என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » காட்பாடி விபத்து
நீங்கள் தேடியது "காட்பாடி விபத்து"
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே ரெயில் மோதி டெய்லர் மற்றும் பெண் பரிதாபமாக இறந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
காட்பாடி அருகே உள்ள அரும்பகுதி திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் (42) டெய்லர். இன்று காலை அப்பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் அவர் மீது மோதியது. இதில் உடல் சிதறி சரவணன் இறந்தார்.
காட்பாடி ரெயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லத்தேரி ரெயில்வே கேட் அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ரெயிலில் அடிபட்டு படுகாயமடைந்தார். அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த பெண் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்பாடி அருகே உள்ள அரும்பகுதி திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் (42) டெய்லர். இன்று காலை அப்பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் அவர் மீது மோதியது. இதில் உடல் சிதறி சரவணன் இறந்தார்.
காட்பாடி ரெயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லத்தேரி ரெயில்வே கேட் அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ரெயிலில் அடிபட்டு படுகாயமடைந்தார். அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த பெண் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X