிபுரத்தைச் சேர்ந்த பி.காம் பட்டதாரியான தேவதர்சினி (20) என்பவரும் காதலித்து வந்தனர்.

    இவர்கள் காதலுக்கும் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

    வடமதுரை அருகே கோட்டைகட்டியூரை சேர்ந்தவர் சகுடீஸ்வரன் (வயது25). இவர் வேடசந்தூர் பகுதியில் உள்ள மில்லில் வேலை பார்த்து வருகிறார். அதே மில்லில் அய்யலூர் அருகே மாமரத்துப்பட்டியை சேர்ந்த ராதிகா (21) என்பவரும் பணிபுரிந்து வந்துள்ளார். இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இவர்கள் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டில் திருமணத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால் வீட்டை விட்டுவெளியேறிய காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டு வடமதுரை போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். போலீசார் இரு வீட்டாரரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    போலீசார் காதலர்களின் பெற்றோர்களை தனித்த னியாக வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் மேஜர் என்பதால் சேர்ந்து வாழ்வதற்கு எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என எழுதி வாங்கிக் கொண்டனர். பெரும்பாலான காதல் ஜோடிகள் போலீஸ் நிலையத்துக்கு வரும் போதே தங்களுக்கும் பெற்றோருக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்பதை பத்திரத்தில் எழுதிக் கொண்டு வந்து அதனை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    நேற்று முகூர்த்த நாள் என்பதால் 3 காதல் ஜோடிகள் அடுத்தடுத்து போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்ததால் போலீஸ் நிலையம் திருமண மண்டபம் போல காட்சியளித்தது.

    வடமதுரை பகுதியில் காதல்ஜோடிகள் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்து வருகின்றனர்

    வடமதுரை :

    வேடசந்தூர் அருகே தருமத்துப்பட்டியை சேர்ந்தவர் முருகன்(25). இவர் திண்டுக்கல்லில் உள்ள கல்லூரியில் லேப் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். திருச்சியை சேர்ந்தவர் பாப்பாத்தி(21). பி.ஏ. பட்டதாரி. தருமத்துப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வரும்போது முருகனுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டனர்.

    பின்னர் போன் மூலம் தங்கள் காதலை வளர்த்து வந்தனர். இவர்களது திருமணத்திற்கு இருவீட்டில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் வீட்டைவிட்டு வெளியேறிய காதல்ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் பாதுகாப்பு கேட்டு வடமதுரை அனைத்து மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர். போலீசார் இருவீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    ×